![]() |
|
உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும் (/showthread.php?tid=2605) |
உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும் - kurukaalapoovan - 11-05-2005 தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சரியான வரைவிலக்கணத்தை வகுக்காத சர்வதேச சமூகம், சூழலுக்கு ஏற்ப எது தனக்கு சாதகமாக அமைகிறதோ அதற்க்கேற்றவாறு தனது நகர்வினை மேற்கொள்கிறது. பல சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்கள் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டிருந்தனர். சர்வதேசத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் சர்வதேச சமூகத்தின் சொல்லுக்கு இணங்கி போக மறுத்ததினால் பயங்கரவாதிகளாக வெளிப்படுத்தப்பட்டார்கள். இது தொடர்பாக உலக வரலாறு எமக்கு சிறப்பான சில உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இன்று உலகின் முதன்மையாக மதிக்கப்படும் மனிதரான முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் முன்னர் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டமையும் இன்றைய உலகின் முதற்பயங்கரவாதி ஒசாமா பில்லேடன் முன்னர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக வர்ணிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாராணங்கள் ஆகும். சர்வதேச சமூகம் என்பது கூட முழு உலகத்தையும் குறிக்கின்ற பொருளாக இருந்த போதும் இதன் செயற்பாட்டாளர்கள்களாக வல்லமை பொருந்திய குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளே திகழ்ந்து வருகின்றன. இதில் சிந்திக்க வைக்கின்ற விடயம் யாதெனில், விடுதலை போராட்டம், புரட்சி மூலம் விடிவுபெற்ற நாடுகளே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க கங்கணம் கட்டி நிற்கின்றன. மிக வலிமை பொருந்திய சர்வதேச சமூகம், மற்றுமொரு சவாலான சூழல், நசுக்க முனைகிறது என்ற வார்த்தைப் பதங்கள் ஆழமாக சிந்திக்க தூண்டும். சிலருக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். உண்மை என்னவெனில் எமது போராட்டத்திற்கான சதிவலையே சர்வதேச சமூகத்தினால் பின்னப்பட்டுள்ளது. ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் தனித்து ஆயுதப் போர் மட்டும் என்றில்லை. அதையும் தாண்டி பல பரிமாண போர் வியூகங்கள் உண்டு. இவ்வகையான பரிமாணங்களை உலகுக்கு தமிழர்படை உணர்த்தியுள்ளது. அதேவேளை தமிழர்படையும் அந்த வகையான உலகின் போர்முறையை உணர்ந்து வருகிறது. இதற்கேற்றபோல் சில ஆரம்ப மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் உண்டு. அனுபவமே சிறந்த ஆசான். இந்த அனுபவம் தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பலம் பொருந்திய தூணாக விளங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகம் மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கோட்பாடுகளை உருவாக்கி காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம் என்றும் எதிலும் நடுநிலையோடு அல்லது நேர்மையோடு செயல்படும் என எதிர்பார்ப்பது மடைமைத்தனம். நோர்வே எமக்காக நிற்கும் என கனவு காணவும் கூடாது. அமெரிக்கா சிறிலங்காவோடு இணைந்து எமக்கு அடிக்க வருவான் என கற்பனையும் பண்ணக்கூடாது. தமிழ் தேசியத் தலைவர் குறிப்பிடுவது போலு ‘பலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது.” உலக ஒழுங்கு என்பதே பலத்தில்தான் சுழல்கிறது. இதனை மறுத்தால், இன்னொரு வடிவத்தில் பார்ப்போம்.... ... http://sooriyan.com/index.php?option=conte...id=2477&Itemid= - cannon - 11-05-2005 Quote:தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது. *காலத்துக்கு காலம் மாறிவரும் சர்வதேச சூழல்! இவற்றை எதிர்கொள்வதற்கு புலத்திலுள்ள நாம் என்னத்தைச் செய்தோம்??? *இந்த சர்வதேச அரசியலை/அரசியல்வாதிகளை எதிர்கொள்வதற்கு புலத்தில் எமக்கென்றொரு அமைப்புள்ளதா??? பதில் இல்லை! என்பதே!! குறிப்பாக சர்வதேச தலைநகரான லண்டனில் தேசியத்திற்கான எந்தவொரு அமைப்புகள் இல்லாமையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனில் தடையெனும் பெயரில், தேசியத்திற்கான சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது. ஆனால் உண்மையில் லண்டனில் எவரும் தமதுரிமைக்கு ஜனநாயக ரீதியில் குரலெழுப்ப எந்த ஒரு சட்டமும் தடை செய்யவுமில்லை/செய்யப்போவதுமில்லை! அப்படியாயின் ஏன் லண்டனில் தேசியத்திர்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன???? பொதுநலமற்ற சில சுயநலவாதிகளினால் தமது கதிரைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் எமது தேசியத்திற்கான செயற்பாடுகள் அடகுவைக்கப்பட்டுள்ளது!!!!!! - MEERA - 11-05-2005 நீங்கள் சொல்வது போல் இலண்டனில் தமிழ் மக்களுக்காக ஓர் அமைப்பினை உருவாக்க முதலில் நீங்கள் முன்வருவீர்களா......... அல்லது இலண்டனில் இருக்கும் யாழ் கள உறவுகள் முன்வருவார்களா...................? - cannon - 11-05-2005 *1*) 1983ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கறையான யூலைக்கலவரத்தை நினைவுபடுத்தி வருடா வருடம் மாமெரும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. எந்த ஒரு காரணமுமற்று, பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு தடை ஏற்படுவதற்கு முன்னமே பல வருடங்களுக்கு முன்னம் நிறுத்தப்பட்டு விட்டது. ஏன்???????????.... *2*) 1995ம் ஆண்டளவில் யாழ்நகருக்குள் இலங்கை இராணுவம் புகுந்தவுடன் லண்டனில் வரலாறே காணாத அளவிற்கு மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அவ்வூர்வலத்தில் ஏறக்குறைய 15 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றி எமக்கு தமதாதரவை வெளிப்படுத்தினார்கள். இன்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்காக குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்??????????...... இல்லையாயின் இவர்களின் தொடர்புகள் ஏன் அறுக்கப்பட்டன?????????........ *3*) உலகெங்கும் பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏன் லண்டனில் நடைபெறவில்லை????????..... *4*) பல தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்!! பலர் திறத்தப்பட்டார்கள்!!! தேசியத்திற்காதரவான அமைப்புகள் எல்லாம் செயலற்றுப் போயின/உட்குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன!!! ஏன்????????....... *5*) ........ இப்படியாக வேதனையான செயற்பாடுகளே லண்டனைப் பொறுத்தவரை தொடர்கின்றது!!!!!! இவற்றுக்கு உரியவர்கள், இத்தருனத்தில் நடவடிக்கை எடுக்காவிடின், இறுதி யுத்தத்திற்கு தயாராகும் களத்திற்கு புலத்திலிருந்து சர்வதேசத்தை நோக்கிய சரியான அரசியல் வேலைகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலைதான் ஏற்படும். - தூயவன் - 11-05-2005 cannon Wrote:*1*) 1983ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கறையான யூலைக்கலவரத்தை நினைவுபடுத்தி வருடா வருடம் மாமெரும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. எந்த ஒரு காரணமுமற்று, பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு தடை ஏற்படுவதற்கு முன்னமே பல வருடங்களுக்கு முன்னம் நிறுத்தப்பட்டு விட்டது. ஏன்???????????.... உண்மை தான். தலைவர் மட்டும் போராடி விடுதலையைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுவது மடமைத்தனம். நாங்களும் போராட்டத்துக்கு ஆதரவான செயற்பாடுகளைச் செய்யவேண்டும் - kurukaalapoovan - 11-05-2005 போராட்டத்துக்கு ஆதரவு எண்ட பெயரில் சுயவிளம்பரமும் சுயவியாபாரமும் தான் கூடிக்கொண்டுவருது. பொறுப்புக்களை ஒரு சிலர் பெயருக்காக வைத்திப்பினம் வினைத்திறனோடு செயல்கள் குறைவு அல்லது இல்லை எண்டே சொல்லலாம். இளைவருக்கு சந்தர்ப்பங்கள் வழங்கமுன்வருவதில்லை. தங்களின் சோம்பேறித்தனத்தையும் இயலாமையையும் ஈடு செய்ய இளையவரை எடுபிடி தரத்தில் தான் வைத்திருக்க முயல்வது. அவர்களின் புதிய சிந்தனைகளை விளங்கிக்கொள்ளும் தரத்தில் கூட பல பெரியவர்கள் இல்லாதிருப்பது வேதனைக்குரியது. பதவி, மேடையும் ஒலிவாங்கியும் கிடைச்சால் கட்டேல போகும்மட்டும் விடவிருப்பமில்லை. கேட்டா தங்கடை இதுவரைகாலப் பங்களிப்பு, தாயகத்தில அவை அனுபவித்த இழப்புகள் துயரங்களை எல்லாம் பட்டியல் போட்டு நன்றி கெட்ட சனம் எண்டு சினிமா டயலக். உவை நன்றிக்கடன் எதிர்பார்த்துதான் செய்யினம் தங்களுக்கு எண்டு குட்டி குட்டி சாம்ராச்சியத்தை கட்டிக்கொள்ள? - கறுணா - 11-07-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! <b>ஐயோ! ரோதனை தாங்கமுடியேலை!! இந்த யாழ்களத்திலை சிலதுகளுக்கு வேலை வெட்டியில்லைப்போல?? யோவ் கணொன்! நீரும், ஒரு நாலும் இங்கை புரட்சி செய்கிறதா நினைக்கிறீங்களோ?? உதுகளை நீங்கள் எழுத, பூசாரிகளுக்கு ஏறவா போகிறது???? உடனை ஐயோ நாங்கள் பிழை விடுகின்றோம்!! என நினைத்து எல்லோரையும் அரவணைத்தா போகப் போகிறார்கள்??? இல்லை நாங்கள் விடும் தவறுகள் எங்கு பாதிப்பு ஏற்படுத்தப் போகிறதென்று யோசிக்கப் போகிறார்களா???? அவையள் இவ்வளவு காலமும் அமைசர்களாகவல்லோ உலாவினவைகள்!! இப்ப நேரடியாக கேள்விகள் கேட்கிறார்களென்று வாலை சுருட்டிப் படுத்திருக்கிறார்கள்!!! மற்றும்படி அவர்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை!!!!!! புரட்சியாம்! புரட்சி!! கிளிச்சியள்........</b> onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |