![]() |
|
வாலி கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாலி கவிதைகள் (/showthread.php?tid=3886) |
வாலி கவிதைகள் - SUNDHAL - 07-19-2005 மாண்புமிகு மழையே! உனக்கொரு மடல்! நீ _ எவ்வளவு பெய்தாலும் ஏற்க வல்லது _ கடல்கொண்ட குடல்; ஏற்க ஏலாதது _ குடல் கொண்ட உடல்! நீ பெய்யலாம் நூறு அங்குலம்; அன்னணம் _ பெய்தால் என்னணம் பிழைக்கும் எங்குலம்? அடை மழையே! அடை மழையே! உன் _ மடையை உடனே அடை மழையே! கொடுப்பதும் மழை; கெடுப்பதும் மழை; இது இரண்டாயிரம் ஆண்டுகள் முன் _ தாடி வைத்த தமிழ் பாடி வைத்த தமிழ்! அளவோடு பெய்தால் உன்பேர் மழை; அளவின்றிப் பெய்தால் _ உன்பேர் பிழை! தாகம் _ தணிய.... உன்னைக் குடித்தோம் என்றா _ எங்கள் உயிரை நீ குடிக்கிறாய்? மழைக்கே தாகமா? _ எமனுக்கு மற்றொரு பெயர் மேகமா? சவத்தைக் குளிப்பாட்டினால் _ அது சடங்கு; நீ குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே _சவக் கிடங்கு! நீரின்றி நிற்காது உலகு; எங்கும் _ நீராகவே இருந்தாலும் நிற்காது உலகு! பூகம்பம்; புகைவண்டி; புயல் வெள்ளம்; என ஏனிப்படி... குஜராத்தைக் குறி வைத்து _ இடையறாது தாக்குகிறது இயற்கை? உன்னொத்த _ இயற்கையைத் தண்டிக்காது இருப்பதேன் இறைக்கை? விண்ணிலிருந்து _ வருவது தண்ணீர்; கண்ணிலிருந்து வருவது கண்ணீர்; எனினும் எஞ்ஞான்றும் _ தண்ணீரைப் பொறுத்தே கண்ணீர்! தெய்வம் தொழாது _ கொழுநன் தொழுவாளைப் போலே... மழையே! மாந்தர் _ பெய் எனும்போது பெய்; உனது _ பெயரை என்றும் பெயராமல் வை! Thanks:Kumudam - kavithan - 07-19-2005 நன்றி சுண்டல் அருமையான கவிதையை இணைத்திருக்கிறீர்கள் . - Thala - 07-19-2005 சுண்டல் உங்கள் தொண்டு வாளர்க!...... வாழ்த்துக்கள்..... - கீதா - 07-21-2005 சுண்டல் அண்ணா உங்கள் கவிதைக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அன்பு jothika |