Yarl Forum
இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள (/showthread.php?tid=3928)

Pages: 1 2


இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள - narathar - 07-13-2005

தென்தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் போராளிகளும் வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்கு திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அரசியல் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

யுத்த நிறுத்த சரத்துகளின் படி நிராயுதபாணிகளாக அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிங்கள இராணுவம் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி ஒரு நிழல் யுத்தத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தது.

நீடித்த இந்த நிழல் யுத்தம் ஒரு யுத்த சீண்டலுக்கானதே என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் பலமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது விசனத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆயினும் கடந்த மாதம் வெலிக்கந்தையில் 40 போராளிகளின் உயிருக்குக் குறிவைத்து சிங்கள இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பாரிய தாக்குதலை நடத்தின. இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார்.

இதனால் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 14 நாள் கெடு விதித்தனர். ஆனால் சிறிலங்கா அரசு இதற்கு உரிய பதிலை அளிக்காத நிலையில் மீண்டும் செல்வநாயகபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி இருவரை படுகொலை செய்தனர்.

இந்தச் சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையிலேயே தென் தமிழீழத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து போராளிகளை வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்குத் திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

http://www.eelampage.com/?cn=18516


- Mathan - 07-13-2005

Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- matharasi - 07-13-2005

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது


எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்


- Niththila - 07-13-2005

என்ன சொல்லுறீங்க மதராஸி அன்பகம் அண்ணா மாதிரி பேசுறீங்க விளங்கேல்லை


- matharasi - 07-13-2005

Niththila Wrote:என்ன சொல்லுறீங்க மதராஸி அன்பகம் அண்ணா மாதிரி பேசுறீங்க விளங்கேல்லை
மகாபாரத போருக்கு முன்னர் குருஷேசிரத்தில் கிருஸ்ணன் அருச்சுணனுக்கு சொன்ன விசயமுங்க


- Mathan - 07-13-2005

Niththila Wrote:என்ன சொல்லுறீங்க மதராஸி அன்பகம் அண்ணா மாதிரி பேசுறீங்க விளங்கேல்லை

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 07-13-2005

matharasi Wrote:
Niththila Wrote:என்ன சொல்லுறீங்க மதராஸி அன்பகம் அண்ணா மாதிரி பேசுறீங்க விளங்கேல்லை
மகாபாரத போருக்கு முன்னர் குருஷேசிரத்தில் கிருஸ்ணன் அருச்சுணனுக்கு சொன்ன விசயமுங்க

கீதை உபதேசம் எல்லாருக்கும் தெரியும் சாரே. அதை ஏன் இங்க எழுதுனீங்க எண்டுதான் கேட்டனான். :?

இந்த கருத்துக்கு இரண்டு பக்கம் இருக்கே :evil: :roll: அதுதான் கேட்டனான் :roll:


- matharasi - 07-13-2005

இதென்னடா வம்பாக போச்சு இரண்டு பக்கங்கள் இருக்குதுங்களா ஒங்களுக்கு பிடிச்சபக்கத்தை எடுத்துங்க....எதோ புரியா பயல் சொல்லீட்டானென்றுட்டு மற்றபக்கத்தை விட்டுடுங்க...


- Mathan - 07-13-2005

அதை வைத்து நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்களேன்


- Niththila - 07-13-2005

என்ன மதராஸி சார் கழுவுற மீனில நழுவுற மீன் மாதிரி பதில் போடுறீங்க :நஎடை:

நீங்க சொன்னது எது நடந்ததோ அது நன்றாக நடந்தது நடக்கிறுதும் நல்லாவே நடக்கிறது எண்டா

எங்கட அண்ணாக்கள் மீது சிங்களவனும் தமிழின துரோகிகளும் சேர்ந்து பேடிகள் மாதிரி தாக்குதல் நடத்தினதும் நல்லாத்தான் நடந்திச்சா :நஎடை: :நஎடை: :வறளைவநன: :வறளைவநன: :வறளைவநன:


- matharasi - 07-13-2005

Niththila Wrote:என்ன மதராஸி சார் கழுவுற மீனில நழுவுற மீன் மாதிரி பதில் போடுறீங்க :evil:

நீங்க சொன்னது எது நடந்ததோ அது நன்றாக நடந்தது நடக்கிறுதும் நல்லாவே நடக்கிறது எண்டா

எங்கட அண்ணாக்களை சிங்களவனும் தமிழின துரோகிகளும் சேர்ந்து பேடிகள் மாதிரி தாக்குதல் நடத்தினதும் நல்லாத்தான் நடந்திச்சா :evil: :evil: :twisted: :twisted: :twisted:
மன்னிக்கனும் ங்க இப்படி சீரியசாக கருத்துப்படும் நினைக்கலங்க....

எது நடக்கஇருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்


- வினித் - 07-13-2005

matharasi Wrote:இதென்னடா வம்பாக போச்சு இரண்டு பக்கங்கள் இருக்குதுங்களா ஒங்களுக்கு பிடிச்சபக்கத்தை எடுத்துங்க....எதோ புரியா பயல் சொல்லீட்டானென்றுட்டு மற்றபக்கத்தை விட்டுடுங்க...

:evil: :evil: :evil: :evil: :evil:

என்ன matharasi :evil: :evil: :evil:


- matharasi - 07-13-2005

கீதாசாரம் பற்றிய எனது கருத்தை நீக்கி விடமுடியமிங்களா..என்க்கு திருத்த செய்ய அனுமதியில்லைங்க


- Mathan - 07-13-2005

கருத்துக்கள் எழுதிய பின்பு திருத்தம் செய்யலாமே தவிர நீக்க கூடாது.

தயங்காமல் உங்கள் விளக்கத்தை எழுதுங்களேன். ஏன் நீக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


- Niththila - 07-13-2005

இதுக்கும் அர்த்தம் இரண்டா வரும் அதால எழுத முதல் 2 தரம் யோசிச்சுட்டு எழுதுங்க

என்னால எந்த சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவரையோ அண்ணாக்களையோ யாராவது குறை சொன்னா அவர்களை எனக்குபிடிக்காது அது யஸ்ட் ஜோக்கா இருந்தாலும் கூட

நல்ல காலம் நீங்க எனக்கு முன்னால இருந்து இப்படி கருத்து சொல்லவில்லை


- matharasi - 07-13-2005

Niththila Wrote:இதுக்கும் அர்த்தம் இரண்டா வரும் அதால எழுத முதல் 2 தரம் யோசிச்சுட்டு எழுதுங்க

என்னால எந்த சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவரையோ அண்ணாக்களையோ யாராவது குறை சொன்னா அவர்களை எனக்குபிடிக்காது அது யஸ்ட் ஜோக்கா இருந்தாலும் கூட

நல்ல காலம் நீங்க எனக்கு முன்னால இருந்து இப்படி கருத்து சொல்லவில்லை
ஏதோ அறியா சேரி பயல் புரியாமல் எழுதிட்டான் விட்டுடுங்களோன்...


- வியாசன் - 07-13-2005

என்ன நித்திலா மதராசியை இந்த வாங்கு வாங்குகிறீர்கள். சிலவேளை மதராசி சிங்களப்பிள்ளையள் அடிவாங்கப்போறதை(எது நடக்கப்போகுதோ அது நன்றாகவே நடக்குமென்று சொல்கின்றார் என நினைக்கிறேன்) தினை விதைச்சால்தானே இராணுவம் தினையை அறுவடை செய்யமுடியும். அவையள் பெரு வினையெல்லோ விதைச்சிருக்கினம். புலிகள் இயக்கம் இழப்புக்கள் வரும்போதுதானே பெருவளர்ச்சியடைந்துள்ளது.
மதராசி தயவுசெய்து இனி நீங்கள் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.
நடக்கப்போகிறது(அடிவாங்கப்போகிறது இராணுவம்) நன்றாகவே நடக்கும்.


- matharasi - 07-13-2005

viyasan Wrote:என்ன நித்திலா மதராசியை இந்த வாங்கு வாங்குகிறீர்கள். சிலவேளை மதராசி சிங்களப்பிள்ளையள் அடிவாங்கப்போறதை(எது நடக்கப்போகுதோ அது நன்றாகவே நடக்குமென்று சொல்கின்றார் என நினைக்கிறேன்) தினை விதைச்சால்தானே இராணுவம் தினையை அறுவடை செய்யமுடியும். அவையள் பெரு வினையெல்லோ விதைச்சிருக்கினம். புலிகள் இயக்கம் இழப்புக்கள் வரும்போதுதானே பெருவளர்ச்சியடைந்துள்ளது.
மதராசி தயவுசெய்து இனி நீங்கள் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.
நடக்கப்போகிறது(அடிவாங்கப்போகிறது இராணுவம்) நன்றாகவே நடக்கும்.
நன்றிங்க வியாசன் சாரு நீங்க சொன்னதை தான் நினைத்து சொல்ல வந்தனேங்க..அதுக்காட்டி இந்த லாயர் அம்மா இருக்காங்கல்லா ..இரண்டு கருத்து இருக்கு அப்படி இப்படி இருக்கெண்டு வெருட்டி பயம் காட்டிச்சு..நானு குழம்பிட்டேனுங்க...டாங்ஸ்ங்க.. வியாசன் சாரால் தப்பிச்சிட்டேனுங்க... லாயருங்க அல்லாரும் கோட்டிலை மட்டுமல்லைங்க எல்லா இடத்திலையும் பொக்கற்றுக்குள்ளை லாப்பொயிற்றுங்களை வைத்துக்கொண்டு திரியிறாங்கள் போலை...


- வினித் - 07-13-2005

matharasi Wrote:
viyasan Wrote:என்ன நித்திலா மதராசியை இந்த வாங்கு வாங்குகிறீர்கள். சிலவேளை மதராசி சிங்களப்பிள்ளையள் அடிவாங்கப்போறதை(எது நடக்கப்போகுதோ அது நன்றாகவே நடக்குமென்று சொல்கின்றார் என நினைக்கிறேன்) தினை விதைச்சால்தானே இராணுவம் தினையை அறுவடை செய்யமுடியும். அவையள் பெரு வினையெல்லோ விதைச்சிருக்கினம். புலிகள் இயக்கம் இழப்புக்கள் வரும்போதுதானே பெருவளர்ச்சியடைந்துள்ளது.
மதராசி தயவுசெய்து இனி நீங்கள் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.
நடக்கப்போகிறது(அடிவாங்கப்போகிறது இராணுவம்) நன்றாகவே நடக்கும்.


நானும் அப்படி தான் நினச்சன் மன்னிக்கவும் matharasi"][சார் நன்றிங்க வியாசன் சாரு நீங்க சொன்னதை தான் நினைத்து சொல்ல வந்தனேங்க..அதுக்காட்டி இந்த லாயர் அம்மா இருக்காங்கல்லா ..இரண்டு கருத்து இருக்கு அப்படி இப்படி இருக்கெண்டு வெருட்டி பயம் காட்டிச்சு..நானு குழம்பிட்டேனுங்க...டாங்ஸ்ங்க.. வியாசன் சாரால் தப்பிச்சிட்டேனுங்க... லாயருங்க அல்லாரும் கோட்டிலை மட்டுமல்லைங்க எல்லா இடத்திலையும் பொக்கற்றுக்குள்ளை லாப்பொயிற்றுங்களை வைத்துக்கொண்டு திரியிறாங்கள் போலை...



- sOliyAn - 07-13-2005

matharasi Wrote:எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது


எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
ம்.. இப்படி ஆரம்பிக்கும் கீதோபதேச வாக்கியங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பல கடைகளினுள்ளே பெரிய பனராக தொங்கியதை கண்டேன்.
அதிலே இரு வசனங்கள்.. வரும்போது எதைக் கொண்டு வந்தாயோ.. போகும்போது எதைக் கொண்டு செல்லப் போகிறாயோ.. என்ற கருத்திலமைந்திருந்தது.
சிலவேளை போராட்ட உணர்வை மழுங்கடிக்க திட்டமிட்ட வகையில் இந்த வசனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எனது மனதில் எழுந்தது.