Yarl Forum
உதிர்ந்த வார்த்தைகளால் உரைத்தது என்ன...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உதிர்ந்த வார்த்தைகளால் உரைத்தது என்ன...?! (/showthread.php?tid=4239)



உதிர்ந்த வார்த்தைகளால் உரைத்தது என்ன...?! - kuruvikal - 05-21-2005

<img src='http://img283.echo.cx/img283/6348/rose9am.jpg' border='0' alt='user posted image'>

<b>உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!</b>


- kavithan - 05-21-2005

ஊஉ.ஊஉ.. என்று
ஊதித் தள்ளிய
"உ" க் கவிதை
ஊர் குருவியின்
உள்ளத்தை சொல்கிறது- பாவம்
உண்மை அன்பு தேடி
உள்ள மலரை
உள் மனதில் வைத்து
ஊடல் செய்கிறது.

வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-21-2005

குருவிகளின் கவிதைக்கு வாழ்த்துக்கள்..............


- வெண்ணிலா - 05-21-2005

உவமை மலருக்கு
உள்ளக்கிடக்கையை
உன்னதமாக
உரைத்த
உண்மைக் குருவிக்கு
உங்கள் சுட்டித்தங்கையின்
உளங்கனிந்த வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 05-21-2005

எல்லாம் ஒரு கற்பனைதான்... வாழ்த்துக்கு நன்றிகள்..! :wink:


- poonai_kuddy - 05-21-2005

உண்மயப் பற்றி பொய்யாண்ணா வாழ்த்துக்கள் உண்மைல எனக்கொண்டும் விளங்கல :?


- வெண்ணிலா - 05-21-2005

poonai_kuddy Wrote:உண்மயப் பற்றி பொய்யாண்ணா வாழ்த்துக்கள் உண்மைல எனக்கொண்டும் விளங்கல :?


<img src='http://img155.echo.cx/img155/8082/puunaikkuddi0ud.gif' border='0' alt='user posted image'>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-21-2005

மலர் வாட்டும் குருவி அண்ணாவின் உள்ளம் தங்கைக்கு நன்கு புரிகிறது....மலர் வசந்தம் வீசிடும் நாள் வந்திடும் இன்றே....வாழ்த்துக்கள் அண்ணாவிற்கு :wink: :wink:


- tamilini - 05-21-2005

நல்லாய் இருக்கு குறூவீஸ் கவிதை.. சே.. நம்மட கண்ணில படவே இல்லை.. :x :?


- kavithan - 05-21-2005

tamilini Wrote:நல்லாய் இருக்கு குறூவீஸ் கவிதை.. சே.. நம்மட கண்ணில படவே இல்லை.. :x :?

கண் இருந்தால் தானே பட.. அல்லா கல்லா எறிஞ்சுது குருவி ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-21-2005

:evil: :wink:


- kavithan - 05-21-2005

என்ன ஆ.. படம் போட்டுட்டு நிக்கிறியள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-21-2005

ஏன் நல்லாய் இல்லையா.. தம்பியாரே..?? :wink:


- kavithan - 05-21-2005

நீங்கள் எதை சொல்லுறியள் .. நான் உக்களை சொன்னேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-21-2005

நாங்க என்ன படம் போட்டம்.. மிண்டிற மாதிரிக்கிடக்கு.. :evil: :mrgreen:


- Mathan - 05-21-2005

கவிதன் புதிதாக குடிலில் இணைத்த கவிதை நன்றாக இருந்தது, அதை களத்தில் இணைக்கலாமே. நான் சுட்டு சுட்ட கவிதையில் போடலாமோ என்றூ பார்த்தேன்


- kavithan - 05-21-2005

tamilini Wrote:நாங்க என்ன படம் போட்டம்.. மிண்டிற மாதிரிக்கிடக்கு.. :evil: :mrgreen:
யாரோடை மிண்டுறது ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-22-2005

Mathan Wrote:கவிதன் புதிதாக குடிலில் இணைத்த கவிதை நன்றாக இருந்தது, அதை களத்தில் இணைக்கலாமே. நான் சுட்டு சுட்ட கவிதையில் போடலாமோ என்றூ பார்த்தேன்


நல்லகாலம் சுடவில்லை. பூ வாங்கியதற்கே தண்டனை என்று சொல்லியிருக்கிறார். நீங்க சுட்டால் அப்புறம் உங்களுக்கு சூடு தான் . <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 05-24-2005

Quote:உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம்
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...