![]() |
|
கரும்புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கரும்புலிகள் (/showthread.php?tid=2556) |
கரும்புலிகள் - Rasikai - 11-08-2005 <b>கரும்புலிகள் </b> சென்றார்கள் திரும்பி வந்ததில்லை இவர்கள் தேகம் சிதறிய நாளில் எல்லாம் எங்கள் தேசம் விழித்ததே உங்களுக்கு நினைவிருக்கா?????? பூ என்று ஒரு பொழுது வாழ்ந்தார்கள்... சருகென்று மறு பொழுதில் உதிர்ந்தார்கள் விடியலின் ஒளி வேண்டி திசைக்கொரு பறவையாய் தீ குளித்து தேசமே பெரிதென்று செத்தே போனார்கள் உங்களுக்கு உணர்விருக்கா???????? அந்த சந்தன மரங்கள் சரிந்த பின்பும் இந்த செம்மண் பூமி எப்போதும் சிலிர்த்தே நிக்கும் எங்கள் நிலத்தை எவன் வந்து தொட்டாலும் உங்கள் சுவாசமதை உள்வாங்கி ஒவ்வொரு நொடியும் எதிர்த்து நிக்கும்!!!!! - inthirajith - 11-09-2005 விடுதலையை நேசிக்கும் மனதுதான் மரணத்தையும் துச்சமாய் மதிக்கும் எமக்காய் மரணித்த மனிதருள்மாணிக்கம் உங்கள் கவிதை நன்று வாழ்த்துக்கள் - கரிகாலன் - 11-09-2005 [u][b]ஒளிப்பறவைகள் [b] உயிர்க்கூட்டின் எங்கோ ஓர் பொந்திடையே சிறகொடுக்கி ஒளித்திருக்கும் உயிர்ப்பறவை பறந்துவிடும் என்ற பயம் பொத்திப் பொத்தி பதுக்கிவைத்திருக்கும் சிறுதுவாரம் தோன்றினும் பதை பதைத்து அதையடைக்கும் உயிர்ப்பிரியம் சிறிதும்மில்லையோ உங்களுக்கு அற்பமாகப் பிடித்து தலை தடவி சிறகு நீவிப் பறக்கவிடும் உங்கள் மனமுடிச்சின் சூத்திரம் என்ன காற்றில் வாழும் பறவைகளே. யாரோ. ரசிகை உங்கள் கவிதை நன்றாய் உள்ளது. மேலும் எழுதுங்க. - Vishnu - 11-09-2005 மாவீரர் நினைவாக எழுதிய கவிக்கு நன்றி ரசிகை. மேலும் உங்கள் கவித்திறன் பெருக வாழ்த்துக்கள். - Jenany - 11-09-2005 ரசிகை உங்க கவிதை அழகா இருக்கு.....வாழ்த்துக்கள். - Nithya - 11-09-2005 மெய் சிலிர்த்து விட்டது ரசிகை நன்றாக எழுதுகிறீர்கள் பாராட்டி.. இரண்டு வரி எழுதக்கூடிய மாதிரித்தான் நேரம் உள்ளது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Niththila - 11-09-2005 எமது நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தற்கொடையாளர்கள் பற்றிய ரசிகை அக்காவின் கவிதை நல்லாயிருக்கு - Rasikai - 11-10-2005 Nithya Wrote:மெய் சிலிர்த்து விட்டது ரசிகை மெய் சிலிர்க்கிறது - எனக்கும் தான் உங்களிடமிருந்து ஒரு பாராட்டு... கவியரசி நீங்கள் கன்டுக்குட்டி நான்... திறமைசாலிகள்.. அடுத்தவராயினும் தன்னிலைக்கு வர ஊக்குவிப்பர் என்பது இதுவோ? அது முடியாது என்றானாலும்... எது என்னமோ... சூரியனாய் நீங்கள் வீசிய ஒளியில் ...நிறம் பிறர் காண பெற்ற தாமரைகள் நாங்கள் ஆனோம்! வாழ்த்துக்கு நன்றி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-10-2005 Niththila Wrote:எமது நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தற்கொடையாளர்கள் பற்றிய ரசிகை அக்காவின் கவிதை நல்லாயிருக்கு எவ்வளவோ நெருக்கடி இருந்தாலும்.. இனத்துக்கு ஒரு அடி விழுகிறது என்றால்..நெருப்பென சீறும் உங்கள் விமர்சனம் களம் எல்லாம் பற்றி எரிய கண்டவள் நான்.. நன்றி தங்கையே... தேசத்தின் தொப்புள்க்கொடியால் நாமெல்லாம் ஒன்றிணைவோம்! கூடவே வாழ்த்திய எல்லோருக்குமே நன்றிகள் பல! - கீதா - 11-10-2005 ரசிகைஅக்கா நல்லாயிருக்கு உங்கள் கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - RaMa - 11-11-2005 ரசிகை கரும்புலிகளின் கவிதை நல்லாயிருக்கு - Birundan - 11-11-2005 கவிதை நன்று வாழ்த்துக்கள், மேலும் தொடருங்கள். - அனிதா - 11-11-2005 மாவீரர் நினைவாக எழுதிய கவிதை நன்றாக இருக்கு ..நன்றி..தொடர்ந்து எழுதுங்க ரசிகை அக்கா... - Rasikai - 11-12-2005 நன்றிகள் பல கீதா றமா பிருந்தன் அனித்தா |