Yarl Forum
காரணம் தான் என்ன கண்ணீருக்கு...??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காரணம் தான் என்ன கண்ணீருக்கு...??! (/showthread.php?tid=4088)



காரணம் தான் என்ன கண்ணீருக்கு...??! - kuruvikal - 06-13-2005

<img src='http://img35.echo.cx/img35/9532/birds213vi.jpg' border='0' alt='user posted image'>

<b>காக்கை ஒன்று குயிலிடம்
கா கா என்றது
காரணம் புரியாமல்
கானக் குயிலும் பதிலுக்கு
கானமிசைக்குது
காரணமறியா காக்கையும் முழிக்க
கானக் குயிலோ தொடருது கீதம்
கானகத்து வசந்தம்
காரணமாக்கும் என்று
காத்திருந்த குருவி
காடேகித் தேடுது உறவுகளை
காக்கையும் குயிலும் கிளைதனில்
காலத்தால் பகை மறந்து
கான சபை நடத்தும்
காட்சியது கண்கொள்ளா இன்பமாக
காலத்தால் ஏங்கிய கனவு
காட்சியாய் நனவாய்
காவியமாகும் என்று குருவி எண்ண
காலம் கணத்திலொரு கதை மாற்றுது
காத்திருந்து கறுவிய காகம்
கால் கிளப்பிப் பறக்குது
கானக் குயில் தானும்
கால் பதறிப் பறக்குது
கானகம் எங்கும்
காற்றில் ஒரு யுத்தம்
கா காவும் கூ கூவும்
காயங்கள் பட மாறுது சுருதி
கானகம் எங்கும் சிந்துது குருதி
காரணம் கேட்டால்
காக்கையின் கூட்டுக்குள்
கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி
காக்கையும் அறியாமல்
காரணம் முடித்தது தப்பாம்
கானகத்து வழக்கோடு
காலாறக் கொஞ்சம் வரப்பேக
காதில் விழுகுது சேதி
காக்கையோ குயிலோ
காரியமில்ல
கானகமேகா மனிதனும்
காரணமின்றிச் சிந்துறான் குருதி
காணி நிலத்துக்கு தானே சொந்தம் என்று
கார்காலம் காணுது கண்கள் - அங்கு
காரணம் புரியாமலே...!!!!!</b>

(சிந்தித்த சிலவரிகளைச் சிலாகிக்கிறோம் சிந்திக்க...!)


- Thala - 06-13-2005

மிகவும் நன்றாக இருக்கு குருவிகள். சிந்திக்க மட்டும் இல்லை பளய சம்பவங்களை அசை போடவும் வைக்கிறது. .,,,,,,, நன்றி


- kuruvikal - 06-13-2005

நன்றி தல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 06-13-2005

கா கவிதை வடித்த குருவியண்ணாக்கு வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-13-2005

வாழ்த்துக்கள் குருவி அண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-13-2005

<img src='http://img35.echo.cx/img35/9532/birds213vi.jpg' border='0' alt='user posted image'>
அழகான குருவியும் அழகான கவிதையும் வாழ்த்துக்கள் குருவிகளே. :wink:


- Mathan - 06-13-2005

காதல் களத்தில் கண்ணீர் வேண்டாம் அது மழைசாரலாக இருக்கட்டும்


- kuruvikal - 06-13-2005

சுட்டித் தங்கை வெண்ணிலா.. மழலைத் தங்கை... மற்றும் தமிழினிக்கு வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-13-2005

Mathan Wrote:காதல் களத்தில் கண்ணீர் வேண்டாம் அது மழைசாரலாக இருக்கட்டும்

இது காதல் களக் கண்ணீர் அல்ல மதன் வாழ்கைக் களக் கண்ணீர்... இருந்தாலும் உங்கள் கருசணைக்கும் ஆறுதலுக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 06-13-2005

வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ilakkiya - 06-13-2005

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துகள் :!: :!:


- shanmuhi - 06-13-2005

Quote:கானகம் எங்கும்
காற்றில் ஒரு யுத்தம்
கா காவும் கூ கூவும்
காயங்கள் பட மாறுது சுருதி
கானகம் எங்கும் சிந்துது குருதி
காரணம் கேட்டால்
காக்கையின் கூட்டுக்குள்
கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி
காற்றில் ஒரு யுத்தம் எப்படி என்று அழகாக உவமித்து எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்....


- Niththila - 06-14-2005

கவிதை நல்லாயிருக்கு அண்ணா