Yarl Forum
அது கெளரவம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அது கெளரவம் (/showthread.php?tid=328)



அது கெளரவம் - வர்ணன் - 04-07-2006

<b>

எண்பது தமிழனை கொன்றுவிட்டு
நான் அவனில்லை - என்றே
சிங்களன் கால் கழுவு!

குத்தரிசி சோறு வேணாம்
ஈர பலாக்கை போதுமென்றே
அலை- அலைந்து திரிந்து
அசிங்கமாய் திரி!

அப்பனையும் ஆத்தாளையும்
ஐந்து பத்திற்காய் கொல்லு!
கொன்றபின் பன்சலைக்கு சென்று
சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது!

புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு?
புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால்
உன் குரல் வளையே சிங்களனுக்கு
அடுத்த இலக்கு - இதை
நம்பினால் நீ நம்பு!

தமிழீழ விடுதலை புலியை
அழிப்பதா அவன் குறி?
அட தடுமாற்றகாரா
தமிழன் தலை எடுப்பதுதாண்டா
அவன் வெறி!

மரத்தோடு மரமாய் ஒட்டி
தேவாங்கு போல தூங்கு!
செருப்புக்கு ஆசை படுறாய்
உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது!
கவனி- !

நாளை - நாயை கண்டால்
சிங்களன் கல்லெடுப்பானோ இல்லையோ
உன்னை கண்டால் ---
கொல்லாமல் - உறங்கவே மாட்டான்!

மகேசன் என்ற நீ - மகிந்த என்று
மாறினாலும் - தமிழன் தமிழன் தான்
அவனுக்கு- போடா - போ!

சிங்கத்தின் வால் அழைவது
ஒரு பிழைப்பா?
செண்பகத்தின் தலையாய் இரு
அது கெளரவம்!</b>


- தூயவன் - 04-07-2006

எத்தனை பேருக்கு இது புரியப் போகின்றது. புரிந்தாலும் அவன் காட்டும் பணம் கண்ணை மறைக்குமே!!

நல்ல கவிதை நடைகள். வாழ்த்துக்கள் வர்ணன்


- sWEEtmICHe - 04-07-2006

வாழ்த்துக்கள் வர்ணன் !! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Sujeenthan - 04-07-2006

மிகவும் அருமையான வரிகளைக்கொண்ட நல்ல கவிதை. வாழ்த்துக்கள் வர்ணன்.


- கீதா - 04-07-2006

அருமையான கவிதை நன்றி வர்ணன்


- Selvamuthu - 04-07-2006

தமிழ்த் துரோகிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் நல்ல கவிதை.
சுணை இருந்தால்தானே அவர்களுக்கு இவை உறைக்க.


- வர்ணன் - 04-08-2006

ம்ம் தூயவன் ஏன் இந்த கவிதை நான் எழுதினன் எண்டு உங்களுக்கு ஓரளவு தெரியும் -
எல்லாம் அந்த உலக புகழ் அறிவாளி இம்சையால - நன்றி!

நன்றி ஸ்வீட்-
நன்றி சுஜீந்தன் - (நீங்க தேசத்தை நேசிப்பவர் என்பதை - உங்க லோகோ - சொல்லுது)

நன்றி கீதா ( ஆமா எங்க போனிங்க இவ்ளோ நாள்? களத்தில எல்லாரும் - நீண்ட இடைவெளிக்கு பிறகு - உங்கள பார்க்கிறோம்!)

நன்றி ஆசிரியர் - இவர்களை - திருத்தவே முடியாது - திருந்தவும் மாட்டார்கள் - சும்மா - கோவத்தில ஏதும் எழுதிட்டு போறதுதான்! 8)


- RaMa - 04-08-2006

மீண்டும் ஒரு நிஐ கருத்தை கவிதை வடிவினில் கொண்டு வந்திருக்கிறீர்கள் வர்ணன். வாழ்த்துக்கள்.


- Nitharsan - 04-08-2006

ஆயிரம் கவியேழுதியும் இவர் திருந்த போவதில்லை. வர்னன். உங்கள் கவித்திறன் வீச்சு சிறப்பு. ஆனாலும் எருமையில் பெய்யும் மழையேன இவர் திருந்த போவதில்லை...


- eezhanation - 04-09-2006

எடுத்துக்கொண்டவிடயத்துக்குப்பொருத்தமான கவிநடையும்,உள்ளக்குமுறல்களை அப்படியே வெளிக்கொண்டு வரும் வார்த்தை வீச்சுக்களும் அருமை. வாழ்த்துக்கள் வர்ணன்.நல்லதொரு கவிதையைத்தந்திருக்கின்றீர்கள்.


நன்றி - anuraj.nl - 04-09-2006

நன்பரே
தமிழனுக்கு தலைவலியே இப்படிப்பட்ட துரோகிகள்தானே.
எதிரியை விட இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்
துரோகிகளுக்காய் நீங்கள் எழுதிய வரிகள்
மிகவும் அருமை.
உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள்
வாழ்த்துக்கள்


- வர்ணன் - 04-10-2006

நன்றி ரமா - நிதர்சன் - ஈழநேசன் - அனுராஜ்! 8)


- அனிதா - 04-10-2006

கவிதை அருமை...வாழ்த்துக்கள் வர்ணன்....!


- jcdinesh - 04-10-2006

உங்கள் கவிவரிகள் அருமையாக உள்ளது நண்பா.....

"அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்"

தொடர்ந்து எழுதுங்கள் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களின் நன்பர்களாவது பார்த்து விட்டு அவர்களிடம் சொல்லட்டும்.....


........... - வர்ணன் - 04-11-2006

..................
...................


- வர்ணன் - 04-11-2006

நன்றி அனிதா- டினேஸ்! 8)