Yarl Forum
'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: 'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது' (/showthread.php?tid=3413)



'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது' - AJeevan - 09-05-2005

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050902100123singaporelion203.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது'</b>

சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழியின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதாக சிங்கப்பூரின் கல்வியமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் கவலை வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்கு தமிழை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பேசுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்றை ஆமோதிக்கும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் கருத்தரங்கின் ஏற்பாட்டாளரான வீ.ஆர்.பி. மாணிக்கம் அவர்கள், இலங்கை மற்றும் தமிழ்நாடு தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் தமிழின் புழக்கம் மிகவும் குறைந்து வருவதாகக் கூறுகிறார்.

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கின்ற போதிலும், அங்கே ஆங்கில மொழியின் மோகம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் தமிழின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் மாணிக்கம் கூறுகிறார்</span>

-BBC tamil


- sathiri - 09-05-2005

அங்கையும் இப்ப இந்திய அரசியல் ஆரம்பமாகிட்டுது சட்டம் என்றால் சிங்கபுர் என்ற காலம் மெல்ல மெல்ல விலகுகிறது சிங்கையில் யாருக்காவது யாழ்ப்பாண தமிழர் யே பி யெய ரட்ணம் பற்றி தெரியுமா??


- AJeevan - 09-05-2005

sathiri Wrote:அங்கையும் இப்ப இந்திய அரசியல் ஆரம்பமாகிட்டுது சட்டம் என்றால் சிங்கபுர் என்ற காலம் மெல்ல மெல்ல விலகுகிறது சிங்கையில் யாருக்காவது யாழ்ப்பாண தமிழர் யே பி யெயரட்ணம் பற்றி தெரியுமா??
<span style='font-size:22pt;line-height:100%'>அவர் அரசியலில் இருந்து விலகி வெகு காலமாகி விட்டது.
அவர் ஓரேயொரு ஆரம்ப கால எதிர் கட்சித் தலைவராக இருந்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் அதிபர் லீ குவான்யு அவர்களதும் வழிகாட்டலாகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் திரு.இராசரத்னம் அவர்கள்.

இவர் யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவரை பல முறை அதிபராக்க முயன்றாலும் அவர் அதற்கு இணங்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒரு பெரும் தலைவர்................

<b>சிங்கையில் வாழ்வோர் சிங்கை நாட்டினர்.</b>
அவர்கள் வழித் தோன்றலை மட்டுமே இந்தியர்-இலங்கையர்-மலேசியர்-சீனர்..............என்று (கேட்டால் மட்டுமே) சொல்வார்கள்.
அவர்கள் படித்தவர்கள்.
அது அவர்களது நாடு.</span>