![]() |
|
விழி மூடி நீயும் தூங்காலாமோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விழி மூடி நீயும் தூங்காலாமோ? (/showthread.php?tid=2121) |
விழி மூடி நீயும் தூங்காலாமோ? - iruvizhi - 12-09-2005 <b>ஏறாவூ என்னுமோர் காலணியில் அங்கே படப்போகுதாம் சிங்களச்சிப்பாயின் காலணி. இதனை கேட்ட பின்னும் மௌனமாய் இருக்கலாமோ தமிழா நீ? வீண் வம்பு செய்கின்ற வீணருக்கு. விடிவு இனி இல்லையென உரத்து உரைக்காது. விழி மூடி நீயும் தூங்காலாமோ? அண்ணன் தம்பிகள் நமக்கிடையே பகையுணர்வைத்தூண்டி விட எண்ணிவிட்டான். எட்டப்பர் கூட்டத்தை நம்பாதீர்! அவன் எரியும் தீயில் எண்ணையை ஊற்றிடுவான். அன்னியனின் சதி வலையில் நாங்கள் எரிகையிலே. எட்டப்பன் எட்டிநின்று சிரித்து மகிழ்ந்திடுவான். சிங்கள நேவிக்கு இடங்கொடுத்து. இரண்டாயிரன் குடும்பங்களிற்கு குழி பறித்து. தமிழர்களின் குடிகெடுக்கும் சிங்களத்தின் கோரமுகம் இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? புரிந்துவிடும் வானில் குண்டுகள் கொண்டு வந்து கொட்டுவான். வழியில் நங்கயரை சீண்டுவான். நாளை கோவில் மசூதிக்குள் அரசமரம் நடுவான். அதற்கப்புறம் என்ன? அதற்கு ஒரு சிங்கள பெயரிமிட்டு பேரூர் ஆக்கிடுவான். இதுதான் காலம் காலமாய் தமிழனின் வரலாறு. இனிப்பைக் கொடுத்து இடத்தை பிடுக்கும் வேலையில் அவன். இனிப்பை பதுக்கி இலையான் கலைக்கும் எண்ணத்தில் ...............</b> Re: விழி மூடி நீயும் தூங்காலாமோ? - iruvizhi - 12-09-2005 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. - tamilini - 12-09-2005 சமகால ஏறாவூர் நிலைமைகளை கருவாய்க்கொண்டு வந்த கவிதை உண்மை சொன்னது. இதை புரியவும் எல்லோ வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->Quote:அண்ணன் தம்பிகள் - RaMa - 12-10-2005 புரிந்துவிடும் வானில் குண்டுகள் கொண்டு வந்து கொட்டுவான். வழியில் நங்கயரை சீண்டுவான். நாளை கோவில் மசூதிக்குள் அரசமரம் நடுவான். அதற்கப்புறம் என்ன? அதற்கு ஒரு சிங்கள பெயரிமிட்டு பேரூர் ஆக்கிடுவான். இதுதான் காலம் காலமாய் தமிழனின் வரலாறு. எதிரி வரலாற்றின் அடுத்த பதிவுக்காக எடுத்திருக்கும் திட்டத்தை பொடியாக்க நாம் அணிதிரள வேண்டும் என்று நிஐத்தை கூறும் கவிதை அருமை. - Nitharsan - 12-10-2005 காலத்திற்க்கேற்ப கவி தந்து உணர்வுகளை சீண்டிய இருவிழிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.... - Mathuran - 12-10-2005 இருவிளி உங்கள் கவித உணர்வுவோடு நன்றாக இருக்கின்றது. சரி இவ்வாறு எழுதுவதால். ஏது புதிதாக நிகழ்ந்து விடுமா? ஆனால் உங்கள் ஆர்வத்தினை மதிக்கின்றேன். இதுபோன்ற கவிதைகளினூடே சொல்லும் விடயங்கள் மக்களை சிந்திக்க தூண்டுமா? - jcdinesh - 12-10-2005 உங்கள் ஆக்கம நல்லது தொடர்ந்து எழுதுங்க - sWEEtmICHe - 12-10-2005 Quote:பகையுணர்வைத்தூண்டி விட எண்ணிவிட்டான்.:roll: :roll: :roll: - iruvizhi - 12-10-2005 வாழ்த்துவதோடு நிற்காது குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். அதனை உள்வாங்க காத்திருக்கின்றேன். |