![]() |
|
அப்பத்தா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அப்பத்தா (/showthread.php?tid=3175) |
அப்பத்தா - Muthukumaran - 09-25-2005 [b]இலையுதிர்காலம்.. பாதையெங்கும் உதிர்ந்த சருகுகள்.. காத்திருக்கிறது சருகான இலையொன்று மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட.... சருகுகள் எல்லாம் குப்பைகள் அல்ல அது பசுமையின் பரிணாமம்.... பெண்மையின் தன்மையாய் செடியாய் இருக்கையிலே நிழல் தந்தவள் நீ.. வயது பதினான்கில் தாரமாய் ஆனவள் நீ.. அணைக்காத உன்வீட்டு அடுப்பு... பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி ஈரமான உன் மனது.. சித்தமருந்துகள் அரைத்து அரைத்து அழகான உன் கைகள்.... உலகின் சுழற்சியில் துக்கங்களும் நேசம் கொண்டன உன்னிடம்... திடீரென்று ஓய்வெடுத்த உன்னவரின் இதயம் திசைமாறிய காற்றாய் உன் வாழ்வு... ஈன்ற தலைமகனை மடியெடுத்தாய் மறுபடியும் சடலமாய்...... உன் சோகம் சொல்ல முடியாமல் தடுமாறுகிறது என் தமிழறிவு... எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை...... நீ கூறிய பாட்டிகதை முதல் கைலாயத்தில் தாத்தாவைப் பார்த்ததாக கூறிய செய்திவரை... அவை கற்பனை அல்ல நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான வாழ்வது........ வயது உயர உயரம்குன்றி குழந்தையாய் உன் உருவம் எதை உணர்த்துகிறாய்..... மறைந்த பார்வை மறந்த தன்னிலை குறைந்த உணவு குழறிய பேச்சு மரணத்தோடும் வாழ்கிறாயே.... சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில் என்னென்ன நினைக்கிறாய் .... பிறர் சொல்ல கடினம்தான்.. எனக்கு மட்டும் தெரியும் உன் மெளனப் பிராத்தனை..... பேத்திகளின் வயிற்றில் பிறந்திடவேண்டுமென்ற அந்த - Thala - 09-25-2005 கவிதை நல்லாருக்கண்ணா.. ஆனா படிச்சு முடிக்கேக்க மனசுக்க ஏதோ பாரமா இருக்கு... உங்களுக்கே இது நியாயமா?? <b>எப்பிடியானாலும் வாழ்த்துக்கள்</b>..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Muthukumaran - 09-25-2005 நன்றி தலா. நான் எழுதிய கவிதைகளிலே எனக்கு மிகவும் பிடித்த மன நிறைவைத் தந்த கவிதை இது... - RaMa - 09-25-2005 மிகவும் அருமை. நீங்கள் சொல்வது போல் முதியவர்களின் உடல் குறுகி இருக்கும் போது அதுவும் வறுமையில் இருக்கம் முதியவர்களை பார்க்கும் போது.... வார்த்தைகள் இல்லை - KULAKADDAN - 09-25-2005 அருமையான கவிதை தொடருங்கள் - Birundan - 09-25-2005 கவிதை நன்று வாழ்த்துக்கள். - அனிதா - 09-25-2005 கவிதை நல்லாயிருக்க்கு ..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-26-2005 அருமையான கவிதை..சூப் - Rasikai - 09-26-2005 மனதை உருக்கும் மிக அருமையான கவைதை நன்றி முத்துக்குமரன். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத |