![]() |
|
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள். (/showthread.php?tid=2164) Pages:
1
2
|
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள். - shanmuhi - 12-06-2005 <b>பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான 13 வித்தியாசங்கள்:</b> 1. பெயர்கள்: வாணி, ரெய்னா, மேகலா, ரீட்டா ஆகியோர் வெளியில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தங்களுக்குள் பெயர் சொல்லியேக் கூப்பிடுவார்கள் மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் சேர்ந்து வெளியில் சென்றால் அவர்கள் குண்டா, சொட்டை தலையா, வழுக்கை, அழுக்கா என்று அன்புடன் அழைப்பார்கள்.D (அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்) ஹோட்டலில்: பில் வந்ததும் மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் ஆகியோர் ஏகக்காலத்தில் 450 ரூபாய் பில் வந்திருந்தாலும் 500 ரூபாய் நோட்டை எடுத்து ஸ்டைலாக வீசுவார்கள்.ஒருத்தரிடத்திலும் வேறு சில்லறை நோட்டு இருக்காது. யாரும் திரும்பச் சில்லறை வேண்டும் என்று எதிர்ப்பார்க்க மாட்டார்கள் (எதிர்ப்பார்க்க மாட்டோம் என்பதுப் போல நடிப்பார்கள்) ஆனால் பெண்கள் பில் வந்ததும் கணக்குப் போடத் தொடங்குவார்கள். 3. பணம் ஆண் 50 ரூபாய் மதிப்புள்ளப் பொருளை 100 ரூபாய் கொடுத்து வாங்குவான். பெண் 50 ரூபாய் கொடுத்து 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை ஆடித் தள்ளுப்படி அதிரடி விற்பனையில் தேவையே இல்லாமல் வாங்குவாள். 4. குளியலறை ஒரு ஆணின் குளியலறையில் முக்கியமாக ஒரு பல் விளக்கி,பற்பொடி, சவரம் செய்ய உபயோகிக்கும் சோப்பு, மற்றும் கத்தி, குளியல் மற்றும் துணி சோப்பு, துடைக்கும் துண்டு இருக்கும். ஆனால் ஒரு பெண்ணின் குளியலறையில் பலவிதமான சுமார் 337 ஆண்களைக் குழப்பும் பொருள்கள் இருக்கும் (என்னக் கணக்கு என்றுத் தெரியவில்லை) 5. விவாதம் எந்த ஒரு விவாதத்திலும் பெண் சொல்வதே இறுதியான வார்த்தையாக இருக்கும். அதற்குப் பிறகு ஆண் ஏதாவது சொன்னால் அந்த வார்த்தை புதிய ஒரு விவாதத்திற்கு அடிக்கோலும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பமாகும். (பழையக் குருடி, கதவைத் திறடி) 6. பூனைகள் பெண்களுக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும் (எத்தனைப்பேருக்கு?) ஆண்களும் பூனையைப் பிடிக்கும் என்று சொல்வார்கள், ஆனால் பெண்கள் பார்க்காத நேரத்தில் அதற்கு ஒரு உதை விடுவார்கள். 7. எதிர்காலம் கணவன் கிடைக்கும் வரை ஒரு பெண் தன் எதிர்காலத்தைப்பற்றிய நினைப்பில் கவலையுடன் இருப்பாள். ஒரு ஆண் தனக்கு கல்யாணம் ஆகும் வரை (மனைவி வரும் வரை) எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவே மாட்டான். 8. வெற்றி ஒரு வெற்றிகரமான ஆண் தனது மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பான். ஒரு வெற்றிகரமானப் பெண் அப்படிப்பட்ட கணவனைக் கைப்பிடிப்பாள். 9. திருமணம் ஒரு பெண் தன் கணவன் மாறிவிடுவான் என்று எதிர்ப்பார்ப்பாள், ஆனால் அவன் மாற மாட்டான். ஒரு ஆண் தன் மனைவி மாற மாட்டாள் என்று நினைப்பான், ஆனால் அவள் மாறி விடுவாள். 10. ஆடை அணிதல் ஒரு பெண், கடைக்குச் செல்வதற்கும்,செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், குப்பையை வெளியேப் போடப் போவதற்கும், தொலைப்பேசியில் பதில் சொல்வதற்கும், புத்தகம் படிப்பதற்கும், தபால்களைப் படிப்பதற்கும் உடை மாற்றுவாள். ஒரு ஆண் கல்யாணம் அல்லது கருமாதிக்குப் போவதற்கு உடை மாற்றுவான். 11. இயல்பு ஆண்கள் தூங்கப் போகும் போது எப்படி இருப்பார்களோ அப்படியே தூங்கி எழும்போதும் இருப்பார்கள் ஆனால் பெண்கள் ஒரு மாதிரி சோகையாக இருப்பார்கள் 12. குழந்தைகள் ஒரு பெண் குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பாள். பல் மருத்துவரை பார்க்கவேண்டிய நேரம், காதல், நெருங்கிய நண்பர்கள், விருப்பமான உணவு வகைகள், ரகசியமான பயங்கள், எதிர்ப்பார்ப்புகள், நம்பிக்கைகள், கனவுகள். ஒரு ஆண் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைக் கூட பல சமயங்களில் மறந்து அஜாக்கிரதையாக இருப்பான் 13. இறுதியாக கல்யாணமான ஆணகள் தங்கள் தவறுகளை மறந்துவிடவேண்டும். ஏனென்றால் ஒரே விசயத்தை இரண்டுப் பேர் ஞாபகம் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. சுட்டது - இணையதளம் ஒன்றில் - Vasampu - 12-06-2005 என்னங்க சண்முகி சொந்த அனுபவமோ ஏனென்றால் சுட்டது இணையத்தளமொன்றில் என்று பெயர் குறிப்பிடாமல் போட்டிருக்கின்றீர்கள் - MUGATHTHAR - 12-07-2005 Quote:6. பூனைகள் வேறை என்னணெண்டு எங்கடை ஆத்திரங்களைத் தீர்க்கிறது இதுக்குப் பாருங்கோ கட்டின மனுசியை பாத்து கையோங்கினாலே சனம் கதைக்கிற கதை 1.கலியாணம் கட்டினவுடனை எண்டால் புதுப் பெண்டாட்டியை அடிக்கிறான் எண்டு சொல்லுறாங்கள் 2. வயித்திலை பிள்ளையிருக்கேக்கை எண்டா பிள்ளைத் தாச்சி பெண்ணை அடிக்கிறான் எண்டு சொல்லுறாங்கள் 3. பிள்ளை பிறந்தவுடனை எண்டா பச்சை உடம்புக்காரியை அடிக்கிறதெண்டு சொல்லுறாங்கள் 4. சரி பிள்ளைகள் வளந்தா பிறகு எண்டா தோளுக்குமேலை வளந்த பிள்ளை இருக்கு இப்பபோய் அடிக்கிறாங்கள் எண்டு சொல்லுறது சொந்த பெண்டாட்டியை எப்பங்க ஆசையா அடிக்கிறது இதுக்குத்தான் வீட்டிலை நாய் பு|னைகளை வளத்தால் எங்களுக்கு வசதியா இருக்கம்தானே..... - தூயவன் - 12-07-2005 திரும்பவும் தொடங்கீட்டிங்களா? ஆனால் நான் இந்தப் பக்கம் வரவே மாட்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 12-07-2005 MUGATHTHAR Wrote:Quote:6. பூனைகள் ஆகா அங்கிள் பொன்னம்மாக்காவை அடிக்கிறதுக்கும் அதுவும் ஆசையாய் அடிப்பதற்கு ஓரு காலம் வேணுமோ? - tamilini - 12-07-2005 Quote:1. பெயர்கள்: அவ்வளவு பொறுப்புக்கண்டியளோ.?? அ வைக்கென்ன ஓசில தகப்பன் தாய் உளைக்க கடையில கொண்டே செலவழிப்பினம் மிச்சம் வாங்க கூட விரும்பாயினம் ஆனா பெண்கள் அப்படியா. உளைக்கும் அண்ணா பாவம் அப்பா பாவம். என்று பொறுப்பு உணர்வோட செயற்படுறார்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 12-11-2005 tamilini Wrote:அவ்வளவு பொறுப்புக்கண்டியளோ.?? அ வைக்கென்ன ஓசில தகப்பன் தாய் உளைக்க கடையில கொண்டே செலவழிப்பினம் மிச்சம் வாங்க கூட விரும்பாயினம் ஆனா பெண்கள் அப்படியா. உளைக்கும் அண்ணா பாவம் அப்பா பாவம். என்று பொறுப்பு உணர்வோட செயற்படுறார்கள். :wink: <!--emo&பெண்கள் உடை விடயத்திலும், நகைநட்டு, அந்தக்கிறீம், இந்தக்கிறீம் என்று வீட்டாக்களை ஒரு முடிவுகட்டுவதில்லையோ? அது மட்டும் பொறுப்புள்ள பிள்ளைக்கு உதாரணமா? கலியாணவீட்டு வீடியோ பார்க்கும்போது அவதானித்த ஒரு விடயம், பெரும்பாலான பெண்கள் அதைப் பார்க்கும்போது முக்கியமாக மற்ற பெண்கள் அணியும், நகையின் மொடலையும், ஆடைகளின் விலையையும் தான் அவதானிப்பார்கள். அதுக்கு பிறகு வீட்டில் அதை விட நல்லதாக வாங்கித்தரச் சொல்லி தொல்லை தானே. ( இங்கையும் கூட ஒருவர் சாறி நல்லாயிருக்கு என்று கதைத்ததை அவதானித்திருக்கின்றேன்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-11-2005 தூயவன் உப்படி சிலர் இருக்கினம் என்டு உங்கள மாதிரி ஆக்கள் சொல்லித்தான் தெரியுது. சில சில அத்தியவசியமான தேவைகளை பூர்த்தி செய்யத்தான் வேண்டும். உடுப்பு வேணும் என்றது தேவை அதை எப்படி எடுக்கிறது என்றது அவரவர் விருப்பம். இப்படியே ஆண்களைப்பத்தியும் சொல்றாங்க.. புதிசா ஒருவர் மோட்டர் சைக்கில் அயல் அட்டையில வாங்கி வைச்சிருந்தா வங்கணுமாம். நாய்ச்சங்கிலி போடணுமாம். இப்படி இன்னும் கொஞ்சம். எல்லாம் பிறர் சொல்லிக் கேட்டது தான் அது எப்படி அப்ப?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 12-11-2005 நீங்கள் தான் பொறுப்புள்ள பெண்பிள்ளைகள் என்று சொன்னதால் அப்படி சொன்னேன். ஏன் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுதோ? ஏனக்கா பொய் எல்லாம் சொல்கின்றீர்கள்? வாதம் என்பதற்காக பொய் எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக யாழ்பாணம் போய் ஒரு வீட்டைப்பாருங்கள். ஆண்கள் பொதுவாக நொந்து போன வகையில் தான் ஆடை அணிந்திருப்பார்கள். பெண்கள் புதுவகைத் துணியில் தான் வீட்டில் கூட அணிவார்கள். அதென்ன நாய்ச்சங்கிலி? நல்லாவே இல்லை. :evil: :evil: :evil: :evil: - MUGATHTHAR - 12-11-2005 Quote:அதென்ன நாய்ச்சங்கிலி? அந்தா டமிழ் கழுத்திலை போட்டு இருக்கிறது தான்.......... - tamilini - 12-11-2005 தூயவன் Wrote:நீங்கள் தான் பொறுப்புள்ள பெண்பிள்ளைகள் என்று சொன்னதால் அப்படி சொன்னேன். ஏன் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுதோ? ஏனக்கா பொய் எல்லாம் சொல்கின்றீர்கள்? வாதம் என்பதற்காக பொய் எல்லாம் சொல்லக்கூடாது. நோ ரென்சன்.. அங்கால சாப்பாட்டுக்கடைப்பகுதியில பொறுப்புள்ள பிள்ளையள் என்டன். நீங்கள் துணிமணிக்கு கொண்டந்தா நான் என்ன பண்ண. இது பொய்யில்லை நான் வளர்ந்த சூழலில் இப்படி தான் துணி மணிகளை தேவைக்கு ஏற்றாற்போல வாங்குவினம். எல்லாரும் பொண்ணுகள் என்டா துணி மணி அள்ளிக்குவிப்பினம் என்டினம் அது தான் சொன்னன். நான் கண்டதில்லை அப்ப என்னண்டு சொல்ல. சங்கிலி ஒன்று போடுவினமாம் ஆண்கள் அது எப்படி என்று கேட்டா நாய்க்கு கட்டிறமாதிரி என்டிச்சினம். (அது கூட சொல்லிக்கேள்வி) கண்டதில்லை. சங்கிலி பற்றிக்கதைச்ச உடன தம்பி ரென்சன் ஆகிறீங்க என்ன நடந்தது..?? : :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-11-2005 MUGATHTHAR Wrote:Quote:அதென்ன நாய்ச்சங்கிலி? அந்தச்சங்கிலி பெண்கள் போடிறதில்லையாம் முகம்ஸ் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 12-12-2005 ஆகா இதிலும் ஆண்களா பெண்களா என்று கருத்து மோதலா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 12-12-2005 Quote:ஆகா இதிலும் ஆண்களா பெண்களா என்று கருத்து மோதலா கொஞ்ச நாளா களத்திலை சூட்டைக் காணேலைத் தம்பி அதுதான் டமிழோடை............... ஒரு மோதலில்லை சும்மா......... - தூயவன் - 12-12-2005 என்ன அங்கிள் தமிழீழக் காதல் பார்க்கவில்லையோ? அங்கே எரிமலையே வெடிச்சு போயிருக்கு. நீங்கள் என்னவென்றால் சூட்டை காணோம் எண்டுகொண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 12-12-2005 RaMa Wrote:MUGATHTHAR Wrote:Quote:6. பூனைகள் முகத்தாரும் எப்படியாவது வேண்டிய அடிகளை திருப்பி கொடுப்பம் என்று சந்தர்பம் பாக்கிறார் போலிருக்கிறது - tamilini - 12-14-2005 அதில்லை து{யவன் காதல் பக்கம் எல்லாம் போக முகம்ஸிற்கு எங்க நேரம். அடுப்படிப்பக்கம் தானே வேலை.. :wink: தூயவன் Wrote:என்ன அங்கிள் தமிழீழக் காதல் பார்க்கவில்லையோ? அங்கே எரிமலையே வெடிச்சு போயிருக்கு. நீங்கள் என்னவென்றால் சூட்டை காணோம் எண்டுகொண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-14-2005 tamilini Wrote:அதில்லை து{யவன் காதல் பக்கம் எல்லாம் போக முகம்ஸிற்கு எங்க நேரம். அடுப்படிப்பக்கம் தானே வேலை.. அங்கிளைச் சும்மா ஆள் எண்டு நினைக்காதிங்க. அவருக்கு தனிய இருக்கும் போது வராதா வீரம் என்ன? எடுப்பான நடை என்ன? அவரின் மீசையை பிடித்து ஒரு முறுக்கு முறுக்கினார் என்றால்.......................... கழண்டு விழுந்திடும் என்று சொல்லவந்தேன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 12-14-2005 ஆகா....தொடங்கிட்டாங்கைய்யா..தொடங்கிட்டாங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 12-15-2005 ப்ரியசகி Wrote:ஆகா....தொடங்கிட்டாங்கைய்யா..தொடங்கிட்டாங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& ஆமா. அப்படி என்ன புதுசாக தொடங்கி விட்டோம். :roll: ( அப்ப தொடங்கினதே இன்னும் முடியவில்லை). கனகாலத்துக்கு பிறகு வாறதால ரெம்பத் தான் குழம்பி விட்டீர்களோ? :x |