![]() |
|
கலாபக் காதலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கலாபக் காதலி (/showthread.php?tid=2128) |
கலாபக் காதலி - mayooran - 12-09-2005 காற்றெழும் கடற்கரையோரம் கால் நனைத்த கன்னியவள் சுடிதாரோ வானவில்லின் வர்ணம் காட்ட சீறிவரும் அலைகளை ரசித்தபடி தேவதையாக நின்ற அவள் அழகை ரகசியக் கண்களால் ஆராதனை செய்தேன் ஓப்பனையில்லா துருதுருத்த விழிகளுடன் கன்னத்தில் வியர்வை éத்திருந்த நிலவு முகமாக ஒளி தந்தாள் முதல் பார்வையிலேயே அந்த வசீகர முகம் இதயத்துள் புகுந்துவிட்டது வெந்து துடித்து வேதனையில் மடிந்து திருடிய முகத்தை ஓராயிரமுறை பார்க்கத் தூண்டியது அவஸ்தையைக் கொடுத்து உள்ளத்துள் புயலாகப் புகுந்தவள் நினைவோ என்னை தென்றலாகத் தாலாட்ட என் உள்ளம் நினைத்ததை சொல்லத் துணிகிறேன் இதயத்துள் புரளும் ஆசையது திரளும்போதில் மனமோ வரைகிறது உன்மீது என் உள்ளம் கொண்ட காதலை கலாபக் காதலியே பிக்காசோ வரைந்த ஓவியம் போலிருந்தே ஒரு பேச்சும் பேசாத கண்ணே நெஞ்சின் உணர்வுக்குள் ஒன்றிவிட்ட காவியப்பெண்ணே கண் வீச்சைக் காட்டிவிட்டாய் என் மூச்சில் உயிரில்லையடி விழியசைவால் விடை பகரும்வரை துடிக்கிறேன் துவள்கிறேன் வெண்ணிலவு மங்கையின் தங்கையே முல்லைப்é மணமெடுத்து என் மனதிற்குள் மணக்கின்ற தித்திப்பு இனிப்éற சித்தத்தில் இனிக்கின்ற சுகச் சொல்லொன்று கூறாயோ கண்ணே www.autham.com - RaMa - 12-10-2005 ஒரு முதல் சந்திப்பை வர்ணிக்கும் கவிதை நல்லாயிருக்கு. நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு. |