Yarl Forum
திருச்சியில் பயங்கரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருச்சியில் பயங்கரம் (/showthread.php?tid=3840)



திருச்சியில் பயங்கரம் - தமிழரசன் - 07-25-2005

<b>திருச்சியில் பயங்கரம்„பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார், 4 குழந்தை எரித்து கொலை, தந்தையும் தீக்குளித்து சாவு, மனைவி உயிர் ஊசல் நடத்தையில் சந்தேகத்தால் குடும்பம் அழிந்தது </b>

தீயில் கருகி இறந்த சிறுவன் பார்த்திபன் பிணமாக கிடக்கும் காட்சி.
http://www.dinakaran.com/daily/2005/Jul/25...4_parthiban.jpg

திருச்சி.ஜூலை.25- திருச்சியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி ஓட்டல் தொழிலாளி தீ வைத்தார். இதில் 4 குழந்தைகள் கருகி இறந்தனர். மனைவி உயிருக்கு போராடுகிறhர். குடும்பத்தையே எரித்த தொழிலாளி தானும் தீக்குளித்தார்.

இலங்கையைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி யோகராணி (வயது45). இவர்களுக்கு சிந்துஜhன் என்ற மகன் உள்ளான். கணவர் சந்திரசேகர் இறந்ததும் யோகராணி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் தமிழகம் வந்தனர். முதலில் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் வசித்து வந்தார். பின்னர் திருச்சி திருவானைக்காவல் பர்மா காலனியில் யோகராணி வசித்து வந்தார். அப்போது சுப்பிரமணியன் என்பவருக்கும் யோகராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கட்டிட வேலை

சுப்பிரமணி-யோகராணி தம்பதிகளுக்கு ஐங்கரன். நிசாந்தினி. பார்த்தீபன் என்ற 3 குழந்தைகள் பிறந்தன. யோகராணி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். சுப்பிரமணியன் தனது குடும்பத்தை கவனிக்காமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தார்.

பின்னர் வேலை தேடி கடந்த 2 வருடங்களுக்கு முன் சென்னை சென்றhர். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். நேற்று மாலை சுப்பிரமணியன் திருவானைக்காவல் வந்தார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகள் முதலில் வசித்து வந்த இடத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் இல்லை. திருவானைக்காவல் பர்மா காலனியில் வசிப்பதாக தகவல் கிடைத்து இரவில் அங்கு சென்றhர். அப்போது யோகராணிக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நடத்தை சந்தேகம்

யோகராணி கட்டிட வேலைக்கு சென்று 4 குழந்தைகளையும் கவனித்து வருகிறhர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறhர். ஆனால் சுப்பிரமணியன் தனது மனைவி யோகராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார்.

தீ வைப்பு

பின்னர் சுப்பிரமணியன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் சுப்பிரமணியன் மீண்டும் யோகராணி வீட்டுக்கு வந்தார். அங்கு யோகராணி உள்பட குழந்தைகள் அனைவரும் நன்றhக தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது சுப்பிரமணியன் ஜன்னல் கதவை திறந்தார். தான் ஏற்கனவே வாங்கி வந்த பெட்ரோலை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ஊற்றி தீ யை பற்ற வைத்தார். பின்னர் வீட்டின் அருகில் தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் அந்த குடிசை வீடு குபீரென்று தீப்பிடித்து எரிந்தது.

6 பேர் கருகினர்

இதில் சுப்பிரமணியன். யோகராணி. குழந்தைகள் சிந்துஜhன்(வயது16). ஐங்கரன்(வயது13). பார்த்தீபன் (வயது15). நிசாந்தினி(வயது12) ஆகிய 6 பேரும் உடல் கருகி துடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவரங்கம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீக்காயம் அடைந்த 6 பேரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 7.30 மணிக்கு ஐங்கரனும், நிசாந்தினியும் இறந்தனர். 7.35 மணிக்கு சிந்துஜhன் உயிர் பிரிந்தது. 7.40 மணிக்கு பார்த்தீபன் இறந்தான். 9.30 மணி அளவில் தந்தை சுப்பிரமணியனும் இறந்தார். யோகராணி நிலைமை மிக, மிக மோசமாக உள்ளது. அவரை காப்பாற்றுவது சிரமம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு குடும்பமே அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி திருவானைக்காவல் பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். தீ வைத்தது குறித்து சுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரால் சரியாக பேச முடியவில்லை. எரித்துக்கொல்லப்பட்ட சிந்துஜhன் ஐ.டி.ஐ. படித்து வந்தான். மற்ற 3 குழந்தைகளும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். யோகராணி கூலி வேலை செய்து தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். மாதம் 500 ரூபாய் வாடகை செலுத்தி ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடும் நேற்று தீக்கிரையாகி விட்டது.

அங்கிள் காப்பாத்துங்க காப்பாத்துங்க

குழந்தைகள் எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் வீட்டிற்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தார். அப்போது அந்த குழந்தைகள் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து ……அங்கிள் எங்களை காப்பாத்துங்க, காப்பாத்துங்க†† என்று கதறினர். உடனடியாக போலீசார் அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
dinakaran


- வெண்ணிலா - 07-25-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மனைவியில் சந்தேகப்பட்டு பிள்ளைகளையும் எரித்தாரா? :evil:


- வினித் - 07-25-2005

Öͺ¡ «ó¾ ¬û பிள்ளைகளையும் எரித்Ð :twisted: :twisted: :twisted:


- vijitha - 07-25-2005

பாவம் அந்தச் சின்னப்பிள்ளைகள் உயிருடன் தீயில்

சந்தேகம் எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது

பிரச்சனை தயும் தகப்பனுக்கும்தான் ஒன்றும் அறியாத பாலகர்கள் ஏன் தீக்கிரயாக வேண்டும்?

பாவம்


- SUNDHAL - 07-25-2005

Cry Cry Cry :evil:


- hari - 07-25-2005

:evil: :evil:


- Mathan - 07-25-2005

நம்பிக்கை இல்லாவிட்டால் குடும்ப வாழ்க்கையிலேயே அர்த்தமில்லையே Cry :evil:

நம்பிக்கை இல்லாமல் போகும் போது பிரிந்து செல்வதே மேல்


- MUGATHTHAR - 07-25-2005

இதிலை இனி யாரைத் திட்டுவது தீ வைச்சவனே போய்ச் சேர்ந்திட்டான் மனைவியும் இறந்திட்டால் பிரச்சனையில்லை


- tamilini - 07-25-2005

போற இடம் எல்லாம் புகழோட தான் வாழுறாங்க. :evil:


- Malalai - 07-25-2005

:twisted: :twisted: