Yarl Forum
காதல் மயக்கம் ஏன்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதல் மயக்கம் ஏன்? (/showthread.php?tid=2873)



காதல் மயக்கம் ஏன்? - SUNDHAL - 10-17-2005

காதல் ஓர் இன்பமான உணர்வு..* காதலின் போது மகிழ்வான உணர்வுகளே தோன்றுகின்றன. காதலுக்காக எந்த வலியையும் காதலர்கள் பொறுத்துக் கொள்கிறhர்கள். இதெல்லாம் ஏன்?
இளமையில் இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்லிவிட முடியாது.
இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கவனமாகக் கேளுங்கள்.

காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது, நெஞ்சு படபடப்பு, கைகால்கள் வியர்த்தல், வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல, மயிர்க்கூச் செறிவது போல உணர்வுகள், அர்த்தமில்லாத சொற்களைப் பேசிக் கொண்டு,, மொத்தத்தில் ஏதோ நடக்கிறது, இதமாய் இருக்கிறது.. இறக்கை முளைக்கிறது... இதயம் பறக்கிறது என்பீர்கள்.

இப்படி காதல் உணர்வுகள் மூளையில் தொடர்ச்சியான ஒரு சங்கிலி உணர்வு போன்ற ரசாயன மாற்றங்களை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மனதளவிலும், உடலளவிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மூளையின் செய்தி மற்றும் தொடர்பு பரிமாற்ற வேலைகளுக்கு மட்டும் 100 பில்லியன் நியூ ரான்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர நியூரோ பெப்டைட்ஸ் என்ற அமிலங்கள் உடல் முழு தும் உள்ளன. இவற்றின் உதவியால் உணர்வுகள் மூளை வரை எடுத்துச் செல்லப்பட்டு, விளைவு களை உண்டாக்க உறுப்புகளுக்கு கடத்தப்படுகின்றன. தற்போது உடலில் அறுபதுக் கும் மேற்பட்ட நியூரோ பெப்டைட்ஸ் அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நமக்கு வருத்தமோ, மகிழ்வோ, காதலோ உண்டாகும்போது அந்த உணர்வுகளை இந்த அமிலங்கள் தான் எடுத்துச் செல்கின்றன. பிரான்சிஸ் கிரிக் மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ச்சி செய்து இந்த கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறhர்கள்,

நரம்புச் செல் கூட்டத்தின் தொகுதியில் உண்டாகும் செயல்விளைவுகள்தான்; நமது எண்ணங்களின் தொகுதி என இந்த ஆய்வாளர்கள் கூறுகிறhர்கள்
காதலின்போது பெனில்எதிலமைன் என்ற ரசாயனப் பொருள் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. இதுதான் இதயத்தைப் பறக்க வைக்கிறது. அந்த நேரத்தில் படபடப்பு ஏற்படுகிறதே ஏன் தெரியுமா?

அட்ரீனலின் சுரப்பி அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதனால் படபடக்க ஆரம்பித்து விடுகிறது.

காதலிக்கும்போது எண் டார்பின் என்ற ரசாயனப் பொருள் அதிகமாகச் சுரப்பதால் வலியை மறக்கச் செய்கிறது. இதனால் தான் காதலின்போது விதவிதமான உணர்வுகள் தோன்றுகின்றன என்கிறhர்கள். உங்களுக்கு எப்படி என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ThanksBig Grininakaran............


- kuruvikal - 10-17-2005

நன்றி சுண்டல்..! இப்படி சிலதுகள் நாமும் வாசிச்ச்சனாங்கள்..இங்க இப்படியானதுகள் எழுதிப் பிரயோசனம் இல்ல..தூசணம் எழுதினாத்தான் சனத்துக்கு விளங்கும்...அதுதான் புதுமை..! என்றாலும்...நீங்க துணிஞ்சு ஒட்டிட்டேள்...! மீண்டும் நன்றிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 10-17-2005

ம்ம் தகவலுக்கு நன்றி சுண்டல்


- inthirajith - 10-17-2005

கண்ணுக்கு புலப்படாத காதல் பற்றி சொன்ன ஒளவையே , விஞ்ஞானம் சொல்லாதது ஒன்று உண்டு .அன்பு " காதல் போல் ஒன்று கடவுள் போல் உணர தான் முடியும் உருவம் இல்லை தானே"


- kuruvikal - 10-17-2005

inthirajith Wrote:கண்ணுக்கு புலப்படாத காதல் பற்றி சொன்ன ஒளவையே , விஞ்ஞானம் சொல்லாதது ஒன்று உண்டு .அன்பு " காதல் போல் ஒன்று கடவுள் போல் உணர தான் முடியும் உருவம் இல்லை தானே"

காதல் மனதைப் புனிதப்படுத்தும்...! எளிமையாக்கும்..! இனிமையாக்கும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Vasampu - 10-18-2005

சுட்டுப் போட்டதற்கு நன்றி சுண்டல். ( சின்ன வயசாம் சிந்தனையெல்லாம் பெரிசாயிருக்கு )
:roll: :roll:


- Netfriend - 10-18-2005

காதல் மக்கம் ஏன்..... எல்லாம் அதுக்குத்தான்... காமமே :|


- கரிகாலன் - 10-18-2005

தகவலை சுட்டுத் தந்த சுண்டலுக்கு நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
காதல் ஹ்ர்மோன் கோளாறு எண்டு எங்கோ படித்த ஞாபகம்


- MUGATHTHAR - 10-18-2005

அட இதைப் படிச்சுப் போட்டுதான் சில பெட்டையள் றோட்டிலை தங்களை பாத்து பேசாமல் போற பெடியளுக்கு சொல்லுறவை பெடிப்பிள்ளைக்கு ஹோமோன் வேலை செய்யேலைப் போல கிடக்கெண்டு அது உண்மைதான் போல என்ன....


- RaMa - 10-18-2005

சுண்டல் தகவலுக்கு நன்றி


- SUNDHAL - 10-18-2005

Vasampu Wrote:சுட்டுப் போட்டதற்கு நன்றி சுண்டல். ( சின்ன வயசாம் சிந்தனையெல்லாம் பெரிசாயிருக்கு )
:roll: :roll:


இந்த வயசில படிக்க வேண்டியது தானே இதெல்லாம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-18-2005

தகவலுக்கு நன்றி சுண்டல்


- கரிகாலன் - 10-18-2005

அப்பிடித்தான் போல கிடக்கு முகம்ஸ் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- கீதா - 10-18-2005

நன்றி தகவலுக்கு சுண்டல் அண்ணா