![]() |
|
விஜயகாந்த் புதிய கட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விஜயகாந்த் புதிய கட்சி (/showthread.php?tid=3316) |
விஜயகாந்த் புதிய கட்சி - SUNDHAL - 09-14-2005 மிழ் திரை உலகின் முன்னணி நடி கர்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்க போவதாக கூறி வந்தார். இதனை தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டில் வெளியிடபோவதாகவும் அறிவித்தார். அதன்படி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரை திருநகரில் செப்டம்பர் 14-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக திருநகர் தோப்பூரில் பிரமாண்ட பந்தலும், தஞ்சை தோரணவாயிலும் அமைக்கப்பட்டன. பந்தலுக்கு முன்பு கொடிக்கம்பமும் நடப்பட்டது. மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்தார். பசுமலை ஓட்டலில் தங்கி இருந்த அவர் குடும்பத்துடன் வந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டார். இன்று காலை மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் பசுமலை ஓட்டலில் இருந்து தனி பிரசார வேனில் மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். அவர்களை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் விஜயகாந்த் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார். அங்கு ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே காலை 7.20 மணிக்கு கொடி ஏற்றி வைத்தார். உடனே 14 வென்புறாக்களை வானில் பறக்க விட்டார். அதன் பின்னர் ரசிகர் மன்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன், கார்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர். காலை 9 மணி வரை சுமார் 1 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர். பலத்த கரகோஷத்துக்கு இடையே நடிகர் விஜயகாந்த் 9.35 மணி அளவில் "தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்'' என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். புதிய கட்சியின் பெயரை மாநாட்டு மேடையில் அவர் அறிவித்ததும் தொண்டர்கள் `தலைவர் கேப்டன் வாழ்க' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கை தட்டினர். மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முன்வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். வேட்டி துண்டு வாங்க போட்டா போட்டி விஜயகாந்த் கட்சி கரை போட்ட வேட்டி, துண்டுகள் விற்பனை மாநாட்டு பந்தலில் `களை' கட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டனர். ராட்சத பலூன் மாநாட்டு பந்தலில் விஜயகாந்த் கட்சி கலரு டன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு இருந்தது. அது வழக்காக பார்க்கும் பலூன்களை விட மிக பெரியதாக இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் அந்த பலூனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். டிக்கெட் வாங்க குவிந்த கூட்டம் மாநாட்டில் பங்கேற்க ரசிகர்கள் ரூ.5 கொடுத்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் முன்பு 4 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக ரசிகர்கள் நீண்ட கிï வரிசையில் காத்து நின்றனர். முதல்வர்கள் பட்டியலில் விஜயகாந்த் பெயர் தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பெயர் பட்டியல் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் கடைசியாக 2006 என்று எழுதப்பட்டு அதற்கு நேராக உள்ள கட்டத்தில் விஜயகாந்தின் படம் ஒட்டப்பட்டு இருந்தது. பிரசார வேனின் முன்னும், பின்னும் எம்.ஜி.ஆர். படம் மாநாடு முடிந்ததும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக விசேஷ பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வேனில் தான் விஜயகாந்த் மாநாட்டு பந்தலுக்கு வந்தார். வேனின் முன்புறம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படம் ஒட்டப்பட்டு இருந்தது. வேனின் பின்புறம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் இணைந்து இருக்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது. அலங்கார நாற்காலியை மறுத்த விஜயகாந்த் மாநாட்டு மேடையில் தலைவர்கள் இருக்க பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மட்டும் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. இதை கண்ட விஜயகாந்த் அந்த நாற்காலியில் இருக்க மறுத்து விட்டார். தனக்கும் எல்லோரையும் போல பிளாஸ்டிக் நாற்காலியே போதும் என்று கூறினார். உடனே அலங்கார நாற்காலி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டது - SUNDHAL - 09-14-2005 எல்லோரும் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்: பெண்களை நம்பிதான் கட்சி தொடங்கினேன்- மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு கட்சி பெயரை அறிவித்து விஜயகாந்த் பேசியதாவது:- எனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் இந்த மாநாடு ஒரு சவால். இந்த சவாலை நீங்கள் எப்படி முறியடிப்பீர்கள் எப்படி அமைதி காப்பீர்கள் என்பதில்தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களும் இங்கு இருப்பார்கள். அவர்கள் தப்புத்தப்பாக வெளியே போய் சொல்ல காரணம் ஏற்பட்டு விடக்கூடாது. இன்னும் சிறிது நேரம்தான் நீங்கள் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து கூடி இருக்கிறீர்கள். எல்லோரும் நம்மை திருப்பி பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அப்படி எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இங்கே கூடி இருக்கிறீர்கள். நான் மாலை 5 மணிக்குத்தான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேச இருக்கிறேன். உள்ளே ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறீர்கள். வெளியேயும் ஏராளமான ரசிகர்கள் நிற்கிறார்கள். எல்லோரும் மாநாட்டுக்கு உள்ளே வந்து அமர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வெளியே நிற்கிற ரசிகர்களும் மாலையில் உள்ளே வந்து அமரும் வகையில் போலீஸ் உதவியுடன் ஏற்பாடு செய்வேன். நாம் யார் எப்படிபட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். இதற்குதான் இந்த மாநாடு. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும், என் மனைவியும் அடிக்கடி சிந்திப்போம். எனது நண்பர் பாலசுப்பிரமணியமும் இது பற்றி கடந்த 2 மாதங்களாக எழுதி, எழுதி பார்த்தார். ஆனாலும் சிலர் விஜயகாந்த் கட்சி பெயர் முடிவு செய்து விட்டு அதை அறிவிக்காமல் இருப்பதாக கூறினார்கள். உண்மையிலேயே நேற்று இரவுதான் இந்த பெயர் முடிவு செய்யப்பட்டது. மேலே உள்ள தெய்வம், உங்களது ஆசி ஆகியவற்றால்தான் இது முடிந்தது. உண்மையிலேயே எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதுவரை பெயர் முடிவு செய்யாமல் இருக்கிறோமே என்று குழம்பிதான் போனேன். ஆனாலும் எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குலதெய்வம், திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரின் கருணையினால் நம் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அந்த பெயரை இதோ அறிவிக்கிறேன். (இவ்வாறு கூறியப்படி `தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்' என்று விஜயகாந்த் `மைக்'கில் மும்முறை உரக்க சத்தமிட்டு கூறினார்) எத்தனையோ பெயர்களை வைத்து பார்த்தேன். ஆனாலும் இதுதான் சிறப்பாக இருந்தது. நான் தமிழக மக்களை நம்பி இருக்கிறேன். 90 சதவீதம் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிலும் 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம்தான் உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறேன். மாநாட்டை 2 நாட்கள் நடத்த வேண்டியதுதானே என்று சிலர் கேட்டனர். எனது ரசிகர்கள் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள். அதனால்தான் ஒரு நாள் மாநாட்டை கூட்டி இருக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் கூறினேன். நாள் முழுவதும் மாநாட்டில் அவர்கள் இருப்பார்களா? என்று கேட்டனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், எனது ரசிகர்கள் நிச்சயம் என்னோடு இருப்பார்கள். அவர்கள் ராணுவம் போன்றவர்கள். எப்போதும் நான் சொல்வதை கேட்பவர்கள். "வீழ்வதும் நாமாக இருப்பினும் வாழ்வது தமிழகாக இருக்கட்டும்.'' இவ்வாறு விஜயகாந்த் பேசினார். - SUNDHAL - 09-14-2005 Thanks to :Malaimalar.com - SUNDHAL - 09-14-2005 தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்று பெயர் வைத்தது ஏன்ப என்பது பற்றி விஜயகாந்த் மாநாட்டில் கூறியதாவது:- இந்திய திருநாட்டில் திராவிட மொழியில் பேசுகின்ற மாநிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே தேசியத்தில் `திராவிடம்' இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் `தேசியத்தை' கட்சியின் பெயரில் சேர்த்தேன். அதில் இடம் பெற்று இருக்கும் `முற்போக்கு' என்ற வார்த்தைக்கு ரசிகர்கள் மத்தியில் பின்தங்கிய எண்ணங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், இந்த இயக்கத்தை அவர்கள் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் `முற்போக்கு' என்ற வார்த்தையும் இதில் சேர்க்கப்பட்டது. இன்று மாலையில் நடக்கும் கூட்டத்தில் நான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுவேன் என்றார். - SUNDHAL - 09-14-2005 நடிகர் விஜயகாந்த் மன்ற மாநாட்டில் நடந்த ருசிகர சம்பவங்கள் வருமாறு:- * மாநாடு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. * மாநாட்டில் ரசிகர்கள் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. * மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, விஜயகாந்த் படங்கள் காணப்பட்டது. * மேடைக்கு காந்தி- காமராஜர் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. * மேடையின் ஓரத்தில் விஜயகாந்த் கும்பிட்டபடியும், இடது ஓரத்தில் கட்டை விரலை உயர்த்தி சவால் விடுவது போன்ற படங்கள் இருந்தது. * மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகிகள் விஜயகாந்தை இதய தெய்வமே, வருங்கால முதல்வர், வாஞ்சி நாதன், கரிபால்டி என அழைத்தனர். அவ்வாறு அழைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். * மாநாட்டு முதல் வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்கள் அமர்ந்து இருந்தனர். * பெங்களூரில் இருந்து வந்த சித்தர் யோகி சக்தி பாபாஜி சுவாமிகள் முன் வரிசையில் அமர்ந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். * மாநாடு தொடங்கியதில் இருந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டார். மேடையில் இருந்தபடி நிர்வாகிகளை உடனுக்குடன் அனுப்பி தொண்டர்களை ஒழுங்கு படுத்தினார். * மேடையில் விஜயகாந்தை தவிர திரை உலகை சேர்ந்த சிம்மாசனம் பட இயக்குனர் திருப்பூர் ஈஸ்வரன், துணை நடிகரும், விஜயகாந்தின் மெய்க்காப்பாளருமான விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். * மாநாடு நிகழ்ச்சிகள் கிரேன் காமிராக்கள் மூலம் படமாக்கப்பட்டு டிஜிட்டல் திரையில் ஒளி பரப்பப்பட்டது. * மாநாடு தொடங்கும் முன்பு மேடை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் தொண்டர் படையினர் ஈடுபட்டனர். ஆனால் மாநாடு தொடங்கியதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை கவனித்தனர். * மாநாடு தொடக்கத்தின் போது ஏராளமான ரசிகர்கள் அமருவதற்காக நாற்காலியை நோக்கி வந்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை தொண்டர் படையினர் அமைதிபடுத்தினர். * விஜயகாந்தின் ராசி எண் மேடையிலும் பிரதி பலித்தது. அதாவது மேடையில் முதல் வரிசையில் 5 நாற்காலிகள் மட்டும் போடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்த், நிர்வாகிகள், ராமு வசந்தன், சுந்தர்ராஜன், ரவீந்திரன், விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். * மேடையில் கருப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும், மாநாட்டு மைதானத்தில் சிகப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். * மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக வந்திருந்தனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர். * விழா மேடையில் கட்சி பத்திரிகையாக "அன்பு விஜயகாந்த்'' என்ற பத்திரிகை அறிவிக்கப்பட்டது. அதன் முதல் பிரதியை விஜயகாந்த் வெளியிட்டார். * மாநாட்டு மேடையில் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்ததும் அதிர் வேட்டுகள் முழங்கின. ரசிகர்களின் கரவொலிகளும் விண்ணை பிளந்தன. * மாநாட்டு பந்தலில் ரசிகர்கள் அமருவதற்காக பிளாஸ்டிக் தரை விரிப்புகள் தரையில் விரிக்கப்பட்டு இருந்தது. * மன்றத்தின் கொடியே கட்சிக் கொடியாக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. * கட்சி பெயரை அறிவித்ததும் விஜயகாந்துக்கு ரசிகர்கள் தங்க கிரீடம் சூட்டினர். அதோடு வெள்ளி செங்கோலையும், விஜயகாந்துக்கு வழங்கினார்கள். * கட்சி தொடங்கிய சில நிமிடத்தில் சென்னை மாவட்டம் சார்பில் கட்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மாநாட்டு மேடையில் வழங்கப்பட்டது. * மாநாட்டு வளாகத்தில் ரசிகர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. * குடிநீர் வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டில் செய்யப்பட்டு இருந்தது. * விஜயகாந்த் படம் வரைந்த கைக்குட்டைகள், கீ செயின்கள், படம் பொறித்த பேனாக்கள் விற்பனை செய்யப்பட்டது. அதனை மன்றத்தினர் ஆர்வமுடன் வாங்கினார்கள். |