Yarl Forum
ஈழம் குறித்து ஜெயலலிதா.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஈழம் குறித்து ஜெயலலிதா.. (/showthread.php?tid=234)

Pages: 1 2


ஈழம் குறித்து ஜெயலலிதா.. - sayanthan - 04-13-2006

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.


- காவடி - 04-13-2006

Quote:ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்
அப்படியென்றால்..


- நேசன் - 04-13-2006

சரி எங்களை நிராகரிக்காமல் ஒரு இலட்சியம் என்று சொல்வது நல்ல பண்பான சொல் பிரயோகம். அவ்வளவுதான்


- Vasampu - 04-13-2006

[i]முதலில் அம்மணிக்கு ஈழம் என்பது முழு இலங்கையைத் தான் குறிப்பதென்பது தெரியவில்லையா??

என்ன நேசன் உம்மை நீரே தேற்றிக் கொள்கின்றீரா??

<b>அம்மணி செப்பியது:</b>
ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்


- nallavan - 04-13-2006

இன்றைய நிலையில் ஈழத்தமிழர் என்பது முழு இலங்கைத் தமிழர்களையும் குறிப்பதில்லை. இந்த விசயத்தில் ஜெயலலிதா சொன்னது சரியே.

கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.


- நேசன் - 04-13-2006

ஈழம் என்பது எங்கள் தாய்நாட்டைத்தான் குறிக்கும். முழு இலங்கையும் அல்ல. இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள்.
ஈழம் மற்றது சிறீலங்கா.
எனவே ஜெயா அக்கா சொன்ன தமிழர் இலங்கைத்தீவில் இரண்டு நாட்டிலும் உள்ள தமிழர் பற்றி.


- நேசன் - 04-13-2006

ஜெயா அக்காவும் கனவுத்தொழிற்சாலையில் இருந்துதானே வந்தவா. அந்த பழக்கதோசம் தான். கனவு என்கிறா போலும்
வாழ்க டமில்நாடு


- adithadi - 04-13-2006

தமிழக அரசியல்வாதிகள் உருப்படியில்லாத புண்ணாக்குகள். எமது தீவிர போரட்டம் 23 வருடங்களை கடந்து விட்டது. இவ் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் எமது விடுதலை முடிவுக்கு வரவில்லை. ஆங்காங்கே தமிழ் நாட்டுபற்றாளர்கள் குரல் கொடுத்தால் அவர்களையும் சிறையில் போட்டு விடுகிறார்கள். தமிழ்நாடு மாபியா அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது. இவர்களின் இலட்சியம் பணம் சம்பாதிப்பதுதான். :oops:


- Selvamuthu - 04-14-2006

அரசியல்வாதிகளின் வேலை மக்களை அடிக்கடி குழப்புவதுதானே!
அதைத்தான் இவரும் செய்கிறார்.


- sayanthan - 04-14-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்.. ஆனால்.. அந்தச் செவ்வியில் அதனை அவர் சொன்ன தொனியில் நிறைவேறாத கனவு என்பது போன்று சொன்னதாக தோன்றவில்லை. எதுவோ அவர் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம்.
இன்னும் கேட்டிருக்கலாம்.. கிளறியிருக்கலாம்..


- sayanthan - 04-14-2006

மற்றும் படி ஈழம் என்பது இன்றைய நிலையில் அது இலங்கையல்ல என்ற நிலையில்தான் நோக்கப்படுகிறது. நடைமுறையில் இது தான் யதார்த்தம். வேண்டுமானால் விவாதிக்கலாம் இல்லையென்று.


- Vasampu - 04-14-2006

<i>பலர் ஈழம் என்பது வடகிழக்குத் தமிழர்களின் தாயகத்தைத் தான் குறிப்பதாக தவறாக எண்ணுவதாலேயே அப்படித் தெரிகின்றது. மற்றும் படி ஈழம் என்பது முழு இலங்கையையே குறிக்கின்றது. இல்லை யதார்த்தம் அதுவல்ல என்றால் பின்பு ஏன் தமிழீழம் என்ற வார்த்தைப் பிரயோகம்.</i>


- அகிலன் - 04-14-2006

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><i>பலர் ஈழம் என்பது வடகிழக்குத் தமிழர்களின் தாயகத்தைத் தான் குறிப்பதாக தவறாக எண்ணுவதாலேயே அப்படித் தெரிகின்றது. மற்றும் படி ஈழம் என்பது முழு இலங்கையையே குறிக்கின்றது. இல்லை யதார்த்தம் அதுவல்ல என்றால் பின்பு ஏன் தமிழீழம் என்ற வார்த்தைப் பிரயோகம்.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அட பாவமே. இதில வசம்பூக்கு என்ன சந்தேகம்.?

சிங்கள நாட்டில் சிங்கள சொல்லாகிய ஈழம் எண்ற சொல்லை நாங்கள் நேரடியாக கடன் வாங்காமல் தமிழ்ழீழம் எண்டு தமிழோடை சேத்து சொல்லுறம்.... ஈழம் எப்படி சிங்களவனுக்கு சொந்தமோ அப்படியே அந்த சொல்லும் சொந்தம் எண்டு நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரிய வேணும் எண்டதில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 04-14-2006

<b>அகிலன் wrote:</b>
அட பாவமே. இதில வசம்பூக்கு என்ன சந்தேகம்.?

சிங்கள நாட்டில் சிங்கள சொல்லாகிய ஈழம் எண்ற சொல்லை நாங்கள் நேரடியாக கடன் வாங்காமல் தமிழ்ழீழம் எண்டு தமிழோடை சேத்து சொல்லுறம்.... ஈழம் எப்படி சிங்களவனுக்கு சொந்தமோ அப்படியே அந்த சொல்லும் சொந்தம் எண்டு நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரிய வேணும் எண்டதில்லை.

[i]<b>அப்பு அகிலன்</b>

முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.

அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??


- அகிலன் - 04-14-2006

[quote=Vasampu]<b>அகிலன் wrote:</b>

[i]<b>அப்பு அகிலன்</b>

முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.

அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??

அப்ப என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் சொல்லான ஈழம் சிங்கள நாட்டின் பெயரா ? அல்லது ஈழம் முழுவதும் தமிழரின் சொந்தமானதை சிங்களவன் பிடித்துவிட்டானா.?

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தாறதைப்பற்றி சிந்தித்து பார்க்கவே மாட்டீர்களா.? ஈழம் எண்ற பெயர் எதனால் எப்போ வந்தது எண்று யாரும் சொல்லித்தரவில்லையா.? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 04-14-2006

<i><b>அகிலன்</b>
இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!! </i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அகிலன் - 04-14-2006

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><i>இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!!</i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணா நீங்கதான் எல்லாம் தெரிஞ்ச சுப்பர் எடுத்து விடுங்கண்ணா.

களத்தில இருக்கிற அனேகர் அறிவாளிகள் அவர்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டி இல்லை. ஒண்று இரண்டு அரவேக்காடுகள் உங்களைபோல இருக்கிறார்கள்தான் அவர்களுக்கு சொல்லி வேலை இல்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 04-14-2006

<i><b>அகிலன்</b>
பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரியாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.</i>


- அகிலன் - 04-14-2006

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><i><b>அகிலன்</b>
பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரயாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தெரியாது என்பதை ஒத்து கொள்ளுறீங்கள் போல நல்லது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 04-14-2006

[i]நான் தெரியவில்லை என்பதால்த் தானே உம்மைச் சொல்லும் படி கேட்கின்றேன். எல்லாம் தெரிந்தவர் எடுத்து விடுமன். எனியும் சொல்ல முடியவில்லை என்றால் புலம்பியதை ஒத்துக் கொள்ளும். எனிமேலாவது தேவையில்லாமல் எல்லாம் தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதி முட்டாள்த் தனத்தை நிறுத்திக் கொள்ளும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->