![]() |
|
இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு! (/showthread.php?tid=2240) |
இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு! - adithadi - 11-29-2005 சில வருடங்களுக்கு முன்பு எனது சக தொழிலாலியின் சகோதரன் இரண்டு சிறுநீர்ப்பைகளை இழந்த மயக்க நிலையில் இருந்த போது, அவரது ஆன்மா அவரை விட்டுசென்று அங்கு என்ன நடக்கின்றது என அவரால உணர முடிந்தது, பின்பு வெளிச்சத்தை நோக்கி தான் நகர்ந்த போது அளவில்லா அன்பு அவரை சூழந்து கொண்டிருந்தவாகவும், உம்மை அழைக்கும் நேரம் இதுவல்ல என் கூறியதகாவும் அவர் என்னிடம் சொன்னார். இவர் இறைவன் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத மனிதர். உங்களின் அனுபவங்களையும் கூறுங்கள். - sOliyAn - 11-29-2005 இவர் இப்போது வேதாகம சபை ஏதாவதில் மதபோதகராக... மன்னிக்கவும்... மதம் மாற்றுபவராக ஊழியம் செய்கிறாரா?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு! - SUNDHAL - 11-29-2005 adithadi Wrote:சில வருடங்களுக்கு முன்பு எனது சக தொழிலாலியின் சகோதரன் இரண்டு சிறுநீர்ப்பைகளை இழந்த மயக்க நிலையில் இருந்த போது, அவரது ஆன்மா அவரை விட்டுசென்று அங்கு என்ன நடக்கின்றது என அவரால உணர முடிந்தது, பின்பு வெளிச்சத்தை நோக்கி தான் நகர்ந்த போது அளவில்லா அன்பு அவரை சூழந்து கொண்டிருந்தவாகவும், உம்மை அழைக்கும் நேரம் இதுவல்ல என் கூறியதகாவும் அவர் என்னிடம் சொன்னார். இவர் இறைவன் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத மனிதர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 11-29-2005 sOliyAn Wrote:இவர் இப்போது வேதாகம சபை ஏதாவதில் மதபோதகராக... மன்னிக்கவும்... மதம் மாற்றுபவராக ஊழியம் செய்கிறாரா?! <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - inthirajith - 11-29-2005 செத்தால் தான் சுடுகாடு தெரியும் இங்கே அப்படிபட்டவர்கள் இல்லையே மரித்தவர்களை உயிர்ப்பிக்கும் மருத்துவம் தெரியுமா?' <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted: hock:
- Danklas - 11-29-2005 ஓய்ய் இறந்து முடிய ஒரு சொர்க்க பூமி மனிதனுக்கு கிடைக்கிறதாம்,, இதை சங்கரி சொல்லல்ல நான் சொல்லுறன்,, ஏன் தெரியுமா? மனிதனுக்கு முக்கிய பிரச்சினையே அவனின் உடம்புதான்,, உடம்பில் சாதரணமாக ஒரு அறை விட்டாலே வலிக்கும், மற்றவன் நல்லா இருந்தால் மனம் பொறுக்காது, பிரண்ட் சுப்பர் பிகரை தள்ளீக்கிட்டு வந்தால், வயிறு எரியும், :wink:, காய்ச்சல் வந்தால் தலையிடி வந்தால் வலிக்கும், நோகும், சோ, மனிதன் இறக்கும் பொழுது அவனின் உடல் மண்ணுக்குள் அழிந்து போகின்றது, அந்த உடம்பில் இருக்கும் ஆத்மா (உயிர்) பிரிந்து செல்கிறது, அதனால் மேலே போய் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல், நிம்மதியா இருக்கலாம்,,, யாருக்குதெரியும், பரலோகத்தில் தவறு செய்பவர்கள் தான் மனித உருவில் பூமிக்கு அனுப்பப்படுகிறார்களோ என்னமோ? (ஜெயிலுக்கு போறமாதிரி) ஜெயில் வாழ்க்கை முடிந்ததும் திருப்பி சொந்த இடத்துக்கு போகின்றமோ? :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (இருந்து இருந்துட்டு மப்பி** அலட்டுவன் கண்டுக்காதேங்க, ஓய் வசம்பு வந்து கருத்த பார்த்துட்டு ரென்சன் ஆகிறேல்லை,, பிறகு பீபி வந்து திருப்பி உங்க சொந்த உலகத்துக்கே போய்டுவியள்.. :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: )
- adithadi - 11-29-2005 மனிதன் படைத்த மதத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இது உண்மை சம்பவம். எனக்கு தெரிந்தவிரின் அனுபவங்களை எழுதியிருந்தேன். - Selvamuthu - 11-29-2005 எனது நெருங்கிய இனத்தவர் ஒருவருக்கு குழந்தைப் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களினால் அவர் இரண்டு மணி நேரம்வரை மயக்க நிலையிலே இருந்தார். டாக்டர்களும் தாதிமார்களும் அவரை மயக்கம் தெளிவிப்பதற்கு பலவழிகளில் முயற்சி செய்தார்கள். இறுதியில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் இதுவரை நேரமும் சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைப் பிரசவத்தின்போது இவ்வுலகை விட்டுப்பிரிந்த தனது தங்கையுடன் ஓர் அமைதியான வெளியில் இரு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு; பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் மட்டுமே அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டார். பிறந்ததிலிருந்து ஒன்றாக வளர்ந்த தங்கையைக் கண்டு பேசியது அவருக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்திருந்தது. பல நாட்களாக அதனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இப்போது பல வருடங்களாகிவிட்டன. அவர் தற்போதும் நன்றாகவே இருக்கின்றார். - shobana - 11-30-2005 Selvamuthu Wrote:எனது நெருங்கிய இனத்தவர் ஒருவருக்கு குழந்தைப் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களினால் அவர் இரண்டு மணி நேரம்வரை மயக்க நிலையிலே இருந்தார். டாக்டர்களும் தாதிமார்களும் அவரை மயக்கம் தெளிவிப்பதற்கு பலவழிகளில் முயற்சி செய்தார்கள். இறுதியில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் இதுவரை நேரமும் சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைப் பிரசவத்தின்போது இவ்வுலகை விட்டுப்பிரிந்த தனது தங்கையுடன் ஓர் அமைதியான வெளியில் இரு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு; பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் மட்டுமே அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டார். எப்படி நம்புவது?? - Selvamuthu - 11-30-2005 சோபனா, நானும் கட்டுக்கதைகளை நம்புவதில்லை. ஆனால் இவர் எமது சொந்தக்காரர். அவரது தங்கை தீடீரென இறந்தபோது அவர்களுடன் நெருங்கிய குடும்பத்தவர்கள் எல்லோருக்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட பல மாதங்கள் ஆகின. அதன் பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நான் அப்போது சிறு பையன். எனது அம்மாவும் மற்றவர்களும் பேசிக்கொண்டதிலிருந்துதான் நானும் அறிந்துகொண்டேன். இது கட்டுக்கதையல்ல என்பதை நான் இப்போதும் நம்புகிறேன். - adithadi - 11-30-2005 நான் முன்பு இப்படியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நம்பவில்லை தான், ஆனால் எனது அருகில் இருக்கும் சக தொழிலாலியின் சகோதரருக்கு நடக்கும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. இவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். இவ் சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்ததும், "Near Death Experience" புத்தகங்களை வாசிக்க தொடங்கி விட்டேன். இதன் மூலம் பலரின் அனுபவங்களை அறியக் கூடியதாக உள்ளது. - shobana - 12-05-2005 adithadi Wrote:நான் முன்பு இப்படியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நம்பவில்லை தான், ஆனால் எனது அருகில் இருக்கும் சக தொழிலாலியின் சகோதரருக்கு நடக்கும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. இவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். அப்ப நீங்க வாசித்து அறியும் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன் - vasisutha - 12-05-2005 Selvamuthu Wrote:எனது நெருங்கிய இனத்தவர் ஒருவருக்கு குழந்தைப் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களினால் அவர் இரண்டு மணி நேரம்வரை மயக்க நிலையிலே இருந்தார். டாக்டர்களும் தாதிமார்களும் அவரை மயக்கம் தெளிவிப்பதற்கு பலவழிகளில் முயற்சி செய்தார்கள். இறுதியில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் இதுவரை நேரமும் சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைப் பிரசவத்தின்போது இவ்வுலகை விட்டுப்பிரிந்த தனது தங்கையுடன் ஓர் அமைதியான வெளியில் இரு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு; பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் மட்டுமே அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டார். இது மனரீதியாக ஏற்பட்ட ஒரு பாதிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.. அவரது தங்கை பிரசவ நேரத்தில் இறந்திருக்கிறார்.. தானும் அதேபோல பிரசவத்தில் இறந்துவிடுவோமா என்ற பயம் ஆழ்மனதில் இருந்திருக்கிறது. அந்தப் பயம் அவரது பிரசவநேரத்தில் அதிகமாகி மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. அதுதான் அவரது இறந்த தங்கையுடன் பேசுவதான கற்பனைக்கும் காரணமாக இருந்திருக்கும். Re: இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு! - vasisutha - 12-05-2005 adithadi Wrote:சில வருடங்களுக்கு முன்பு எனது சக தொழிலாலியின் சகோதரன் இரண்டு சிறுநீர்ப்பைகளை இழந்த மயக்க நிலையில் இருந்த போது, அவரது ஆன்மா அவரை விட்டுசென்று அங்கு என்ன நடக்கின்றது என அவரால உணர முடிந்தது, பின்பு வெளிச்சத்தை நோக்கி தான் நகர்ந்த போது அளவில்லா அன்பு அவரை சூழந்து கொண்டிருந்தவாகவும், உம்மை அழைக்கும் நேரம் இதுவல்ல என் கூறியதகாவும் அவர் என்னிடம் சொன்னார். இவர் இறைவன் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத மனிதர். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தான் இறந்த பின் என்ன ஆவேன் என்ற கேள்வி அடிமனதில் இருந்திருக்கலாம். ஏதாவது புத்தகத்தில் இப்படியானவற்றை படித்திருக்கலாம். தான் இறந்து போய்விட்டதாக எண்ணி அவர் இப்படி கற்பனை செய்திருக்கலாம்.. அல்லது ஒரு சிலர் தன் மீது மற்றவர்கள் கவனம் செலுத்த வேண்டி இப்படியான கற்பனை கதைகளை அவிட்டு விடுவதுண்டு.. அப்படியும் இருக்கலாம். - Selvamuthu - 12-06-2005 என்ன வசி, நீங்கள் எதனையும் நம்பத் தயார் இல்லை என்பதுபோல் உங்கள் பதில்கள் இருக்கின்றன. நீங்களும் அடிதடி குறிப்பிட்ட "Near Death Experience" புத்தகங்களை வாசித்தால் சிலவேளை உங்கள் கருத்துக்களில் மாற்றம் காணப்படலாம். - ragavaa - 12-06-2005 கடந்த வாரம் discovery channel ல் இதுவரை கண்டுபிடிக்கப்படாத / விளக்கப்படுத்தாத 10 நிகழ்வுகளை காட்டினார்கள். அதில் இறப்புக்கு பின் வாழ்வா என்பதற்கு முதலிடம் கொடுத்திருந்தார்கள். அதோடு 13 மில்லியன் அமெரிக்கர்கள் Near Death Experience பெற்றவர்களாக இருக்கிறார்களாம். நம்ம பிள்ளையார் பால் குடிச்சது 9வது இடத்தில இருக்கு. - adithadi - 12-06-2005 அநேகம்மாக எல்லோரின் அனுபவங்களும் ஒரே மாதிரித்தான். இருந்தாலும் இவரின் அனுபவம் சற்று வித்தியாசம்மானது. தான் சைக்கிளில் சென்ற போது, விபத்து நேர்ந்து விட்டது. ஆம்புலன்ஸ் வருகின்றது, முதலுதவி கொடுக்கப்படுகின்றது, ஆனால் அது தான் தான் என்பதை உணர சில நேரம் எடுத்தது. பின் வெளிச்சத்தை நோக்கி சென்றதாகவும், தனது வாழ்க்கையை ஒன்றின் பின் ஒன்றாக பார்த்ததாகவும் அவர் தன் அனுபத்தை கூறியிருந்தார். |