![]() |
|
போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால் (/showthread.php?tid=2070) |
போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால் - malaravan - 12-12-2005 வணக்கம் வாசகர்களே! இப்பகுதியை அரசியல் பகுதியில் தான் எழுத முற்பட்டேன். ஆனால் அங்கே விசேட உறுப்பினர்கள் மட்டும்தான் எழுத முடியுமாம். ஆகவே இங்கே எழுதுகின்றேன். தொடர்ந்து இருக்குமோ தெரியாது. இருப்பினும் ஒரு கேள்வி கேட்பேன். ஆனால் மூன்று பகுதிகளான கேள்வி. விளக்கங்களை எழுதுங்கள் பார்ப்போம். அக்கேள்வியானது. இலங்கையில் 4ம் கட்ட போர் தொடங்குமா? என்பதே. அப்படி போர் தொடருமானால் அது அரசாலா?, அன்றி புலிகளாலா?, அல்லது போரே நடைபெறாதா? உங்கள் விரிவான பதிலை எதிர்பார்க்கின்றோம். பரிசில்கள் வழங்கப்படமாட்டாது. அரசியல் அறிவை மட்டும் பார்ப்போம். நன்றி மலரவன் www.tamilkural.com - Danklas - 12-12-2005 இதில யோசிக்கிறதுக்கு ஒண்டுமில்லை மலரவன்,, விடுதலைபுலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வெகு விரைவில் முன் வைக்க வேண்டும் எண்டு கூறி இருந்தார், இல்லையேல் தமிழரின் சுயநிர்ணய போராட்டம் அடுத்த ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்,.... ஆனால் தற்பொழுது தென் இலங்கையில் நடப்பது என்ன? சுவீடன் நாட்டிலிருந்து கடற்படையினருக்கு கப்பல் கொள்வனவு, இந்தியா கடற்படையின் கடற்படை பயிற்சி, இந்திய இராணுவ, புலனாய்வு தலைவர்களின் இலங்கை விஜயம், இலங்கை அமைச்சர்களின் இந்திய விஜயம், எதுக்கு இதல்லாம்? இந்திய 9 புலனாய்வு பிரிவும், இந்திய கடற்படையும் இனைந்துதான் தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க போகின்றதா? அதைவிட சமாதனாம் மூலம் தீர்வை காண முனைவதாக கூறிக்கொள்ளும் ராஜ புக்ஸா, எதுக்கு ஒரு கேனையை இராணுவத்தளபதியாக நியமிக்கவேண்டும்,,(அதிண்ட உடம்பு வளர்ச்சி அடைந்த அளவுக்கு மூளை வளர்ச்சி அடையல்லை, அது சிங்கள அரசியல் தலைமைக்கும், எனது கும்பலுக்கும் உள்ளதுதானே) அதுக்கு என்ன கதைக்கிறம் ஏது கதைக்கிறம் எண்டு புரியாமல் (தேனி, அதிரடி, நெரு மாதிரி) புசத்திறதே வேலையாப்போச்சு (அதாவது தன்னைத்தானே புகழ்வது,,, :evil: :evil: இப்போது பார்க்கபோனால், இலங்கை அரசும், விடுதலை புலிகளும் போரை தொடங்காமல் சமாதான வழியில் செல்ல நினைத்தாலும், வைக்கல் பட்டறை நா*** மாதிரி அருகில் இருக்கும் இந்தியா இதை செய்யவிடாது, ஏனெனில் இந்தியாவில் அரசியல் விபச்சா***ம் நடாத்தும் கிழட்டு அரசியல் வாதிகளும் இந்திய 9 புலனாய்வு பிரிவும் இதற்கு ஒரு பொழுது சம்மதிக்கபோவது இல்லை,, தங்கள் நாட்டில் 60% பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பாக்கிஸ்த்தான், பங்களதேஸ், சீனா, இலங்கை, தமிழீழம் என்று ஒவ்வொரு நாட்டிலும் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள். :evil: :evil: மொத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சேர்ந்து புலிகளை உசுப்பேத்தி விடுகிறார்கள், 20 வருட காலமாக எந்த ஒரு அரசாங்கத்தின் உதவியுமில்லாமல், தங்கள் நாட்டு மக்களின் பங்களிப்பிலும், தியாகத்திலும் 70% நிலப்பரப்புகளை மீட்டு அங்கே நிழல் அரசாங்கத்தை நடாத்துகின்ற புலிகளுக்கு இந்திய இலங்கை அனுபவம் அனுபவம் என்று தங்களையே தாங்கள் மெச்சிக்கொள்ளும் கிழட்டு அரசியல் பருப்பு வேகாது,,,, ![]() ஆக மொத்தில் ஒரு அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்த இனம் தனது சுயநிர்ணய போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்கு மக்கள் பலமும், ஆயுதபலமும், அரசியல் பலமும், அந்த விடுதலை இயக்கத்தை புரிந்து கொண்ட சர்வதேச நாடுகளும் (தென் ஆபிரிக்கா, நோர்வே, பின்லாந்த் போன்ற) அவர்களின் பக்கம் இருக்கும் பொழுது எதற்கும் அஞ்சத்தேவையில்லை,, நியாயம் என்றும் தோற்றதில்லை, வெற்றி தமிழர் பக்கம்... 2006 முற்பகுதியில் கொடியேற்றம்... நடுப்பகுதியில் தேர், தொடர்ந்து 2007/2008ல் <b>தமிழீழ பாராளுமன்றத்தில்</b> புலிகளின் தலைவரின் உரை.... ,,,
- தூயவன் - 12-14-2005 டண் நீங்களே இப்படிச் சொன்னபிறகு ஏதும் மறுப்பு வருமா? நடக்கும் நடக்கவேண்டும் என நம்புவோமாக <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- mahilan - 12-15-2005 டண் நீங்களே இப்படிச் சொன்னபிறகு ஏதும் மறுப்பு வருமா? நடக்கும் நடக்கவேண்டும் என நம்புவோமாக தூயவன் சொன்னது உண்மை நம்புவோமாக |