![]() |
|
கண்களில் என்ன கார்காலம்..?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கண்களில் என்ன கார்காலம்..?! (/showthread.php?tid=2554) |
கண்களில் என்ன கார்காலம்..?! - kuruvikal - 11-09-2005 <img src='http://img490.imageshack.us/img490/2916/crying20girl9it.jpg' border='0' alt='user posted image'> <b>இருவிழி அருவி கண்டதேன் கார்காலம் பெண்ணென்று பிறந்திட்டதால் கறுமி இவள் என்று கண்டவரும் பழிப்பதாலோ..??! கலிகாலம் இதுவென்று படைப்பது புதிதென்று கட்டறுந்து கூடிக்களிக்கும் போது கூடலில் பிறந்ததை தப்பென்று வீசியதாலோ...??! பருவ வயதில் பார் என் சுதந்திரம் என்று பள்ளியறையில் பரிசளித்தது கருத்தடை தாண்டி பிறந்தது எப்படி வியந்துன்னை வீதியில் விட்டதாலோ...??! தாலாட்டுப் பாடிட தாய்ப்பாலும் ஊட்டிட தாயென்ற உறவுக்கு தரவில்லை காலம் அவகாசம் காரணம் கூறியே தரணியெங்கும் பறக்கும் அவள் தனிமையிலுன்னை விட்டதாலோ...??! தந்தை என்ற உறவது கட்டிலில் முடிந்ததென்று தாயவளைக் கைவிட்டு கட்டாக் காளையாய் கணமொரு கன்னி தேடும் அவன் அப்பன் என்று கண்முன்னே வந்ததாலோ...??! பள்ளிக்குப் போன தோழியவள் தோழர்கள் கூடி சமத்துவம் பேசி சாதுரியமாய் சதி பண்ணி சாதித்து முடித்ததும் சகதியில் வெற்றுடலாய் வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??! கண்ணுக்கு கருத்துக்கு சுதந்திரம் என்று காரிகை உன்னுடல் கலையென்று கவிபாடி களிக்கும் கறுமங்கள் தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??! கண்ணே மணியே கலங்காதே கரம் நீட்டி பொய்யுரைத்துப் பொய்யன்பு காட்டி கலங்கடிக்க நினைக்கும் கழுகுகள் வாழும் உலகிது..! குழந்தையே... சிந்தித்து சிலாகித்து வையம்மா உன்னடி... இப்போ கண்ணதைத் துடைத்திடு உடனடி.. கண்ணீர் உனக்கு பலவீனம்.. பலமாகு மதியெனும் விழி திறந்து..!</b> http://kuruvikal.yarl.net/ - shanmuhi - 11-09-2005 <b>தாலாட்டுப் பாடிட தாய்ப்பாலும் ஊட்டிட தாயென்ற உறவுக்கு தரவில்லை காலம் அவகாசம் காரணம் கூறியே தரணியெங்கும் பறக்கும் அவள் தனிமையிலுன்னை விட்டதாலோ...??! </b> கவிதை நன்றாக இருக்கின்றது குருவிகள். வாழ்த்துக்கள்... - Rasikai - 11-09-2005 கவிக்கு பொருத்தமான படத்துடன் கவிதை நன்றாக உள்ளது குருவிகாள் - tamilini - 11-09-2005 Quote:கண்ணே மணியேகண்களில் என்ன கார்காலம். படமும் கவி வரிகளும் நன்றாக இருக்கு. கழுகுகளிடம் இருந்து பறவைகள் காப்பாற்ற வேண்டியது தானே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 11-09-2005 Quote:<b>கலிகாலம் இதுவென்று தம் மகிழ்ச்சியைப் பெரிதென எண்ணுவதில் தப்பில்லை, அது மற்றவாகளைத் துன்புறுத்தாதவரை. ஆனால் தம்மகிழ்விற்காக ஒருபாவமும் அறியா மழலைகளை வீதியில் நிறுத்துவது கொடுமையிலும் கொடுமை. - Selvamuthu - 11-10-2005 வெள்ளைக் குழந்தையின் விழிநீர் வடியக்கண்டு தெள்ளு தமிழெடுத்துக் கவிதொடுக்கும் உள்ளங்காள் கலங்கும் விழிகாண கலங்கும் நல்லிதயம் உலகில் இது நியதி ஓவியம் இதுவென்னும் உண்மை தெரிந்திருந்தும் உடனே கவி வடிக்கும் இது கவியின் தகுதி ஆழிப்பேரலையால் அடுத்தடுத்த கொடுமைகளால் நீள விழிகளெல்லாம் நிர்வற்றிப் போனதினால் நீல விழிபடைத்து நீர் கவிகள் செய்தீரோ? யார்மீதும் குற்றமில்லை! தமிழில் கவிபடைக்க கருவுக்கேது பஞ்சம்? கலங்கும் தமிழ் இதயக் காட்சியொன்றைப் படைத்து உலகெங்கும் அமர்ந்திருந்து கவிகளைத் தொடுப்போமா? தமிழ்ப்புலமை வளர்ப்போமா? - hari - 11-10-2005 Quote:பருவ வயதில்அருமையான கவிதை வாழ்த்துக்கள் குருவிகளே! - வெண்ணிலா - 11-10-2005 Quote:கண்ணே மணியே உண்மையை கவி வரியில் காண்கிறேன் அண்ணா. வாழ்த்துக்கள் உங்கள் அழகான கவி வரிகளை அடக்கிய கவிதைக்கு. - RaMa - 11-10-2005 தாலாட்டுப் பாடிட தாய்ப்பாலும் ஊட்டிட தாயென்ற உறவுக்கு தரவில்லை காலம் அவகாசம் காரணம் கூறியே தரணியெங்கும் பறக்கும் அவள் தனிமையிலுன்னை விட்டதாலோ...??! அனைவரையும் நெருடச்செய்யும் வரிகள் இவை. நன்றி குருவிகள் உங்கள் கவிக்கு - poonai_kuddy - 11-11-2005 கறுமம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்... கறுமியெண்டு பாவிக்கிறவையோ??? அப்ப கறுமன் எண்டும் சொல்லிருக்கா???? "படைப்பது புதிதென்று கட்டறுந்து............." எண்டுறத விட கட்டறுத்து தான் பொருத்தமான சொல்லு...நீங்கள் சொல்ல வந்த விசயத்துக்கக்கா... கருத்தடை தாண்டி பிறந்தது எப்படி வியந்துன்னை வீதியில் விட்டதாலோ...??! இந்த வசனம் ஒழுங்கா அமையலையே அக்கா.....இதின்ர பொருள விளங்கிக்கொள்ளுறதெண்டால் வீதியில் விட்டாதால் கருத்தடை தாண்டி பிறந்தாள் எண்டு தான் விளங்கிக்கொள்ளலாம்... ஆனா நீங்க சொல் வந்த விசயம் அதுக்கு எதிர்மறையானது...... காரணம் கூறியே தரணியெங்கும் பறக்கும் அவள் தனிமையிலுன்னை விட்டதாலோ...??! எண்டு முதலில சொல்லுறீங்கள்... பிறகு.... சாதுரியமாய் சதி பண்ணி சாதித்து முடித்ததும் சகதியில் வெற்றுடலாய் வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??! இப்பிடி சொல்லுறீங்கள்... ஒண்டுக்கொண்டு முரணா இருக்குதே.... கண்ணுக்கு கருத்துக்கு சுதந்திரம் என்று காரிகை உன்னுடல் கலையென்று கவிபாடி களிக்கும் கறுமங்கள் தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??! உண்மைதானக்கா.....சினமா நடிகையின்ர படத்த போட்ட கலையெண்டு ரசிக்கிறாங்கள்....கனவில கற்பழிக்கிறாங்கள்.....இதில பெடியங்கள் மட்டுமில்ல... பெட்டையளும் நடிகையளின்ர படத்த போட்டு கலையெண்டு ரசிக்கினம்...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கண்ணதைத் துடைத்திடு உடனடி.. இதில உடனடி எண்டுறது வாசிக்கும் போது வேற பொருளக் குடுக்கும்....... கண்ணதைத் துடைத்திடடி உடனே எண்டுறது தான் நீங்கள் சொல்ல வாறது... இது இரண்டாந்தடவை வாசிக்கேக்கத் தான் விளங்கும்... சிலபேருக்கு கனதரம் வாசிச்ச பிறகுதான் நீங்கள் சொல்லவாறதென்னெண்டு விளங்குமக்கா.... முதல் தடவை வாசிக்கேக்க.... கவிதை வரிகள் ஒண்டோட ஒண்டு தொடர்பில்லாமல்.... சிலநேரங்களில ஒண்டுக்கொண்டு முரணாக இருக்கு.... ஒவ்வொரு வரியும் தனிச்சு வாசிக்கேக்கயுமஇ பொருள் தரணும்.... முழுக்கவிதையோட சேர்த்து வாசிக்கேக்கயும் ஒத்துவரணும்... இல்லாட்டி கவிதை எண்டுற எல்லைக்குள்ள வராது... - kurukaalapoovan - 11-11-2005 கண்ணிலென்ன கார்காலம் கன்னங்களில் நீர் கோலம் என்ற எலவே உள்ள தனித்துவமான பிரபல்யமான படை ஒத்த தலப்பை திருடிப்போட்டிருப்பது ஒரு படைப்பாளியின் ஆரோக்கியமான சிந்தனைக்களுக்கு எடுத்துக்காட்டாக அமையாது என்பது கவலைக்குரிய விடையம். - kuruvikal - 11-11-2005 poonai_kuddy Wrote:கறுமம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்... கறுமியெண்டு பாவிக்கிறவையோ??? அப்ப கறுமன் எண்டும் சொல்லிருக்கா???? கவி வரிகளை ஒழுங்கா கோர்த்து வாசிக்கத் தெரியாட்டி முரண்படுவதாகத் தான் தெரியும்...! இல்ல ஒரு வரிக்கு பொருள் புரியாட்டிலும்..விளங்காது கவிதை...முரண்படுறதாத்தான் தெரியும்..! படத்தைப் பார்த்தபடி மொத்தக் கவிதையையும் படிக்க பொருள் புரியும்...! கவிதைக்கு எது எல்லை...அதைச் சொன்னா உபயோகமாக இருக்கும்..நீங்கள் நீங்கள் எழுதுவற்றையும் கவிதை இல்லை என்று வரையறுக்க அதிக நேரம் எடுக்காது..எதுக்கும் தெளிவான நிதானப் பார்வை அவசியம்..! காழ்புணர்ச்சில வாறது விமர்சனம் அல்ல..! விரோதம்..! - kuruvikal - 11-11-2005 kurukaalapoovan Wrote:கண்ணிலென்ன கார்காலம் கன்னங்களில் நீர் கோலம் என்ற எலவே உள்ள தனித்துவமான பிரபல்யமான படை ஒத்த தலப்பை திருடிப்போட்டிருப்பது ஒரு படைப்பாளியின் ஆரோக்கியமான சிந்தனைக்களுக்கு எடுத்துக்காட்டாக அமையாது என்பது கவலைக்குரிய விடையம். கவலைப்பட எதுவும் இல்லை...அங்கும் இங்கும்...தேவைகள் ஒன்றாக இருக்கலாம்...அது போலவே தலைப்பானதில் கவலைக்கு என்ன இருக்கு...! அதுமட்டுமன்றி..அங்கு ஒருமை..இங்கு பன்மை தலைப்பில் தங்கி இருக்கிறது..அது முக்கியம்..! அது வேறுபாடும் கூட...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|