Yarl Forum
செயலகம் நோக்கி இன்று பேரணி! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: செயலகம் நோக்கி இன்று பேரணி! (/showthread.php?tid=4930)



செயலகம் நோக்கி இன்று பேரணி! - Vaanampaadi - 03-02-2005

பல்கலைக்கழக முன்றிலில் இருந்து
செயலகம் நோக்கி இன்று பேரணி!
பல்லாயிரக் கணக்கான மக்கள் அணி திரள்வர்
போரை ஓய்வுக்குக் கொண்டுவந்த புரிந் துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தபின்னரும் அதன் பயன்கள் தமிழ்மக்களுக்கு எட்டாமல் இருப் பதைச் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் மாபெரும் மக்கள் பேரணி இன்று யாழ்ப் பாணத்தில் நடைபெறுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக முன்றிலில் இருந்து முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாக வுள்ள இந்தப் பேரணி, அங்கிருந்து நகர்ந்து யாழ். அரச செயலகம் வரை செல்லும்.
குடாநாட்டின் நாற்திசைகளிலும் இருந்தும் பேரணியில் கலந்துகொள்ள வருவோர் குறிக் கப்பட்ட உப வீதிகளூடாக வந்து பிரதான பேர ணியுடன் இணைந்துகொள்வர்.
இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் அனைத் தும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகப் பொது அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக் கள் அணிதிரள்வர் என்று எதிர்பார்க்கப்படு வதால் அவர்கள் பேரணி முடிந்ததும் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வாகன வசதி கள் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக் களின் ஒன்றியம் தெரிவிக்கிறது.
பல்கலைக்கழக முன்றிலில் ஆரம்பமாகும் பேரணி அங்கிருந்து பலாலி வீதி வழியாகக் கந்தர் மடம் சந்திக்கு வரும். பின்னர் அங்கி ருந்து அரசடி வீதி ஊடாக நல்லூர் பின் வீதியை அடைந்து கோவில் வீதியூடாக நகரும். அப் போது நல்லூரில் அமைந்திருக்கும் அகதிக ளுக்கான ஐ.நா.தூதரகத்தின் வதிவிடப் பிரதி நிதியிடம் மகஜர் கையளிக்கப்படும். தொடந்து கோவில் வீதிவழியே செல்லும் பேரணி அந்த வீதியில் உள்ள போர் நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் அலுவலகத்தில் தரிக்கும். பேரணி ஏற்பாட்டாளர்களால் அங்கு வைத்து கண்கா ணிப்புக் குழுவின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒப் படைக்கப்படும். பேரணி செல்லும் வழியில் செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் பணிமனையிலும் மகஜர் கையளிக்க ஏற்பாடாகி உள்ளது.
இறுதியாகப் பேரணி யாழ்.அரச செயல கத்தை அடைந்ததும் அரசுக்கான மகஜர் அங்கு வைத்து அரச அதிபரிடம் கையளிக்கப்படும். பேர ணியில் கலந்துகொண்டோர் சார்பில் கோரிக் கைகளை விளக்கும் பேரணிப் பிரகட னம் அங்கு வாசிக்கப்படும்.
இன்றைய பேரணியில் சகலதரப்பினரை யும் பங்கு கொள்ளுமாறு பொது அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண வர் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் விடு விக்கப்பட்டிருக்கின்றன.
பேரணி நடைபெறும் வேளையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும். வர்த்த கர்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொள்வர் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித் திருக்கின்றன.
பொதுப் போக்குவரத்து சேவைகள் வழ மைபோல இடம்பெறும். பேரணியில் கலந்து கொள்வோர் நலன் கருதி விசேடவாகன சேவைகளும் இடம்பெறும்.

உதயன்