Yarl Forum
அவளின் சோகங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அவளின் சோகங்கள் (/showthread.php?tid=3281)

Pages: 1 2 3


அவளின் சோகங்கள் - கீதா - 09-16-2005

அவளின் சோகங்கள்
-------------------------------------
அன்பானவனே உனக்கென்னாச்சு
காதலித்த மாதிரி நடித்தாயே
உன் மனதில் இடம் பிடித்த
என்னை ஒரு நிமிடத்தில்
தூக்கி எறிந்தாயே
உன் நினைவில் வாடும்
என்னை பலபெயர்கள்
மத்தியில் அவமானப்
பட விட்டாயே ----------
சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே------------
அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------
நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:


- MUGATHTHAR - 09-16-2005

Quote:அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------
நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------


ஜயோ ஜோ... இப்பிடி யெல்லாம் இழிச்ச. வாயா.. இருக்காதைங்கோ...


- கீதா - 09-16-2005

MUGATHTHAR Wrote:
Quote:அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------
நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------


ஜயோ ஜோ... இப்பிடி யெல்லாம் இழிச்ச. வாயா.. இருக்காதைங்கோ...









ஐயோ நான் இப்படியெல்லாம் இருக்கமாட்டன் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கின்றியலா ஆ :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ?

சொந்தமாக கவிதை எழுதிப் பார்த்தன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-16-2005

நாங்கள் மட்டும் உங்களை முட்டாள் என்று நினைக்கக்கூடாது
நீங்கள மட்டும் காதலர்களை முட்டாளென்று நினைத்து கவிதை எழுதலாமா?

கவிதை நல்லாயிருக்கு!
பாராட்டுக்கள்!


- கீதா - 09-16-2005

quote="ANUMANTHAN"]நாங்கள் மட்டும் உங்களை முட்டாள் என்று நினைக்கக்கூடாது
நீங்கள மட்டும் காதலர்களை முட்டாளென்று நினைத்து கவிதை எழுதலாமா?

கவிதை நல்லாயிருக்கு!
பாராட்டுக்கள்![/quote]









அதர்க்காக கவிதை Üடி எழுதக் Üடாதா ஆஆஆ
நீங்கள் அனாவசியமாக கர்ப்பனையை வளர்த்துக் கொள்ளாதிங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-17-2005

Quote:நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------


ஜோ அருமையான கவிதை. விஷம் குடித்தீர்களா? :evil: :twisted: :evil: :twisted: Cry


- inthirajith - 09-17-2005

விசம் குடிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை காதல் ஒன்றும் பொழுது போக்கும் இல்லை இனி எப்படி வாழ்வது அவள் இல்லாமல் என்று ஒரு சூனியவெளி உணர்வு வந்தால் புரியும் வாழ்வின் ஆதாரமே அவள் தான் என்று இருக்க அவளோ என்னுடன் தொடர்பு வைக்காதே என்றால் கவிதை சரி தான் வாழ்த்துகள்


- Mathan - 09-17-2005

காதல் ஒன்றும் பொழுதுபோக்கு இல்லை என்பது உண்மை தான், ஆனால் விசம் குடிப்பது முட்டாள் தனம் இல்லை என்று சொல்கிறீர்களா? அவள் இல்லாமல் ஒரு சூனியவெளி உணர்வு வந்தால் வாழ்வது கடினம் தான் ஆனால் அந்த காதலனுக்கு விட்டு சென்ற காதலி தவிர அம்மா. அப்பா, அக்கா, தம்பி என்று பாசத்துடன் பல உறவுகள் இருப்பார்களே? அவர்களை விட்டுச் சென்ற காதலிக்காக வேதனையில் ஆழ்த்துவது எந்த வகையில் நியாயம்? அப்படி பார்த்தால் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அவர்களும் மகனை, அண்ணாவை, தம்பியை இழந்த சோகத்தில் விஷம் குடிக்க வேண்டும்.


Re: அவளின் சோகங்கள் - Mathan - 09-17-2005

jothika Wrote:அன்பானவனே உனக்கென்னாச்சு
காதலித்த மாதிரி நடித்தாயே
உன் மனதில் இடம் பிடித்த
என்னை ஒரு நிமிடத்தில்
தூக்கி எறிந்தாயே
உன் நினைவில் வாடும்
என்னை பலபெயர்கள்
மத்தியில் அவமானப்
பட விட்டாயே
சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே

நன்றாக இருக்கு ஜோதிகா. தொடர்ந்து எழுதுங்கள்.

புலத்தில் இது போன்ற பல சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் 16-18 வயது பெண்கள் காதலில் வீழ்ந்து பின்னர் காதலுனுக்காக சொந்தத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேற தயாராகிறார்கள் அல்லது வெளியேறுகின்றார்கள். பின்பு சில சமயங்களில் காதலன் பின்வாங்கும் போது காதலியின் நிலைமை நிர்க்கதியாகிவிடுகின்றது. ஆண் ஓரிரு நாட்களுக்கு பிறகு சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்ற போதிலும் அந்த பெண்ணால் எங்கும் செல்ல முடிவதில்லை, அது அவளை தான் கூடுதாக பாதிக்கின்றது என்று சொல்ல வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது அதன் பின்பு வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கை முற்று முழுதாக இல்லாமல் போய்விடுகின்றது, அத்துடன் அவள் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் சந்தேக கண்ணோடு பார்க்கப்படும். பெரும்பாலும் பாடசாலை கல்வியும் அத்துடன் நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கப்படுவது கூட நடக்கின்றது. ஏற்கனவே மனசு காயப்பட்டிருக்கும் நிலையில் ஒரு திடீர் திருமணமும் சமுதாய நெருக்குதல்களும் மனதை இன்னும் எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.


- ப்ரியசகி - 09-17-2005

Quote:சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே------------
அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------

ஜோ..கவிதை சூப்பர்..
ஆனால் இந்த வரி ரொம்ப கஷ்டமா இருக்கு.. Cry
நான் எதுவும் சொல்லல..ஜோ..புத்திசாலிப்பெண் என்று எனக்கு நல்லாவே தெரியும்.. :wink:

Quote:விசம் குடிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை காதல் ஒன்றும் பொழுது போக்கும் இல்லை
அண்ணா...தற்கொலை செய்பவர்களி நான் முட்டாள்கள் என்று தான் சொல்வேன்...அவர்கள் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் விளங்கும். யோசிக்காமல் முடிவு எடுப்பது வாழ்க்கையில் செய்யக்கூடாத ஒன்று.
அதற்காக காதலை பொழுதுபோக்கு என்று சொல்லல..காதலிக்கணும்...தோல்வி வந்தா ஏத்துக்கணும்..அதற்காக கடவுள் தந்த ஒரே ஒரு வாழ்க்கையை விடுவது சுத்தப்பிழை.. :roll:

(நான் அனுபவிக்கவில்லை..அதனால் இப்படி சொல்கிறேன் என்று நினைக்கலாம்..அனுபவத்தில் சொல்வது 99% உண்மை என்றால்..அனுபவம் இல்லமல் சொல்வதில் ஒரு 25% ஆவது உண்மை இருக்காதா? :roll: Cry )


- அனிதா - 09-17-2005

ம்ம் இப்பத்தான் பார்த்தன்..
ஜோவின் கவிதை நல்லாருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோகமாவும் இருக்கு.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 09-17-2005

கவிதை நல்லா இருக்கு ஜோ வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.


- Vishnu - 09-17-2005

சோகமுடன் கூடிய ஜோவின் கவிக்கு பாரட்டுக்கள் :roll:


- Senthamarai - 09-17-2005

ஜோ வாழ்த்துகள்


- கீதா - 09-17-2005

quote="vennila"]
Quote:நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------


ஜோ அருமையான கவிதை. விஷம் குடித்தீர்களா? :evil: :twisted: :evil: :twisted: Cry[/quote]










என்னக்கா இது கவிதையி வரும் கட்டம் Confusedhock:

இருந்தாலும் உலகில் இப்படி சம்பவம் நடக்கின்றது தானேஅக்கா Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ நானேன் விசம் குடிக்கப் போகின்றன் ? :evil: :roll:


Re: அவளின் சோகங்கள் - கீதா - 09-17-2005

Mathan Wrote:
jothika Wrote:அன்பானவனே உனக்கென்னாச்சு
காதலித்த மாதிரி நடித்தாயே
உன் மனதில் இடம் பிடித்த
என்னை ஒரு நிமிடத்தில்
தூக்கி எறிந்தாயே
உன் நினைவில் வாடும்
என்னை பலபெயர்கள்
மத்தியில் அவமானப்
பட விட்டாயே
சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே

நன்றாக இருக்கு ஜோதிகா. தொடர்ந்து எழுதுங்கள்.

புலத்தில் இது போன்ற பல சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் 16-18 வயது பெண்கள் காதலில் வீழ்ந்து பின்னர் காதலுனுக்காக சொந்தத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேற தயாராகிறார்கள் அல்லது வெளியேறுகின்றார்கள். பின்பு சில சமயங்களில் காதலன் பின்வாங்கும் போது காதலியின் நிலைமை நிர்க்கதியாகிவிடுகின்றது. ஆண் ஓரிரு நாட்களுக்கு பிறகு சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்ற போதிலும் அந்த பெண்ணால் எங்கும் செல்ல முடிவதில்லை, அது அவளை தான் கூடுதாக பாதிக்கின்றது என்று சொல்ல வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது அதன் பின்பு வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கை முற்று முழுதாக இல்லாமல் போய்விடுகின்றது, அத்துடன் அவள் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் சந்தேக கண்ணோடு பார்க்கப்படும். பெரும்பாலும் பாடசாலை கல்வியும் அத்துடன் நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கப்படுவது கூட நடக்கின்றது. ஏற்கனவே மனசு காயப்பட்டிருக்கும் நிலையில் ஒரு திடீர் திருமணமும் சமுதாய நெருக்குதல்களும் மனதை இன்னும் எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.









ம்ம் நீங்கள் சொல்லுறதும் சரிதான் அண்ணா உலகில் எவளவோ வித்தியசாமாகத்தானே நடக்குது


- Rasikai - 09-19-2005

இதுதான் இன்றைய இளைஞர்களின் காதல். ம்ம்ம் அதற்காக விஷம் குடிப்பது என்பது முட்டாள்தனம். ஜோ. இன்றைய சூழல்களின் இளைஞர்களின் காதலை வெகு அழகாக கவியில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜோ. தொடர்ந்து எழுதுங்கள்.


- lollu Thamilichee - 09-19-2005

வணக்கம்

கவிதை நண்றாக இருக்கு..!!
என்று ஒரு வரியில் நிப்பாட்ட மாட்டேன்..!!

கவிதை எழுதுவதற்கும் கருத்து வெளியுடுவதற்கும்..
சொந்த அனுபவம் வேண்டும் என்று இல்லை..
சுற்று சூலலில் நடப்பதும் அனுபவம் தானே??..

தற்கொலை செய்பவர்கள் எல்லாம் முட்டாள்
என்று நான் நினைக்கவில்லை..
தற்கொலை செய்வதற்கு தைரியம் வேண்டும்..

தற்கொலை தற்கொலை தற்கொலை
எம்மவர்களுக் இந்த 4 எழுத்துதான் தெரியும்
ஒரு மனிதன் எவ்வளவு துடித்து வேதனைப்பட்டு
வேறுப்பு வந்து தற்கொலைக்கு போறான்???
கண்ணீர் கூட மனம் கசிந்து வருகிறது..
அதையே ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்கள்..

தற்கொலை பற்றியா தெரிய போகுது???


- narathar - 09-19-2005

என்ன லொள்ளு எதோ தற்கொலை செய்தவர் மாதிரிப் பேசுறியள்,வாழ்க்கய எதிர்கொள்ள ஏலாதாவர்கள் தான் தற்கொலை செய்வது.வாழ்க்கையைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏலாத அதைரிய சாலிகளே தற்கொலை செய்கினம். நீங்க உயிரோட தானே இருக்கிறியள் ,அப்ப எப்படி தற்கொலையப் பற்றி அனுபவிச்ச மாதிரி எழுதுறியள்.சோகத்தில் இருப்பவர்களை உங்கள் கருத்துக்கள் தற்கொலையை நோக்கித் தள்ளும்,ஆகவே இப்படி தற்கொலையை நியாயப் படுத்தி எழுத வேண்டாம்.வாழ்க்கயில் நம்பிக்கை வருகிற மாதிரி ஊக்கம் கொடுங்கள்.


- கீதா - 09-19-2005

ரசிகை அக்கா லொள்ளு தழ்ழிச்சி நாரதாஅண்ணா இவர்hளுக்கு நன்றிகள்