Yarl Forum
கலாபக் காதலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கலாபக் காதலி (/showthread.php?tid=2128)



கலாபக் காதலி - mayooran - 12-09-2005

காற்றெழும்
கடற்கரையோரம்
கால் நனைத்த
கன்னியவள் சுடிதாரோ
வானவில்லின் வர்ணம் காட்ட
சீறிவரும் அலைகளை
ரசித்தபடி
தேவதையாக நின்ற
அவள் அழகை
ரகசியக் கண்களால்
ஆராதனை செய்தேன்

ஓப்பனையில்லா
துருதுருத்த விழிகளுடன்
கன்னத்தில் வியர்வை
éத்திருந்த நிலவு முகமாக
ஒளி தந்தாள்

முதல் பார்வையிலேயே
அந்த வசீகர முகம்
இதயத்துள் புகுந்துவிட்டது
வெந்து துடித்து
வேதனையில் மடிந்து
திருடிய முகத்தை
ஓராயிரமுறை
பார்க்கத் தூண்டியது

அவஸ்தையைக் கொடுத்து
உள்ளத்துள் புயலாகப்
புகுந்தவள் நினைவோ
என்னை தென்றலாகத்
தாலாட்ட
என் உள்ளம் நினைத்ததை
சொல்லத் துணிகிறேன்

இதயத்துள் புரளும்
ஆசையது திரளும்போதில்
மனமோ வரைகிறது
உன்மீது என் உள்ளம் கொண்ட
காதலை

கலாபக் காதலியே
பிக்காசோ வரைந்த
ஓவியம் போலிருந்தே
ஒரு பேச்சும் பேசாத கண்ணே
நெஞ்சின் உணர்வுக்குள்
ஒன்றிவிட்ட காவியப்பெண்ணே
கண் வீச்சைக் காட்டிவிட்டாய்
என் மூச்சில் உயிரில்லையடி
விழியசைவால் விடை பகரும்வரை
துடிக்கிறேன் துவள்கிறேன்

வெண்ணிலவு மங்கையின்
தங்கையே
முல்லைப்é மணமெடுத்து
என் மனதிற்குள் மணக்கின்ற
தித்திப்பு இனிப்éற
சித்தத்தில் இனிக்கின்ற
சுகச் சொல்லொன்று
கூறாயோ கண்ணே
www.autham.com


- RaMa - 12-10-2005

ஒரு முதல் சந்திப்பை வர்ணிக்கும் கவிதை நல்லாயிருக்கு. நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு.