![]() |
|
கவிதை எழுதுவது எப்படி...? ? ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதை எழுதுவது எப்படி...? ? ? (/showthread.php?tid=4786) Pages:
1
2
|
கவிதை எழுதுவது எப்படி...? ? ? - shanmuhi - 03-12-2005 [b]கவிதை எழுதுவது எப்படி...? ? ? கவிதை எழுதுவதில் புலமை பெற்ற வித்தகர்கள் இதற்கு விடை தருவார்களா...? பலருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். கூடவே எழுத முடியாத நிலையும் இருக்கும். இதற்கு ஆலோசனைகள் கருத்துக்கள் கூறுவதன் மூலம் பல கவிஞர்களை எம் மத்தியில் உருவாக்க முடியும் அல்லவா... - tamilini - 03-12-2005 நல்ல விடயம்.. உங்கள மாதிரி சீனியர்ஸ் தான் அக்கா விளக்கம் கொடுக்கனும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 03-13-2005 நல்ல கவிதைப்புத்தகம் வாங்கங்கோ பாத்து எழுதங்கோ சரி தானே :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - hari - 03-13-2005 sinnappu Wrote:நல்ல கவிதைப்புத்தகம் வாங்கங்கோ பாத்து எழுதங்கோ சரி தானேஅதைத்தானே இவ்வளவு காலமாக செய்து கொண்டிருக்கிறன்,
Re: கவிதை எழுதுவது எப்படி...? ? ? - ratha - 03-13-2005 shanmuhi Wrote:[b]கவிதை எழுதுவது எப்படி...? ? ?வாழ்த்துக்கள் சண்முகியக்கா. தமிழினி கொன்னது போன்று உங்களைப்போன்றவர்கள் கவிதை வகுப்பு தர வேண்டும். - vasisutha - 03-13-2005 கவிதை எழுதத் தெரியாதா? நான் சொல்லித்தாறன்... க...வி...தை இப்படித்தான் எழுதுவது.. :evil: - shanmuhi - 03-13-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-13-2005 Quote:கவிதை எழுதத் தெரியாதா?வசி அண்ணா மாதிரி அறிஞர்கள் இருக்கும் போது நமக்கு என்ன கவலை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - yalie - 03-14-2005 கவிதைக்குப் பொய் அழகு என்கின்றார்கள்! ஆனால் வார்த்தை ஜாலங்களை விட உள்ளத்து ஓலங்களையும் உண்மையான உணர்வின் வேகங்களையும் கோர்க்கும் போதே யதார்த்தமான கவிதை பிறக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து! அவை தான் வாழும் கவிதைகள்! உணர்வுகளைத் தாளில் கொட்ட கொஞ்சம் தமிழ் தெரிந்தால் காணும் தானே!! - Mathuran - 03-14-2005 yalie Wrote:கவிதைக்குப் பொய் அழகு என்கின்றார்கள்! ஆனால் வார்த்தை ஜாலங்களை விட உள்ளத்து ஓலங்களையும் உண்மையான உணர்வின் வேகங்களையும் கோர்க்கும் போதே யதார்த்தமான கவிதை பிறக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து! அவை தான் வாழும் கவிதைகள்! உணர்வுகளைத் தாளில் கொட்ட கொஞ்சம் தமிழ் தெரிந்தால் காணும் தானே!! முயற்சியே செய்யாமல் இருப்பதை விட, முயன்று தோற்றால்க் கூட நன்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 03-14-2005 எனக்கும் தெரியாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 03-14-2005 கவிதன் என்ன உங்களுக்கும் தெரியாது? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-14-2005 கவிதை எழுத தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 03-14-2005 கவிதனுக்கே கவிதை புனைந்திடத் தெரியாதென்றால் எனி, கவிதனை யார்தான் புனைவார்கள்? - yalie - 03-14-2005 மதுரன் எழுதியது--கவிதனுக்கே கவிதை புனைந்திடத் தெரியாதென்றால் எனிஇ கவிதனை யார்தான் புனைவார்கள்? என்ன மதுரன் சிலேடை (அப்பிடித்தானே?) நல்லா இருக்குது! நீங்களே கவிதை எழுதலாமே!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 03-19-2005 yalie Wrote:மதுரன் எழுதியது--கவிதனுக்கே கவிதை அது யாழி அக்கா.... இப்படி தான் சும்மா எழுதி பாக்கிறது தானே யாரன் பேசுவினம் தான் அதுக்காக நாங்கள் எழுதுறதை பிடிக்கிறவை படிக்க வேண்டியது இல்லாட்டி திட்டீட்டு போவினம்.. அதுக்காக நாம் எல்லாம் வைரமுத்து மாதிரி எழுத முடியுமா என்ன... ஏதோ நமக்கு தெரிந்த படி மனதில் தோன்றுகிறபடி எழுதுகிறோம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kirubans - 03-19-2005 பசுவையாவின் (சுந்தர ராமசாமி) கவிதை ஒன்று. <b>உன் கவிதையை நீ எழுது</b> உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளார்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமாலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது எழுது உன் கவிதையை நீ எழுது அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு. - kavithan - 03-19-2005 [quote=kirubans]பசுவையாவின் (சுந்தர ராமசாமி) கவிதை ஒன்று. <b>உன் கவிதையை நீ எழுது</b> உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளார்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமாலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது எழுது உன் கவிதையை நீ எழுது அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு. நல்ல ஒரு விடையத்தை போட்டிருக்கிறீர்கள் கிருபன் அண்ணா... இப்படி தான் நானும் சும்மா கிறுக்கிறனான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 05-16-2005 [size=20]நீங்களும் கவிஞராகலாம்! யாப்பின் அடிப்படை பண்டிதர் .ச.வே.பஞ்சாட்சரம் ஒன்றுக்கொன்று சமனான ஓசை அளவுடைய இரண்டு அடிகள் கூடக் கவிதை என்றே அழைக்கப்படும். இரட்டை நான்கு அடிகள் கொண்ட விருத்தக் கவிதைகளும்., அடியளவில் மேலும் நீளும் அகவற்பா, கலிப்பா, பஃறொடை வெண்பா, வஞ்சிப்பா முதலியனவும் உண்டு. இக் கவிதைகள் எதுகை, மோனை இலட்சணங்கள் சரி வர அமைந்திருக்க வேண்டியது அடுத்த முக்கிய அம்சம். இந்த எதுகை, மோனைகள் கவிதைகளுக்கு இலக்கணங்கள் என்பதைவிட - இன்றியமையாத இலட்சணங்கள் - அழகுகள் என்பதே பொருத்தமானது. ஆனால் இன்று பத்திரிகைகளில் வெளிவருங் கவிதைகளில் இவ்விலட்சணங்கள் அமைந்தவை மிக அபூர்வம். கவிதைகள் "செவிநுகர் கனிகள்" என வர்ணிக்கப்படுவதற்கு ஓசை ஒழுங்கும் எதுகை மோனை இலட்சணங்களுமே காரணம். இதனை, இத்தகைய மரபுக் கவிதைகளையும். இவற்றைப் பற்றி கவலையே இன்றி அமைந்த புதுக்கவிதைகளையும் கவியரங்குகளில் காதாரக் கேட்ட இரசிகர்கள் ஒப்புக்கொள்வர். எனவே கவிதைக்கு உயிர்நாடியாகிய திட்டமிட்ட ஓசை ஒழுங்கு, இன்றியமையாத அழகுகளான எதுகை, மோனை இம்மூன்றும் அடிப்படை அம்சங்களாகும். இம் மூன்றையும் சரிவரப்புரிந்து கொண்டவர் நல்ல சிந்தனைத் தெளிவும் உணர்ச்சி வேகமும் மிக்கவராயின் சிறந்த கவிதைகளை நிச்சயம் அவர் பாடித்தள்ள முடியும். <b>எதுகைத் தொடைகள்:</b> கவிதையின் ஒவ்வோர் அடியினதும் முதற்சீரின் இரண்டாவது எழுத்து ஒத்தமைதல் எதுகை எனப்படும். <img src='http://www.yarl.com/forum/files/2.gif' border='0' alt='user posted image'> <b>அவதானிக்குக: </b> 1. ஒவ்வொரு கூட்டிலுமுள்ள நான்கு சொற்களும் ஒவ்வொருபாட்டு நாலடிகளின் முதற்சீர்கள். இந்த நான்கு சீர்களினதும் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றாக ஒத்தனவாக இருப்பதை அவதானிக்கவும். இத்தொடைகள் எதுகைகள் எனப்படும். 2. இந்த முதல் சீரின் முதல் எழுத்துக்கள் யாவும் குறில்களாக -அல்லது நெடில்களாகக் கட்டாயமாக அமைந்திருத்தல் காண்க. இதைவிட்டு, குறில்களும் நெடில்களும் அடித்தொடக்க சீர்களின் முதலெழுத்துக்களாக ஒரு போதும் கலந்து வருவதில்லை. 3. இந்த எதுகைச் சீர்களின் 2ஆம் எழுத்துக்கள், ஒன்றில் ஒரே மெய்களாக, அல்லது ஒரே உயிர்மெய்குறிற் கூட்டமாகவோ, நெடிற்கூட்டமாகவோ மட்டும் அமைந்திருப்பதை அவதானிக்குக. 4. கவிதை எதுகை மோனைகளைப் பொறுத்த மட்டில் சை, கை, டை முதலிய ஜகாரங்கள் அனைத்தும் குறில்களே - மூன்றாம் கூட்டை அவதானித்தறிக. <b>மோனைத் தொடைகள் </b> ஒவ்வோர் அடியின் தொடக்க சீரின் முதல் எழுத்துடன் அவ்வடியின் மறுபாதியின் முதல் சீரின் முதலாம் எழுத்து ஒத்து வந்து மோனைத்தொடை அமைதல் இலட்சணம் - குறைந்தபட்சம் அவ்வடியின் அவ்வடியின் வேறேதாவது ஒரு சீரின் முதலெழுத்தாவது ஒத்து வருதல் அவசியம். உ+ம்: படுக்கும் போது மேற்கினிலே படியுந் தலைகள் காலையிலே கிடக்கும் மாறிக் கீழ்த்திசையில்! கிளர்ந்து பள்ளி எழுவீரே! ஒரு பாட்டின் அடிகள் ஓசை அளவு ஒத்து அமையுமாயின் ஏனைய கவிதை இலக்கணங்களான சீர் அலகுகள், அவ்வலகுகள் சந்திக்கும் தளைகள் யாவும் பிசகின்றித் தானாகச் சரியாக அமைந்துவிடும். <b> மூன்று மோனைக் குடும்பங்கள்</b> <img src='http://www.yarl.com/forum/files/3.gif' border='0' alt='user posted image'> நன்றி கவிதன் - kavithan - 05-16-2005 அக்கா சுட்டதை ஒழுங்கா சுட தெரியாத ஆ.. அரைகுறையா சுட்டால் எழுதுறவை அரைகுறையாயா பழகுறது ஆ.. இந்த இணைப்பில் வடிவாக வாசிக்கலாம் வாசியுங்கள்.... http://kavithan.yarl.net/archives/003042.php |