Yarl Forum
அனுபவம்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அனுபவம்..! (/showthread.php?tid=2710)



அனுபவம்..! - kuruvikal - 10-29-2005

<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>

(யாவும் கற்பனை- உல்டா கவி)


- suddykgirl - 10-29-2005

ஆகா அண்ணா நன்றாக இருக்கு

ஆனால் ஏன் கற்பனை என்று சொல்லி நலுவப் பார்க்கின்றீர்கள்


Re: அனுபவம்..! - tamilini - 10-29-2005

[quote=kuruvikal]<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>

(யாவும் கற்பனை- உல்டா கவி

பஸ்ஸிற்காகவா காத்திருந்தீங்க. நக்கல் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 10-29-2005

கண்டுபிடிச்சிட்டிங்கள்...! ம்ம்ம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- shanmuhi - 10-30-2005

உல்டா கவி அருமை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-30-2005

கவி நல்லா இருக்கு. ஆமா அது என்னண்ணா உல்டா கவி என்றால்? :roll:


- அனிதா - 10-30-2005

உல்டா கவி நல்லாருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 10-30-2005

வெண்ணிலா Wrote:கவி நல்லா இருக்கு. ஆமா அது என்னண்ணா உல்டா கவி என்றால்? :roll:

கவிக்கு நன்றி குருவிகள்
ஆமா உல்டா கவி என்றால் என்ன?


- Birundan - 10-30-2005

அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:


- kuruvikal - 10-30-2005

சரியாச் சொன்னீங்க...உல்டா பற்றி... அல்டா பற்றி நாங்களும் இன்றுதான் அறிஞ்சம்..! நன்றி பிருந்தன்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Vasampu - 10-31-2005

Birundan wrote:
அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:

பிருந்தன் உங்களது விளக்கம் தவறானது. எங்கடை தமிழ் வாத்தியார் பிரம்போட வரப்போறார்.

உல்டா என்பது நகல் அல்ல.

அசலிலிருந்து எமக்கேற்றமாதிரி திருகுதாளம் செய்து அசல்போல் உருவாக்குவதே உல்டா. ஆனால் அசலை அதேபோல் பிரதி செய்வதே நகல். எனவே இரண்டும் ஒன்றல்ல.


- வெண்ணிலா - 10-31-2005

அட இவ்வளவு விளக்கமா உல்டாக்கு. ம்ம் நன்றிங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ஆனால் அல்டா உல்டா என குழப்பிட்டீங்க போங்க.


- Rasikai - 10-31-2005

குருவி உங்கள் பஸ் காத்திருப்புக்கவி சூப்பர். ஆகா பிருந்தன் நன்றிங்கோ உங்கள் உல்டா அல்டா விளக்கத்துக்கு


- ப்ரியசகி - 11-01-2005

அழகான கவி குருவி அண்ணா...உல்டா..அருமை.
ம்ம்...வாழ்க்கையில் நான் யாருக்காகவும் அப்படி கால் நோக காத்திருந்ததில்லை...பஸ் அந்த இடத்தை தட்டிச்சென்று விட்டது... :evil: :evil:
அதுக்காக எனக்கு குருவி அண்ணா போல கவி வராது..கோவம் தான் வரும் :evil: :evil: :evil:


Re: அனுபவம்..! - kavithan - 11-02-2005

[quote=kuruvikal]<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>

(யாவும் கற்பனை- உல்டா கவி

அடடா.. இதுவும் நடக்குதா.. அழகி ..? பேர் என்ன என்று தெரிஞ்சுக்கலாமோ.. ம்ம் கவிகதை நன்று அண்ணா வாழ்த்துக்கள்


- Birundan - 11-02-2005

Vasampu Wrote:Birundan wrote:
அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:

பிருந்தன் உங்களது விளக்கம் தவறானது. எங்கடை தமிழ் வாத்தியார் பிரம்போட வரப்போறார்.

உல்டா என்பது நகல் அல்ல.

அசலிலிருந்து எமக்கேற்றமாதிரி திருகுதாளம் செய்து அசல்போல் உருவாக்குவதே உல்டா. ஆனால் அசலை அதேபோல் பிரதி செய்வதே நகல். எனவே இரண்டும் ஒன்றல்ல.

அதானே வசம்பு நான் சொன்னேன் பிரதி அல்லவென்று,
அட..... இது தமிழில் வேறு இருக்கா? என்வாத்தி எனக்கு சொல்லிதரவில்லை, அல்லது வசந்தமாளிகைக்கு போய் இருப்பம், எனக்கு இது கேள்விஞானம்தான்.