![]() |
|
அந்த நாள் ஞாபகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அந்த நாள் ஞாபகம் (/showthread.php?tid=3530) |
அந்த நாள் ஞாபகம் - KULAKADDAN - 08-27-2005 <span style='color:red'>இது ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடா இருந்த காலத்து விளக்கு. ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணைய எப்படி இரவு முழுக்க பாவிக்கிறது எண்டதுக்காக அப்ப கண்டுபிடித்த வழி இது <img src='http://img397.imageshack.us/img397/6992/lamp109kc.jpg' border='0' alt='user posted image'> பாவிக்கும் பொருட்கள் <img src='http://img397.imageshack.us/img397/2636/lamp70bh.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img397.imageshack.us/img397/5379/lamp81vr.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img397.imageshack.us/img397/4416/lamp98pv.jpg' border='0' alt='user posted image'> <span style='color:red'>ஊருக்கு போன போது செய்து எடுத்தேன். இப்ப காஸ் குக்கர், மோட்டர் சைக்கிள், செல்லிட பேசி, கையேஸ் என நிறைந்து போயுள்ள ஈழத்தில் 10 -12 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு வாழ்க்கையின் ஒரு பதிப்பு இதப்பற்றி வசந்தனின் பதிவு <b>சிதையா நெஞ்சு கொள்-1 </b> தங்கமணியின் பதிவில் முத்தையன்கட்டில் குளத்துநீரைப் பாவித்து மின்னுற்பத்தி செய்த ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார். அச்செய்தியை அதற்குமுன்பே புதினத்தில் பார்த்திருந்தேன். தங்கமணியின் பதிவைப்பார்த்த பின்தான் அதன் முக்கியத்துவைத்தை உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்த மனிதன் எனக்குத் தெரிந்தவனாயிருக்க வேண்டும். முகத்தைவிட பெருவிரலில்லாத வலது கைதான் எனக்கு ஆதாரமாய் இருக்கிறது. அந்த நபர் நான் நினைப்பவராக இருக்கும் பட்சத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முத்தையன்கட்டுக் குளத்தின் சீர் செய்யப்படாத மடைக்கதவுகளுக்குள்ளால் வெளியேறி கழிவுநீராக அநாவசியமாய்ப் போகும் நீரைப்பற்றி யோசித்திருக்கிறேன். இன்னும், இரணைமடுவின் வான்பாயும் நீரையோ, அல்லது சீரமைக்கப்படாத குளக்கட்டைக் கருத்திற்கொண்டு குளத்துநீரைத் திறந்து வெளியேற்றும்போது பெருக்கெடுத்துப்பாய்ந்து அநாவசியமாய்ப்போகும் நீரைப் பார்த்தும் பொருமியிருக்கிறேன். தேவைகள் தான் சில கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன. அந்தவகையில் போர்க்காலத்தில் எங்கள் மக்களால் செய்யப்பட்ட சில புதுமைகளைப்பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். ஜாம் போத்தல் விளக்கு. இதைப்பற்றி நான் சுந்தரவடிவேலின் பதிவிற் சொன்னபோது, அவர் சாதாரண போத்தல் (Bottle) விளக்கென்று நினைத்துவிட்டார். அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் சிங்கள அரசுக்கெதிராகத் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா சிங்கள அரசு? சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் சிங்கள வான்படையாற் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது. அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. வன்னியுடன் இணையும் ஒரே பாதையான ஆனையிறவில் இராணுவம் குந்தியிருந்தது. மற்றைய பாதை பூநகரிப் படைமுகாமால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம். இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும். (அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்). இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.) சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும். இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும். என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம். கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.) இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம். இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். இதுதான் ஜாம் போத்தல் விளக்கின் கதை. கதையைச் சரியாகச் சொன்னேனா தெரியவில்லை. குறிப்பாக எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தினேனா தெரியாது. இப்பதிவை இப்போது எழுதத் தூண்டிய சிறிரங்கனுக்கு நன்றி. மேலும் தங்மணியின் தலைப்பையே நானும் பாவித்ததால் அவருக்கும் நன்றி. நன்றி. -வசந்தன்- </span>]http://vasanthanin.blogspot.com/2005/06/1....[size=7]</span> - வெண்ணிலா - 08-27-2005 பிஞ்சு மனசில் நிலை கொண்ட அந்த நாள் ஞாபகத்தை மீட்டியமைக்கு நன்றிங்க. - கீதா - 08-27-2005 நன்றி அண்ணா - Rasikai - 08-27-2005 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே. நன்றிகள் தகவலுக்கு. அந்த விளக்குல கூட ஒரு காலத்துல படிச்சது ம்ம்ம்ம்ம்ம் - Vishnu - 08-27-2005 பழையதை நினைவுபடுத்தி.. கலங்க வைச்சிட்டிங்க போங்க... படங்களுக்கு நன்றி
- Thiyaham - 08-27-2005 இதே விளக்கில் மண்ணெண்ணையுடன் தேங்காயெண்ணையும் கலந்து பாவித்த வளக்கமும் இருந்தது. தேங்காயெண்ணை இதே காலத்தில் சற்று விலை குறைவாகவே இருந்தது. இதே காலப்பகுதியில் யாரோ எமக்கு கோதுமை மா எங்கோ மலிவாம் என வாங்கி தந்தார்கள். நாமும் ஏதோ லொத்தர் விழுந்தது போல வாங்கி கொண்டோம். பிறகு அதை சமைத்த போது தான் தெரிந்தது மாவில் நிறைய மண் கலந்திருக்கிறது என்று. ஆனாலும் வேறு வழியில்லமல் அதை சாப்பிட்டோம். இதற்காக அம்மா சாம்பார் போன்ற கறிகளை சமைப்பார்... மண் வாயில் கடிபடுவதை இது கணிசமான அளவு குறைக்கும். அந்த நாள் ஞாபகங்கள் நிலவொளியில் சாப்பிட்டது அதிலேயே காட்ஸ் விளையாடியது என்றைக்கும் மறக்க முடியாதது - KULAKADDAN - 08-27-2005 <img src='http://img232.imageshack.us/img232/473/candle5gt.jpg' border='0' alt='user posted image'> இது ஞாபகம் இருக்கா அதே காலத்தில் மெழுகுதிரிய கனநேரம் எரிய விட செய்யும் வழியாக சொல்லப்பட்டது. - Rasikai - 08-27-2005 ம்ம்ம்ம்ம்ம் நன்றாகவே உள்ளது எப்படி மறக்க முடியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 08-27-2005 அந்த நேரத்தில் எமது யாழ்ப்பாண மண்ணில் இந்த மெழுகுதிரி விளக்குடன் படித்து எமது மாணவர்கள் நல்ல results எடுத்தார்கள். இப்போது மின்சார வசதி இருந்து யாழ்ப்பாண கல்வி தகமையில் பின் நோக்கி போவது கவலைக்குரிய விசயம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 08-27-2005 Mathana Wrote:அந்த நேரத்தில் எமது யாழ்ப்பாண மண்ணில் இந்த மெழுகுதிரி விளக்குடன் படித்து எமது மாணவர்கள் நல்ல results எடுத்தார்கள். இப்போது மின்சார வசதி இருந்து யாழ்ப்பாண கல்வி தகமையில் பின் நோக்கி போவது கவலைக்குரிய விசயம்<!--emo& ஆமா மதனா நானும் கேள்விப்பட்டன். காரணம் புரியவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-28-2005 Rasikai Wrote:ம்ம்ம்ம்ம்ம் நன்றாகவே உள்ளது எப்படி மறக்க முடியும் <!--emo&இதெல்லம் தெரியுமா ரசிகைக்கு. அப்ப நீங்க சின்ன பிள்ளை இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-28-2005 KULAKADDAN Wrote:Rasikai Wrote:ம்ம்ம்ம்ம்ம் நன்றாகவே உள்ளது எப்படி மறக்க முடியும் <!--emo&இதெல்லம் தெரியுமா ரசிகைக்கு. அப்ப நீங்க சின்ன பிள்ளை இல்லை. அடடா பெரியகண்டுபிடிப்பு இதை கின்னஸ்ல போடணுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |