![]() |
|
தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க. (/showthread.php?tid=2408) |
தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க. - அருவி - 11-18-2005 சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காதது தங்களுக்கு ஏமாற்றமே என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க.வின் பிரதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது: அரச தலைவர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். நாம் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் வடக்குப் பிரதேசத்தில் பாரிய அளவில் வாக்குப் பதிவு குறைந்திருப்பது எம்மை ஏமாற்றமடையச் செய்துவிட்டது. <b>தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தது அடிப்படை உரிமை மீறலாகும்.</b> எமது தேர்தல் செயற்பாடுகளில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க. நன்றி புதினம் - அருவி - 11-18-2005 உரிமையைப் பயன்படுத்துவதும் அதைப் பயன்படுத்தாமல் விடுவதும் அவரவர் விருப்பம். உரிமையினை பெறவிடாமல் தடுப்பதே அடிப்படை உரிமை மீறலாகும். இதன்மூலம் ஐதேக எதைக் கூற விளைகிறது???????? :?: :?: :?: :?: தம் தோல்வியால் தமிழர்கள் மீது ஏற்பட்ட கோபமா அல்லது இதற்குக்காரணம் புலிகள் தடுத்தார்கள் என்ற சொல்ல வருகிறார்களா????????? :!: :!: :!: இவ்வாறான கருத்தின்மூலம் மீண்டும் ஒருமுறை தம் நிலைப்பாட்டைத் தெரியவைத்திருக்கிறார்கள், அதற்கு அவர்களிற்கு நன்றி.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இன்று தம் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததற்காக அடிப்படை உரிமை பற்றிப் பேசுபவர்கள், கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களிக்க இராணுவத்தால் மறுக்கப்பட்டபோது வாய்மூடி மெளனமாயிருந்தார்களே!!! :!: :!: :!: :!: ஏனெனில் அவ்வாக்குகள் தமிழர் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும் என்ற விடயம் தெதரிந்தமையால் என்ற காரணமா????!!!!!! :?: :?: :?: :!: :!: :!: :!: அடிப்படை உரிமைகளை தராததால் தானே போராட்டம் ஆரம்பித்தது. அதை அப்போது மறுக்கும் போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்???????? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழி இங்கு மிகவும் சரியாகப் பொருந்தி வருகிறது.
- வியாசன் - 11-18-2005 தமிழர்கள் ஏமாறாதது உங்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். கையிலை இருந்த வெற்றியை இழந்தது ரணிலாகத்தான் இருக்கும். |