Yarl Forum
வவுனியாவில் இராணுவத்தினரை சுட்டுவிட்டு ஆயுதங்கள் அபகரிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வவுனியாவில் இராணுவத்தினரை சுட்டுவிட்டு ஆயுதங்கள் அபகரிப்பு (/showthread.php?tid=2491)



வவுனியாவில் இராணுவத்தினரை சுட்டுவிட்டு ஆயுதங்கள் அபகரிப்பு - வியாசன் - 11-12-2005

வவுனியாவில் இராணுவச் சிப்பாய் மீது துப்பாக்கிச் சூடு-ஆயுதங்கள் பறிமுதல்!!

வவுனியாவில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை 1.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் வவுனியா நகரிலிருந்து 6 கிலோ மீற்றர் வடமேற்கில் உள்ள கணேசபுரம் சோதனைச் சாவடியில் இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கான இராணுவ சிப்பாயிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ஏ.எம்.சி.அபயசிங்க பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.





யாழ்ப்பாணத்திலை சங்கிலியன்படை செய்கின்றது. வவுனியாவிலை வன்னியன்படையா செய்கின்றது. ஆகமொத்தம் இராணுவத்தினரின் (சாகிற)ஸ்கோர் கூடப்போகிறது என்றுமட்டும் புரிகிறது.
சுட்டது புதினத்திலிருந்து.