![]() |
|
திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி வீரச்சாவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி வீரச்சாவு (/showthread.php?tid=3945) Pages:
1
2
|
திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி வீரச்சாவு - Sriramanan - 07-10-2005 திருகோணமலையில் இன்று இடம்பெற்றுள்ள தாக்குதல் ஒன்றில் திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி டிக்கான் உட்பட இருபோராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக சங்கதி செய்திவெளியிட்டுள்ளது: மேலதிக விபரத்தைப் படிக்க: http://www.sankathi.net/index.php?option=c...=1529&Itemid=41 - அருவி - 07-10-2005 நன்றி சிறீறமணன். இச்செய்தி அறிந்து அதிர்வடைந்தேன் இன்னும் எவ்வளவு நாளைக்கெண்டு பார்ப்போம் - Nitharsan - 07-10-2005 வீரமரணமடைந்த போராளிகளுக்கு எனது வீர வணக்கம்! விரைவாய் செய்திதனைத்தந்த சங்கதிக்கும் அதை சூடாக யாழுக்கு தந்த ரமணனுக்கும் நன்றிகள் - adsharan - 07-10-2005 [quote="Nitharsan"]வீரமரணமடைந்த போராளிகளுக்கு எனது வீர வணக்கம்! ரமணனுக்கும் நன்றிகள் - kuruvikal - 07-10-2005 தாக்குதலை இராணுவமே நடத்தி இருக்குப் போல...கருணா குழு சாட்டு...! - Thala - 07-10-2005 புலிகளின் காலக்கெடுவுக்கு ஒரு சீண்டுதல். விளைவுகளை அறிந்து கொள்ளுற ஆவலாககூட இருக்கலம். எது எப்படி எண்டாலும் இக்கட்டில மாட்டினது கண்காணிப்பு(us) குழுவும் அனுசரனையாளரும்(EU) தான். அவர்களின் ஏக போக கனவுகள் சமாதியாகிற நாள்கள் எண்ணப்படுகின்றன.... - hari - 07-10-2005 வீரமரணமடைந்த போராளிகளுக்கு எனது வீர வணக்கம்! - அனிதா - 07-10-2005 தகவலுக்கு நன்றி Sriramanan அண்ணா. - Vishnu - 07-10-2005 நானும் இந்த செய்தியை பார்த்தேன்... :roll: :roll:
- Vaanampaadi - 07-10-2005 திருமலை உப்புவெளியில் தாக்குதல்: 2 விடுதலைப் புலிகள் உட்பட நால்வர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2005, 16:24 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலை உப்புவெளியிலுள்ள விடுதலைப் புலிகளின் பண்ணையொன்றின் மீது இன்று முற்பகல் ஆயுதக் கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலில் 2 போராளிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். முற்பகல் 10.45 மணியளவில் வானொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் கும்பலொன்று முதலில் 2 கைக்குண்டுகளை வீசிய பின்பு துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக இந்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது. <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710007.JPG' border='0' alt='user posted image'> அந்தப் பகுதியில் வழமையான கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அந்த இடத்திலிருந்து அகன்று சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இது பற்றி மேலும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து உப்புவெளிப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710008.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710009.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710010.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710011.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710012.JPG' border='0' alt='user posted image'> Puthinam - eelapirean - 07-10-2005 வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீர வணக்கம்! - வியாசன் - 07-10-2005 அறுவடைக்கான காலம் ஆரம்பமாகப்போகுது போலை. வித்தான போராளிகளுக்கு வீரவணக்கங்கள் - hari - 07-10-2005 இந்த நாய்களின் குணம் தெரிஞ்சும் ஏன் புலிகள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள்? - hari - 07-10-2005 <b>போராளிகளின் வித்துடல் விதைக்கப்படும் வரை திருமலையில் பூரண கதவடைப்புப் போராட்டம்!</b> திருகோணமலையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்படும் வரை திருகோணமலை தலைநகரில் பூரண கதவடைப்புப் போராட்டம் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. திருகோணமலை மாவட்ட தமிழ்மக்கள் பேரவை இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை செல்வநாயகபுரம் அரசியல் பணிமனை இனந்தெரியாத நயவஞ்சகக் கும்பலின் தாக்குதலுக்குட்பட்டு போராளிகள் கொல்லப்பட்டும், போராளிகள் காயமடைந்தும் உள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது திட்டமிட்ட அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு படையின் பூரண அனுசரணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் சமாதானத்திற்கெதிரான சக்திகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சமாதானத்தை நிச்சயமாக இல்லாது ஒழிக்கும். எனவே இந்த மோசமான சதிகார நடவடிக்கையை கண்டித்து நாளை முதல் போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்படும் வரை பூரண கதவடைப்பின் மூலம் எம் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்போம். எமது தாயகத் தலைநகரில் இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராது இருக்க வேண்டுமெனில் ஒன்றுபட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை மூலமே இவற்றுக்கு முடிவுகட்ட முடியும். எமது நகரம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த செயலுக்கு சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். யுத்த சூழ்நிலையை விட சமாதான சூழ்நிலையே எமக்கு மிகப் பெரிய ஆபத்தை தந்து கொண்டிருக்கிறது. எனவே பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், போக்குவரத்துக்கள், யாவும் பூரணமாக நிறுத்தப்பட்டு அமைதியாக எவ்வித வன்முறைகளுக்கும் இடம்கொடாது தொடர்ந்து எம்தீர்ப்பை அகிம்சை வழியில் தெரிவிப்போம். இவ்வாறு திருகோணமலை தமிழ்மக்கள பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் வழங்கிய நேர்காணல - Vaanampaadi - 07-10-2005 [url=http://www.tamilnaatham.com/audio/interviews/elilan20050710.smil]<span style='font-size:30pt;line-height:100%'><b>இங்கே அழுத்தவும்</b></span> - selvanNL - 07-10-2005 கோழைத்தனமான தாக்குதல்களுக்கு வெகுவிரைவில் சிறிலங்கா அரசாங்கமும் இந்திய உளவுபிரிவும் (றோ) பதில் சொல்லியாக வேண்டும்.. :evil: :evil: - hari - 07-10-2005 நன்றி வானம்பாடி - AJeevan - 07-10-2005 வீரமரணமடைந்த போராளிகளுக்கு , வீர வணக்கம்! - MUGATHTHAR - 07-10-2005 போராளிகளுக்கு வீர அஞ்சலி - narathar - 07-10-2005 போர் நிறுத்த உடன்படிக்கையின் படி சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாட முடியாது,அவ்வாறு நடமாடினால் அவர்கள் கைது செய்யப்படலாம்.தற்பொது நடைய்பெறும் சம்பவங்களை ஒருங்காகப் பார்த்தால் கீழிருந்து போராட்டத்தையும் புலிகள் அமைப்பையும் சிதைப்பதற்கான ஓர் போரியல் யுக்தி கட்டவிழ்க்கப் பட்டுள்ளதைக் காணலாம்.இவ் யுக்தியே அயர்லாந்திலும் பிருத்தானிய படைகளால் யூனியனிசிட் குழுக்கள் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டது.அது கணிசமான வெற்றியயும் பெற்றது. இவற்றை அறியாதவர் புலிகள் அல்ல.அதனாலயே இரண்டு வார கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.அமெரிக்க,இந்திய கூட்டுச்சதியை அம்பலப்படுத்தி ,முறையடிக்க வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது |