![]() |
|
ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்! (/showthread.php?tid=2887) |
ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்! - preethi - 10-16-2005 ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்! (ரொரன்ரோ கனடா) <b>காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட 'தமிழக அந்தணர் வரலாறு" என்ற நு}லில் தமிழர்களை, குறிப்பாக ஈழத்தமிழர்களைக் குரங்குகள் என வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. </b> விவரம் வருமாறு: 'திராவிட சமயம்" என்ற அமைப்பை நடத்தி வருபவர் பேராசிரியர், முனைவர் தெய்வநாயம் அவர்கள். அவர் தற்போது கனடாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை அறிமுகஞ் செய்யும் விழா ஸ்காபுரோவில் முழக்கம் சதுரங்கக் கழகப் பணிமனையில் நடைபெற்றது. முனைவர் தெய்வநாயம் அவர்கள் 'சிவஞானபோதம்" என்ற சைவசித்தாந்த நு}லுக்கு உரையும் எழுதி யிருக்கின்றார். இவர் பல்கலைக்கழகம் தழுவிய ஆய்வுகளும் பல செய்து வருகின்றார். சைவசமயமே உலக சமயங்களுக்கு எல்லாம் முதலானது (இந்து சமயம் பின்னர் திணிக்கப்பட்டது) என்றொரு செய்தியையும் முன் நிறுத்தி இயங்கி வருகின்றார். அவர் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு: 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் உதவியுடன் <b>தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் காஞ்சிமடம் ஆகியவை இணைந்து 'தமிழக அந்தணர் வரலாறு" என்ற ஆயிரம் பக்கங்கள் கொண்ட நு}லை வெளியிட்டனர். அந்த நு}லில் தமிழக வரலாறும் தமிழர் வரலாறும் திரித்து எழுதப்பட்டுள்ளது. அத்தோடு அந்நூலில், தமிழர்களைக் குறிப்பாக ஈழத்தமிழர்களைக் குரங்குகள் என்று சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. நு}லில் தமிழகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் சொச்சைப்படுத்தி எழுதியமைக்கு 'சங்கரமடம்" மன்னிப்புக் கோரவேண்டும் என்று நாம் போராட்டம் நடத்தினோம்.</b> அதற்குப் பலன் ஏதும் கிட்டவில்லை. அத்தோடு அந்த நு}லின் மறுபதிப்பில் அந்த நு}லுக்கு இலங்கையிலும் கனடாவிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார். அந்த நு}லினை எடுத்துக்காட்டிய முனைவர் அவர்கள், ஈழத்தமிழர்களையே இழிவுபடுத்தி உள்ள நு}லை ஈழத் தமிழர்கள் வாங்கலாமா? என்று கேட்டுப்பேசினார். அதற்குப் பதிலளித்துப்பேசிய படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு. வே. தங்கவேலு அவர்கள், இந்த நு}ல் இலங்கையிலோ அன்றி கனடாவிலோ ஒருபிரதி கூட எந்தத் தமிழ்க் கடையிலும் விற்கப்படவில்லை. ஆக அந்த நு}லின் மவுசை ஏற்றவே காஞ்சிமடக் கும்பல் இவ்வாறு தெரிவித்து இருக்கின்றது என்றார். பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள் தமிழர்களுக்காக, சங்கரமடத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்குப் பாராட்டுத் தெரிவித்த படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள், இந்தியாவுக்கு வெளியில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் இனிமேல் சங்கர மடக்காரர்களோ அன்றி காஞ்சி சங்கராச்சாரிகளோ கால்வைத்தால், அல்லது தமிழ்த்தேசிய மறுப்பாளர்கள் கால்வைத்தால், போராட்டம் வெடிக்கும் என்ற உத்தரவாதத்தை எங்களால் தரமுடியும் என்றார். எங்களைக் குரங்குகள் என்று வருணித்துவிட்டு எங்கள் பணத்தைச்சுரண்டவும் இங்கே வர நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கக் கழகம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அங்கு கருத்துரை வழங்கிய முழக்கம் ஆசிரியர் திரு அவர்கள்: <b>தமிழீழத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் சிங்களவர்களால் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்டபோது, இந்த சங்கரமடக்காரர்கள் எதிர்ப்புக்கள் ஏதும் காட்டாதபோதே அவர்களை ஈழமக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் என்று குறிப்பிட்டார்.</b> தமிழர்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை எதிர்கொள்ளத் தமிழர்கள் தயாராக உள்ளதாகக் கூடி இருந்த உணர்வாளர்கள், பேராசிரியருக்கு உணர்வுத்தென்பளித்து, மதங்கள் தொடர்பாக, நாம் தந்தை பெரியாரின் பாதையையே மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்று விரும்புவர்கள் என்று தெரிவித்தனர். - kuruvikal - 10-16-2005 ஏன் அவங்கள கண்டிக்கனும்..சரியாத்தானே சொல்லி இருக்காங்க..! உண்மையைச் சொல்லுறது.. அவங்க தனிப்பட்ட சுதந்திரம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 10-16-2005 இராமயணத்திலை இராமருக்கு உதவியா வந்த குரங்குகள் இன்னும் ஈழத்திலை மிச்சமிருக்கும் எண்ட நினைப்பிலை அவையள் எழுதியிருக்கலாம் ஈழத்திலை குரங்குகள் இருக்கட்டும் விடுங்கோ அந்த புத்தகத்திற்கு ஒரு யானை உதவியிருக்கு(யெயலலிதா) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-16-2005 kuruvikal Wrote:ஏன் அவங்கள கண்டிக்கனும்..சரியாத்தானே சொல்லி இருக்காங்க..! உண்மையைச் சொல்லுறது.. அவங்க தனிப்பட்ட சுதந்திரம்...! :wink: <!--emo& சில சமயங்களில் அவரவர் தமக்கு உண்மை என்று படுவதை சொல்லும் போது எதிர்கப்படுகிறது தானே? அது தனிபட்ட சுதந்திரமாக கருதப்படவில்லையே? உ+ம் தங்கர் பச்சான் மற்றும் குஷ்பு விடயங்கள் :? - iruvizhi - 10-16-2005 Mathan Wrote:kuruvikal Wrote:ஏன் அவங்கள கண்டிக்கனும்..சரியாத்தானே சொல்லி இருக்காங்க..! உண்மையைச் சொல்லுறது.. அவங்க தனிப்பட்ட சுதந்திரம்...! :wink: <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 10-16-2005 ஏன் சிரிக்கிறீங்க இருவிழி? தனியே முக அடையாளங்களை போடாமல் உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்? - iruvizhi - 10-16-2005 அதாவது மதன் நான் சொல்ல விளைந்தது இதனைத்தான். பிரீத்தியின் கருத்துகள் பலவற்றை நான் பார்த்திருக்கின்றேன். மிகவும் சரியான முறையில் சிந்திக்கின்றார். ஆனால் பார்பனர்மீது அவருக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வு சிலவேளைகளில் அவர் எல்லை மீறி செல்வதைப்போல தோன்றும். ஆனால் அவரின் கறுத்துக்களில் உண்மைகள் பல இருப்பதைப் போலவே நானும் உணருகின்றேன். அதே போலவே குருவிகளும் களத்தில் பல அருமையான கருத்திக்களை பதிகின்ற ஒரு நபர். குருவிகள் கூறும் சிலகருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றில் இதுவும் ஒன்று. அதற்கு நீங்கள் சரியான பதில் ஒன்றை கொடுத்திருந்தீர்கள். அதுவும் சரியான நேரத்தில். குருவிகள் உங்கள் கருத்தை தனக்கு சாதகமாக்கி தனது கருத்தினை முன்வைப்பார் என்னும் நம்பிக்கையோடு முடிக்கின்றேன். - kurukaalapoovan - 10-16-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=6890&start=60 Vasampu Wrote:பொதுவாக 5 ரூபா திருடினாலும் திருட்டுத்தான் 50 ரூபா திருடினாலும் திருட்டுத்தான். நன்றி, வணக்கம் :wink: |