![]() |
|
மானமே! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மானமே! (/showthread.php?tid=44) |
மானமே! - வர்ணன் - 04-27-2006 <b> செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! 8) </b> - கந்தப்பு - 04-27-2006 யாரவது நடிகைகளின் நாய்க்குட்டி செத்தால் கவலைப்படும் கேடு கெட்ட மனிதர்கள் சொந்த சகோதரங்கள் ஈழத்தில் சாகும்போது கவலைப்படமால் பேசமால் இருக்கிறார்கள் - shanmuhi - 04-27-2006 Quote:ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் ¯½÷Å¢¨É ¾ðÊ ±ØôÒõ ¸Å¢¨¾. - valvaizagara - 04-29-2006 செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! :roll: வர்ணன் ஈழத்து உணர்வோடு உலவும் உறவுகளை இணையத்தில் தரிசிக்க வைக்கும் யாழ் இணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இக்கணத்தில் உங்கள் கவிச்சிதறல் தமிழரை விழிக்க வைக்க தொடர்ந்தும் வீரியம் ஏந்தி உலா வரட்டும். தானாடா விட்டாலும் தசையாடும் என்பார்கள் சமுத்திரம் கடந்ததனால் சதை செத்துப்போயிற்றோ? வல்வை சகாறா. - RaMa - 04-29-2006 அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? வர்ணன் மீண்டும் கருத்து மிக்க வரிகளுடன் வந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். |