Yarl Forum
பெண்ணழகு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணழகு (/showthread.php?tid=4194)



பெண்ணழகு - சாமி - 05-28-2005

கணவன் இறந்த துக்கத்தில் இளம் மனைவி கண்ணீர் வடித்துக் கொண்டு, திருவான்மியூர் கல்லறைத் தலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். அவர்கள் ஜாதியில் கணவன் சவ அடக்கத்துக்கு மனைவி வரலாம்.

மனைவியை ஒரு நடுத்தர வயது ஆடவன் - செல்வந்தன் மெல்ல மரியாதையுடன் அணுகி, "உங்கள் கணவன் இறந்ததற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் இந்த நிமிஷம்கூட எனக்கு அழகு தேவதையாகத் தெரிகிறீர்கள். இப்போதே தங்களை மணக்க நான் தயார்" என்றான்.

இதைக் கேட்ட மனைவி கோபத்தில் சீறினாள். "ஏன்யா! இதுவா சமயம், இதைப் பற்றிப் பேசுவதற்கு? போங்கள், என் கண்முன்னே நிற்காதீர்கள்" என்றாள்.

கனவான், "மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் வனப்பு உங்கள் துக்கத்தையும் கடந்து என்னைக் கவர்ந்துவிட்டது" என்றான்.

அதற்கு, அந்த இளம் விதவை, "இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே! நான் அழாமல் இருக்கும்¢போது நீங்கள் பார்த்திருக்கவேண்டும்" என்றாள்.

நீதி : - எந்த சமயத்திலும் ஓர் அழகான பெண், தான் அழகானவள் என்பதை மறக்க மாட்டாள்.

நன்றி: அம்பலம்