Yarl Forum
இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் (/showthread.php?tid=397)



இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் - I.V.Sasi - 03-31-2006

இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப்

[வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<img src='http://img513.imageshack.us/img513/531/musharraf200603319du.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம்.

சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ச.

இரு நாடுகளிடையேயான பொருண்மிய மற்றும் இதர ஒத்துழைப்பினூடாக அரசியல் உறவு மேலும் வலுப்படும். பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு சர்வதேச அளவில் தடுக்கப்பட்டு பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும்.

சிறிலங்கா இராணுவத்தில் என்னோடு பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களை பல்வேறு நிலைகளில் நான் பார்த்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு உயரிய மதிப்பு உண்டு. சிறிலங்கா இராணுவம் ஒழுக்கமான கட்டமைப்பு கொண்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.


நன்றி:புதினம்


- Selvamuthu - 03-31-2006

இராணுவப் புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு சர்வாதிகாரிபோல் ஆட்சியை நடாத்திக்கொண்டு பயங்கரவாதம், ஜனநாயகம், சிறிலங்கா இரணுவத்தின் ஒழுக்கமான கட்டமைப்பு பற்றிப் பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

இவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்கலாம், ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத இவரின் அறிவுரை யாருக்கு வேண்டும்? அறிவுரையா இது? யாருக்கோ வக்காலத்து வாங்குவதுபோல் இருக்கிறது.


Re: இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் - jeya - 03-31-2006

<!--QuoteBegin-I.V.Sasi+-->QUOTE(I.V.Sasi)<!--QuoteEBegin-->இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப்

[வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்]  
<img src='http://img513.imageshack.us/img513/531/musharraf200603319du.jpg' border='0' alt='user posted image'>





சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் <span style='font-size:25pt;line-height:100%'>சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம்.</span>சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ச.  

இரு நாடுகளிடையேயான பொருண்மிய மற்றும் இதர ஒத்துழைப்பினூடாக அரசியல் உறவு மேலும் வலுப்படும். <span style='font-size:30pt;line-height:100%'>பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு சர்வதேச அளவில் தடுக்கப்பட்டு பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும்.</span>
:twisted:  :twisted:  
சிறிலங்கா இராணுவத்தில் என்னோடு பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.

 
நன்றி:புதினம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


Re: இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் - வியாசன் - 03-31-2006

<!--QuoteBegin-jeya+-->QUOTE(jeya)<!--QuoteEBegin--><!--QuoteBegin-I.V.Sasi+--><div class='quotetop'>QUOTE(I.V.Sasi)<!--QuoteEBegin-->இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப்

[வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்]  
<img src='http://img513.imageshack.us/img513/531/musharraf200603319du.jpg' border='0' alt='user posted image'>





சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் <span style='font-size:25pt;line-height:100%'>சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம்.</span>சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ச.  

இரு நாடுகளிடையேயான பொருண்மிய மற்றும் இதர ஒத்துழைப்பினூடாக அரசியல் உறவு மேலும் வலுப்படும். <span style='font-size:30pt;line-height:100%'>பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு சர்வதேச அளவில் தடுக்கப்பட்டு பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும்.</span>
:twisted:  :twisted:  
சிறிலங்கா இராணுவத்தில் என்னோடு பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.

 
நன்றி:புதினம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் ஆதரிக்கிறோம்.

.[/color] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.
அடக்கப்பட்ட ஒரு இனம் தன்விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவேண்டும் இந்த கடமை அந்த இனத்துக்கு உண்டு
இவை முசாரப்பு சொல்லமறந்தவை


- சுடர் - 04-05-2006

திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் செவ்வியின் பிரதிபலிப்பாகவே இதைக் கருத முடியும். இலங்கையில் தீவிரவாதத்தை காலூன்ற வைக்கும் பாகிஸ்தான் இதைப்பற்றிபேசுவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல் உள்ளது.


- KING ELLALAN - 04-05-2006

இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும்.

ஒ.........மானிடா......பார்.....இந்த முட்டாள் முஸ்ரப்பை தனக்கு ஒர் நியாயம் மற்றவருக்கெனறால் வேறொர் நியாயம் பிளக்கிறான்.


- karu - 04-05-2006

இந்தியா இதவரை சொல்லி இருக்கிறதவிட ஒண்டும் பெரிசா பாகிஸ்தான் சொல்லல்ல. ஒரு நட்பு நாட்டு அரச தலைவருடைய விஜயத்தில பிரிவினை வாதத்தை ஏற்கிறோம் இறையாண்மையை மறுக்கிறோம் எண்டு கருத்துச் சொல்ல ஏலாது. ஆனா யதார்த்த நிலைமை எண்டிறது வேற பாருங்கோ. கிட்த்தட்ட இருபத்தது மூண்டு வருசமாச் செய்யாதத பாகிஸதான் வந்து இப்ப செய்யப்போகுதெண்டு ஆரும் புூச்சாண்டி காட்டினா மருண்டு போகாதையுங்கோ. காலமும் சரித்திரமும் சரியான பாதையிலதான் போகும். இப்ப போகவேண்டிய இடத்த நோக்கி பயணம் வெளிக்கிட்டு முக்காலவாசிக்கு மேல கடந்தாச்சிது. இனி வாற வில்கண்டங்கள் அவ்வளவு பெரிசா இராது. சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதையுங்கோ


- aathipan - 04-05-2006

முஸ்ரப் இதில் தனது சொந்த கருத்தைச்;சொல்லவில்லை. தன் எஜமான் அமெரிக்கா எதை சொல்லுமோ அதையே தானும் சொல்லி நல்ல பெயர் எடுக்க முனைந்துள்ளது அவ்வளவுதான்.


- rock boy - 04-05-2006

ஒரு பழமொழி என் ஞாபகத்துக்கு வருகிறது........
*******************************
***********************************



*******நீக்கப்பட்டுள்ளது-இராவணன்


- karu - 04-05-2006

இத்தகைய அணுகுமுறைகளே நம் இலட்சியத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போதுமானவை. இன்று இந்தப் பழமொழி நாளை ....பான் என்று பிரதேசவாதம் மறுநாள் பக்கத்து}ரோடு பகைமை என்று விரியும் மனித இயல்புகள் பயன்தரமாட்டா என்றே எண்ணுகிறேன். யாரோ ஒரு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பேச்சுக்காக உணர்ச்சி வசப்படுவதம் பக்கத்து வீட்டுச் சகோதரனைப் பழிப்பதும் நிறுத்தப்படவேண்டும். அல்லாவிடில் இந்தக்களத்தில் தொடர்ந்து பங்களிப்பைத்தர விரும்பும் பலர் விரக்தியடையவே இது வழிவகுக்கும்.


- KING ELLALAN - 04-06-2006

karu Wrote:இத்தகைய அணுகுமுறைகளே நம் இலட்சியத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போதுமானவை. இன்று இந்தப் பழமொழி நாளை ....பான் என்று பிரதேசவாதம் மறுநாள் பக்கத்து}ரோடு பகைமை என்று விரியும் மனித இயல்புகள் பயன்தரமாட்டா என்றே எண்ணுகிறேன். யாரோ ஒரு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பேச்சுக்காக உணர்ச்சி வசப்படுவதம் பக்கத்து வீட்டுச் சகோதரனைப் பழிப்பதும் நிறுத்தப்படவேண்டும். அல்லாவிடில் இந்தக்களத்தில் தொடர்ந்து பங்களிப்பைத்தர விரும்பும் பலர் விரக்தியடையவே இது வழிவகுக்கும்.

COOL MAN.....DON'T BE SO...NERVOUS MAN <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- rock boy - 04-06-2006

மனதை புண்படுத்திய வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி நண்பரே..........
துரோகங்களுக்கு அவர்கள் மன்னிப்பு
கேட்பார்களா


.


- karu - 04-06-2006

எவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எதிர்பாhக்கிறீர்கள். ஒரு முழுச் சமூகத்தையுமா அல்லது நீங்கள் குறிப்பிடப் போகும் யாரையுமா? நான் இங்கே குறிப்பிட்டது ஒரு முழுச்சமூகமும் முகம் சுழிக்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்பதையே. நல்லது. நீங்கள் மன்னிப்புக்கேட்ட பெருந்தன்மைக்குத் தலைவணங்குகிறேன். ஆனால் நான் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவனல்ல. ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இந்தக்களத்தில் நானாவது இந்த விடயத்தைக் கண்டிக்காது இருந்திருந்தால் நம்மைப் பற்றி நமது அந்தச் சகோதரர்கள் என்ன நினைப்பார்கள்? நாம் எந்த முகத்தோடு ஐக்கியம் தேசியம் என்பனபற்றிப் பேசுவது? இதை இத்தோடு நாம் நிறுத்திக் கொள்ளுவோம். தங்கள் மனம் புண்பட நானும் எதையாவது எழுதியிருந்தால் மன்னிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.