Yarl Forum
வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?! (/showthread.php?tid=3616)

Pages: 1 2 3


வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?! - kuruvikal - 08-19-2005

<img src='http://img367.imageshack.us/img367/4295/kuruvi8pw.jpg' border='0' alt='user posted image'>

<b>மலராகி மணம் பரப்பியவள்
மலரும் நாட்களுக்குள் மறைந்த போது
மரணம் வாசல் வருவதாய்
மனம் வலித்தது துடித்தது...!

மலரவள் மனதோடு பேசி
மயங்கிக் கிடந்தவன்
மாற்றங்கள் தந்த அவள் பிரிவில்
மாலை சுமந்தான் கண்ணீர்த்துளி கொண்டு...!

மனசுக்குள் மலர்ந்த மலர்க் கொடி
மன்னவன் நினைவுக்குள் ஒரு வசந்தக் கொடி
மலரும் காலத்தால் ஒரு நொடி
மறைந்ததும் வந்தது கொடிய நோய்...!

மலரே எனி
மறைவும் வேண்டாம் ஏமாற்றமும் வேண்டாம்
மறக்காமல் என் மடி
மலர்ந்திரு அன்பு மலராய் என்றும்...!

மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>


- Malalai - 08-19-2005

Quote:மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!

அழகான கவிதை அண்ணா...ஏன் இந்த அளவுக்கு சோகம் அண்ணா? மன்னவனுக்கு அரசி அன்பாட்சி செய்திட வாழ்த்துக்கள்...


- kuruvikal - 08-19-2005

அரசியின் அன்பாட்சிக்கு குறைவில்ல...தங்கையே...! பிரிவுகள் தந்த விளைவுகள்...கவிகளில்... நினைவுக்காக..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-19-2005

சிறிய பிரிவு இன்னும் அன்பை நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கும் தானே .... பிரிவு துயர் தந்த வரிகள் நன்றாக இருக்கின்றன


- tamilini - 08-19-2005

கவிதை எல்லாம் பலமாய் இருக்கு. ம் பிரிவின் ஆழமோ..?. இனி பிரிவின்றி இருக்க வாழ்த்துக்கள் குருவிகள். பாவம் மலரண்ணி. :wink:


- KULAKADDAN - 08-19-2005

வலியும் நீயே நிவாரணியும் நீயே எணடுறீங்களா


- Mathan - 08-19-2005

என்ன வலியும் நானோ நிவாரணியும் நானே என்று சொல்றாவோ ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-19-2005

Mathan Wrote:என்ன வலியும் நானோ நிவாரணியும் நானே என்று சொல்றாவோ ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யார் சொல்லுறாவொ மதன்?......... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-19-2005

ரங் சிலிப்பாகிட்டுது குளம்


- KULAKADDAN - 08-19-2005

கவனம் ......காலும் சிலிப்பகி விழுந்திட போறீங்க மதன்.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நல்ல கவிதை குருவி அண்ணா..


- வெண்ணிலா - 08-19-2005

Quote:மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் குருவியண்ணா.


- Rasikai - 08-19-2005

நல்ல கவிதை குருவி பிரிவின் போதுதான் அன்பின் ஆழம் தெரியும்


- கீதா - 08-19-2005

நல்ல கவிதை குருவி அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

.....................................
jothikaaaaaa


- வெண்ணிலா - 08-20-2005

Rasikai Wrote:நல்ல கவிதை குருவி பிரிவின் போதுதான் அன்பின் ஆழம் தெரியும்


Cry Cry Cry Cry Cry Cry


- kuruvikal - 08-20-2005

vennila Wrote:
Rasikai Wrote:நல்ல கவிதை குருவி பிரிவின் போதுதான் அன்பின் ஆழம் தெரியும்


Cry Cry Cry Cry Cry Cry

ஏன் தங்கையே அழுகிறீங்க...! உண்மைதான் பிரிவு நெருக்கத்தைக் கூட்டும்...! அனுபவப்பட்டவங்க சொல்லி இருக்காங்க அழாமல் கேளுங்க தங்கையே..! :wink:


- வெண்ணிலா - 08-20-2005

kuruvikal Wrote:
vennila Wrote:[quote=Rasikai]நல்ல கவிதை குருவி பிரிவின் போதுதான் அன்பின் ஆழம் தெரியும்


Cry Cry Cry Cry Cry Cry

ஏன் தங்கையே அழுகிறீங்க...! உண்மைதான் பிரிவு நெருக்கத்தைக் கூட்டும்


எப்படியான பிரிவு. Cry


- Mathan - 08-20-2005

காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?


- வெண்ணிலா - 08-20-2005

Mathan Wrote:காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?


Cry அழணும் போல இருந்திச்சு. சோ அழுதேன். அதுதானே பார்த்தேன் சாதாரண உள்ளங்களுக்குள் ஏற்படும் பிரிவுக்குள் எப்படி ஆழமான நெருக்கம் ஏற்படும் என. விளக்கத்துக்கு நன்றி மதன் அண்ணா Cry


- kuruvikal - 08-20-2005

Mathan Wrote:காதலர்களிடையே ஏற்படும் தற்காலிகமான பிரிவு, ஊடல் நெருக்கத்தை கூட்டும். நீங்கள் எப்படியான பிரிவு என்று கேட்பதை பார்த்தால் மனமுறிவு அல்லது நிரந்தர பிரிவை கேட்குறீர்கள் போல ... அது மனவலியை தான் தரும். அதை ஏன் அழுது கொண்டே கேட்கிறீங்க?

<b>உண்மையா காதலிச்சா பிரிவு என்பது தற்காலிகமே...நிரந்தரம் என்பது பொய்....! </b>

காதல் உடல் சார்ந்ததல்ல...உளம் சார்ந்தது... எனவே காதற் பதிவு என்பது பதிந்தது பதிந்ததுதான்...! காதலிச்சன்...அவள் அல்லது அவன் ஒரு மாதிரி...சோ...நிரந்தரமாப் பிரிஞ்சன் மறந்தன் இன்னொன்றைக் காதலிச்சன் இல்ல கலியாணம் முடிச்சன் என்றதெல்லாம் மனதை ஏமாற்றி செய்யும் போலி நாடகங்கள்...! துணை தேடி வாழ வேண்டும் என்பதற்காக செய்யப்படும் மனிதக் கூத்துக்கள்...! மற்றும் படி உயிர் போல..காதலும் ஒரு தடவைதான் பூக்க முடியும்...எவருடன் முதலில் பூத்ததோ...அதுதான் வாழ்வில் கடைசிவரை மனதோடு வாழும்...அதை அழிக்கவே முடியாது...! காதல்...நினைவுகள்...சிரஞ்சீவியானது...எவரும் எப்போதும் அழிக்க முடியாது..அந்த நினைவுகளை...! ஒருதலைக் காதலைச் சொல்லவில்லை...அது காதல் அல்ல...இரு மனம் ஒருமித்த காதலைச் சொல்லுறம்...அதுதான் உண்மைக் காதல்...! மற்றெல்லாம் மனிதன் தேவைக்காகப் போடும் வேடங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea