![]() |
|
திரு.தேவன் நாயர் மறைவு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: திரு.தேவன் நாயர் மறைவு. (/showthread.php?tid=1963) |
திரு.தேவன் நாயர் மறைவு. - AJeevan - 12-18-2005 <img src='http://tamiloviam.com/img/devan1.jpg' border='0' alt='user posted image'> <b>திரு.தேவன் நாயர் மறைவு. </b> <span style='color:blue'>- குமார் (சிங்கப்பூர்) Quote:<img src='http://www.singapore-elections.com/pe/images/cvdnair.jpg' border='0' alt='user posted image'>[size=15] சிங்கப்பூரின் இன்றைய வெற்றிகர வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியும் போராட்டகுணத்தில் இரும்பு மனிதராகவும் விளங்கிய திரு. தேவன் நாயர், கனடாவிலுள்ள ஹாமில்டன் நகரில் கடந்த 2005 மார்கழி 7ம் திகதி மறைந்துவிட்டார். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராகவும் திரு.லீ குவான் இயூ அவர்களுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் அவர். இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டை மீட்டு வெற்றிப்பாதையில் செலுத்தவேண்டிய அவசர தருணத்தில், திரு. லீ குவான் யூ அவர்களுடன் இவர் ஆற்றிய பணி மகத்தானது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் தனது மனைவியை இழந்த அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரு.தேவன் நாயர் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். </span> (காலம் தாழ்ந்த செய்திதான் இருப்பினும் ஓர் பதிவு.- அஜீவன்) <b>தேவன் நாயர் பற்றிய குமாரின் கட்டுரைகள்:</b> <img src='http://img369.imageshack.us/img369/9929/leedevaajeevan0ul.jpg' border='0' alt='user posted image'> Devan Nair and Lee Kuan Yew எப்பிறப்பாயினும் அதன் இருத்தல் மற்றும் வாழ்தலின் சிறப்பானது அது முடிவுறும் நேரத்தில் உணரப்பட்டுவிடும். வாழ்தலின்போது உரைக்காமல் உறைந்து கிடந்த அனுமானங்கள், முடிவுறுதலின் போது உண்மைகளையும் நுட்பங்களையும் தெளிவாகக் காட்டிவிட்டுச் செல்லும். கலைந்து கிடந்த அப்பிம்பம் எங்கேனும் ஓரிடத்திலாவது தெளிவானதொரு வானவில்லாகக் காட்சி தரக்கூடும். பிணமெரிக்கப் பயன்படும் விறகிலிருந்து பிணமாகும் மனிதர்கள் வரை எல்லாம் அப்படித்தான். எந்த நிறுத்தத்தில் நாம் இறங்கிக்கொண்டாலும் சரி; எத்தனை முறை மீண்டும் ஏறினாலும் சரி. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் பொருளாதார முதன்மைக்கும் முன்னோடிகளாய் நின்ற இந்தியர்களில் இன்னொரு முக்கியமானவர் திரு. சி.வி தேவன் நாயர். 1914 ஆம் வருடம் கேரளாவிலிருந்து பிழைப்பதற்காக மலாயாவிற்கு வந்தார் அவரது அப்பா. தனியாரின் ரப்பர் தோட்டம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அத்தோட்டத்திலேயே செல்வாக்கோடு வாழ்ந்த அவருக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஆறு பெண்குழந்தைகளும் பிறந்தன. மூன்று ஆண்மகவுகளில் மூன்றாவதாய் 1923 ஆம் ஆண்டு 'மலாக்கா' நகருக்கு அருகில் உள்ள 'ஜசின்' என்ற ஊரில் இருந்த ரப்பர் தோட்டத்தில் 'செங்கரா வெட்டில் தேவன் நாயர்' பிறந்தார். ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போரின் போது மலாயாவையும் கைப்பற்ற, மலாயாவின், ரப்பர் மற்றும் பனைத்தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அடிமைகளும் அவர்களின் தேவைகளுக்கு அவசியமாயினர். ரயில்பாதை போடும் பொருட்டும் இன்னபிற ஏவல்களுக்கும் தோட்ட அடிமைகளை, ஒவ்வொரு தோட்டத்திற்கும் வந்து மொத்தம் மொத்தமாக அள்ளிச்சென்றனர். அள்ளிச்செல்லப்பட்டவர்களில் பலர் வீடு திரும்பியது தெய்வாதீனமாக எப்போதாவது ஒன்றோ இரண்டோ நடந்து வந்தது. மீண்டு வந்தவர்கள் இன்னொரு பிறவி எடுத்தவர்களானார்கள். இந்நிலையில் திரு. தேவன் நாயரின் அப்பா கணக்கராய் இருந்த அத்தோட்டத்திலும் பலர் அவ்வாறு மறுநாள் இழுத்துச்செல்லப்படுவதாய் ஜப்பானியர்கள் அறிவித்திருக்க, 'அவர்களை அனுப்பி வைத்தால் தீராத பாவத்திற்குத் தான் ஆளாக நேரிடுமே என்றும் 'அனுப்பாவிட்டால் தன் தலை உருளுமே' என்றும் தவித்துக்கொண்டிருந்தார் அவர். சிறுவனாய் இருந்த தேவன் நாயருக்கு பிரச்சனை புரிந்தது. அதிலிருந்து தன் தந்தை மீண்டு வர, அன்று அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி எல்லாம் தொழிலாளர்களும் அன்று பாதுகாப்பாக உயிர்தப்பினர். திரு. தேவன் நாயர் முதன் முதலாய் போராட்டவாதியானதும், ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு கொண்டு, மலாயாவில் ஜப்பானியர்களை எதிர்த்து காட்டுக்குள் திரிந்துகொண்டிருந்த கொரில்லாப் படையினரான 'ஜப்பானிய எதிர்ப்பு மலாய மக்கள் ராணுவத்தில் (Malayan People's Anti-Japanese Army, MPAJA)' சேர உறுதுணையாய் இருந்ததும், கம்யூனிசக் கட்சிகளின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானதும் என அவரின் எல்லா அரசியல் போராட்ட வாழ்வுக்கும் அந்த நிகழ்வே அடித்தளமாய் அமைந்தது. தமது பத்தாம் வயதில் சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்த அவர், தொடக்கக்கல்வியும் உயர்கல்வியும் சிங்கப்பூரில் பயின்றார். ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கிய இவர் பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து மலாயாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டுக்கொண்டிருந்த மலாயன் கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரமும் செயலார்வத்தோடு துடிப்பாகவும் இருந்த அவருக்கு விரைவில் சிங்கப்பூரில் நிலவி வந்த பல்வேறு தொழிற்சங்கங்களிடையே செல்வாக்குப் பெருக, சிங்கப்பூரின் கம்யூனிசக் கட்சியில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லும் அளவுக்கு, 'முக்கிய ஐந்து நபர்களில்' ஒருவராய் வந்தார். சிங்கப்பூரில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்களால், அவர்களது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த கம்யூனிசத் தலைவர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி 1951 ஆம் ஆண்டு முதல் 1953 ஆண்டுவரை ஜெயிலில் இருந்தார் திரு. தேவன் நாயர். திரு. லீ குவான் யூ அவர்கள் லண்டனில் படித்து விட்டுத் திரும்பி வந்து, சிங்கப்பூரில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்த பொழுது, ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராயும் தீவிர கம்யூனிச சங்கங்களின் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்கிய தேவன் நாயருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது மிக நெருக்கமான நட்பாக வளர்ந்தது. பிறகு திரு. லீ குவான் யூ அவர்களும் அவரது கல்லூரித் தோழர்களுமாய், ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கிய 'மக்கள் செயல் கட்சியில்' (1955) சேர்ந்தார். பொதுவுடைமை சித்தாந்தங்களும் குடியாட்சித் தத்துவங்களுமாய் இணைந்திருந்த அக்கட்சியில் தேவன் நாயரோடு மற்ற கம்யூனிசத்தலைவர்களும் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். மக்கள் செயல் கட்சியின் 'மத்திய நிர்வாக செயல் குழு' உறுப்பினராக இவர் இருந்தார். 1955 ஆம் அண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 4 வேட்பாளர்களை நிறுத்த, அவற்றில் ஒருவராய் '·பேரர் பார்க்' தொகுதியில் நின்ற திரு. தேவன் நாயர், மற்ற மூவரும் வெற்றி பெற, 400 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் தொடர்ந்து தொழிற்சங்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுத்துக்கொண்டு வந்தார். சிங்கப்பூர் தொழிற்சாலை, கடைத்தொழிலாளர்கள் சங்கத்திலும் சிங்கப்பூர் டிரக்ஷன் கம்பெனி சங்கத்திலும் முக்கியப்பொறுப்புகளில் இருந்து வந்தார். சிங்கப்பூரில் அப்போது தொடர்ந்து நடந்து வந்த சீன- மலாய் இனப்பிரச்சனைகளில் கம்யூனிச சக்திகளும் முக்கிய பங்கேற்றிருப்பதாகச் சந்தேகப்பட்ட அப்போதைய அரசு, மக்கள் செயல் கட்சியிலும் இருந்த பல கம்யூனிசத் தலைவர்களை சிறையில் அடைத்தது. அப்படி சிறையிலடைக்கப்பட்ட எட்டுப்பேரில் திரு. தேவன் நாயரும் ஒருவர். 1959 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 'மக்கள் செயல் கட்சி' அமோக வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிக்க, 'சிறையிலிருக்கும் எட்டுப்பேரையும் விடுதலை செய்தால்தான், தான் ஆட்சி அமைக்கப்போவதாக,' திரு. லீ குவான் யூ அவர்கள் சொல்ல, அவரின் பிடிவாதத்திற்கு இணங்கி அப்போதைய அரசு அவர்கள் எட்டுப்பேரையும் விடுவித்தது. எட்டுப்பேரும் பிறகு வெவ்வேறு சூழ்நிலையில் திரு. லீ குவான் யூ அவர்களுக்கு எதிராக ஆட்சிக்களத்தில் குதிக்க, அன்றுமுதல் கடைசி வரை திரு. லீ குவான் யூ அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் திரு. தேவன் நாயர் மட்டுமே! கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த எல்லா பிரமுகர்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்சிகளில் சேர்ந்தும் புதுக்கட்சி ஆரம்பித்தும் பிரிந்துவிட, திரு. தேவன் நாயர் மட்டுமே கடைசி வரை 'மக்கள் செயல் கட்சியில்' இருந்தார். 1964 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சிங்கப்பூரிலிருந்து மலேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் செயல்கட்சியின் முதல் வெற்றியாளராக பாராளுமன்றத்துக்குச் சென்றார். மலேசியா சிங்கப்பூரிலிருந்து விலகிய பின், மலேசியாவிற்குத் திரும்பிய அவர், மலேசியாவில் தங்கி, ஜனநாயக செயல் கட்சியை (Democratic Action Party) உருவாக்கி அதன் முதல் பொதுச்செயலாளராக இருந்தார். பிறகு சிங்கப்பூரில் நிலவி வந்த தொழிலாளர்களின் பெரும் பிரச்சனைகளைச் சமாளிக்க திரு. லீ குவான் யூ அவர்களால் மீண்டும் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார். அன்று சிங்கப்பூருக்கு வந்தவர், திரு. லீ குவான் யூ அவர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளிலும் தோள் கொடுத்து உதவினார். எல்லா உழைப்புக்கும் பலனாக, 1981 ஆம் ஆண்டு, திரு. லீ குவான் யூ அவர்களால், சிங்கப்பூரின் 'மூன்றாவது அதிபராக' சிறப்புடன் பதவியில் அமர்த்தப்பட்டார் திரு. தேவன் நாயர்! பதவியேற்றுச் சில வருடங்கள் கழித்து, இத்தகைய சிறப்புகளைக்கொண்ட திரு. தேவன் நாயர் மீது என்ன குற்றச்சாட்டு எழுப்பட்டு பதவியிறக்கம் செய்யப்படப்பட்டார் தெரியுமா? 'பெண்பித்தர் மற்றும் குடிகாரர்' என்று! எப்படி நடந்தது இது? உண்மையில் குடிகாரரா அவர்? ஏன் இதை லீ குவான் யூ அவர்களுக்குத் தெரியாமல் மறைத்தார்கள்? <img src='http://www.escapefromparadise.com/Images/awchenghu.jpg' border='0' alt='user posted image'> அவர் மனைவி இவைகளைப்பற்றி என்ன சொன்னார்? http://tamiloviam.com/unicode/04280504.asp <img src='http://www.collaboration.org/97/fall/aum/devkosh.gif' border='0' alt='user posted image'> சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு. தேவன் நாயர், மலேசியாவின் மலாக்கா பகுதியில் பிறந்து, இளமையிலே கம்யூனிசக்கொள்கைகளில் பிடித்தம் கொண்டவராய் வளர்ந்து, தொழிற்சங்கங்களின் தலைவராய் சிங்கப்பூருக்கு ஆற்றிய சீர்மிகு பணி குறித்தும் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாய் அவர் ஆனதும் நான்கு வருடங்கள் கழித்து அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி இறக்கம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட சில விஷயங்களைச் சென்றவாரம் பார்த்தோம். சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது. பின்னே? ஜனாதிபதியாயிருப்பவர், குடிகாரர் மற்றும் பெண்போகர் என்று பதவி இறக்கம் செய்யப்பட்டால்? சிங்கப்பூர், 'தனிநாடு' என்ற சட்டை போட ஆரம்பித்து சில வருடங்களில், பொருளாதார அளவில் முழு வெற்றியை அடைய அது எத்தகைய முழுமுதற் முயற்சிகளை எடுத்து வந்தது என்பதை திரு. ஆல்பர்ட் வின்ஸிமியுஸ் அவர்களின் தேர்ந்த திட்டங்களின் வழி முதல் அத்தியாயங்கள் சிலவற்றில் கண்டோம். தொழிற்துறையில் தான் விரும்பிய அளவு சீரிய முன்னேற்றம், திரு. லீ குவான் யூ அவர்களுக்கு கிடைப்பது அரிதாகவே இருந்துவந்தது. கம்யூனிச சக்திகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டைக்காப்பாற்றிய அவருக்கு, தொழிலாளர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது என்று திகைத்திருந்த நிலையில்தான் அவருக்கு வரமாகக் கிடைத்தார் திரு.சி.வி.தேவன் நாயர். 1964ல் மலேசிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மலேசியாவில்தான் இருந்தார் திரு. தேவன் நாயர். 1969ம் வருடம், அவரை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்ப அழைத்தார் திரு. லீ. சிங்கப்பூரில், தொழிலாளர்களிடையே ஒற்றுமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க அவர் அழைக்கப்பட்டார். 'என்.டி.யூ.சி' எனப்படும் 'தேசிய தொழிலாளர் வாரிய காங்கிரஸ¤க்கு' (இதுபற்றி அதிகமான தகவல்கள் பிறகு!) மீண்டும் அவரைத் தலைவராக்கினார். அங்கிருந்து திரு. நாயரின் சாதனைச் சரித்திரம் ஆரம்பித்தது. 1970-ல் தொடங்கி 1981 வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் அதன் தலைவராயிருந்து அதனைச் செம்மைப்படுத்தினார் அவர்! திரு. தேவன் நாயரின் எழுச்சிமிகுந்த நாட்டு நலப்பணிக்கு மாற்றாக, 1981 ல் அவரை, நாட்டின் மூன்றாவது அதிபராக்கி அழகுபார்த்தார் திரு. லீ குவான் யூ. 1981-லிருந்து 1985 மார்ச் பதினைந்து வரை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த அவரின் பதவிக்கு, மலேசியாவின் கிழக்குப்பகுதியான 'சரவா' மாநிலத்திலிருந்து வந்தது அந்த ஆபத்து. சரவா மாநிலத்தின் 'குச்சிங்' பகுதிக்கு பார்வையாளராக அவர் சென்றபொழுது, நிலை தடுமாறிய குடிபோதையில், அங்கிருந்த பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றதாக 'சரவா' பகுதி டாக்டர் ஒருவர், மார்ச் 14 அன்று, திரு. தேவன் நாயரின் சிங்கப்பூர் தனி மருத்துவருக்கு போன் செய்தார். திரு. தேவன் நாயரை அங்கிருந்து உடனே அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் இல்லையேல் நாட்டின் பெருமைக்கும் அதிபர் பதவிக்கும் களங்கம் நேரும் என்று சொல்லி வற்புறுத்தினார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தனிமருத்துவர் 'டாக்டர் தம்பையா', உடனே குச்சிங்கிற்குப் பறந்தார். தன்னோடு காரில் வந்த மந்திரியின் மனைவியிடமும், விருந்திலிருந்த பெண்கள் மற்றும் மருத்துவமனை நர்சுகளிடமும் அவர் மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூருக்கு அவரை அழைத்து வந்தார் அவரது மருத்துவர் திரு. தம்பையா. அன்றிரவு ஒன்பது மணி அளவில், விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச்சொல்ல தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு, ஜனாதிபதி மாளிகையான 'இஸ்தானா'விற்கு வந்தார் திரு. லீ. அடுத்த நாள் பாராளுமன்றத்தில், திரு. தேவன் நாயர் குறித்தான, திரு. லீ குவான் யூ அவர்களின் அறிக்கை இப்படிச்சொல்லியது. "திரு. தேவன் நாயரின் மனைவி, குச்சிங்கில் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார். தனது கணவர் முழுதும் மாறிவிட்டதாகவும், நாளுக்கு நாள் மிகவும் அதிகமாக குடிப்பதாகவும், கடந்த சில மாதங்களாக ஒரு இரவில் முழு விஸ்கி போத்தலைக் காலிசெய்யும் அளவுக்கு மது அருந்துவதாகவும் என்னிடம் என் மனைவியிடமும் சொல்லி வருத்தப்பட்டார். வீட்டு வேலையாட்களைச் சீக்கிரமே இதற்காக அனுப்பிவிடுவதாகவும் அதனால் அவர்களுக்கு அது தெரியாது எனவும் சொன்னார். அடிக்கடி தன்னை, தனது கணவர் திரு. தேவன் நாயர் அடிப்பதாகவும், சரவா மாநிலத்தில் இப்படி நடக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததால்தான் தான் அவரோடு செல்லவில்லை என்பதாகவும் அவரின் மனைவி எங்களிடம் சொன்னார்" "சில வாரங்களுக்கு முன் ஒருநாள், தலையில் 'விக்' வைத்துக்கொண்டு, தனது பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் இல்லாமல், தானே காரை ஓட்டிச்சென்றிருக்கிறார் தேவன் நாயர். ஜெர்மானியப்பெண் ஒருவரை அங்கு தனிமையில் அவர் சந்தித்திருக்கிறார். அடுத்தநாள் காலை அவரின் மனைவி அங்கு சென்று பார்த்தபொழுது, காலி மதுப்பாட்டில்களும் சிகரெட் பெட்டிகளும் லிப்ஸ்டிக்குகளும் கிடந்தனவாம். பிறிதொருநாள் அப்பெண்ணையே தனது மாளிகைக்கு விருந்திற்கும் அழைத்து வந்தாராம் இவர். இதையெல்லாம் கேட்ட திருமதி. தேவன் நாயரை அவர் அடித்திருக்கிறார். சுய உணர்வு என்பது அவருக்கு இல்லவே இல்லை என்பதும் குடிக்கு முற்றிலும் அடிமையாகிவிட்டார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது" - இப்படி அமைந்தது திரு லீ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த திரு. தேவன் நாயர் குறித்தான அறிக்கை! இதனைத் தொடர்ந்து ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. பரிசோதனையின் முடிவில் அக்குழுவின் தலைவரான டாக்டர். நகுலேந்திரனின் அறிக்கை பின்வருமாறு இருந்தது. "பல ஆண்டுகள் ஆன அவரின் தொடர்ந்த குடிப்பழக்கத்தால் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். அவரது மன நிலையின் இயக்கம், அவரின் குடியைப்பொறுத்து இயங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. நீண்ட நாட்கள் அளவில்லாமல் குடித்ததின் விளைவாக மூளையின் செயல்திறனும் ஞாபகசக்தியும் போய்விட்டன. ஆண்மையற்றவராகி விட்டார். இவைகளினால் அவர் தனது சுய சிந்தனையை இழந்து சமுதாயப்பொறுப்பற்று நடக்க ஆரம்பித்துவிட்டார்" மருத்துவக்குழுவின் இவ்வறிக்கைக்குப் பிறகு, திரு. லீ அவர்களும் மற்றொரு அமைச்சரான திரு.இராஜரத்தினம் அவர்களும் திரு.தேவன் நாயர் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டிய அவசியத்தை அங்கு அவருக்கு எடுத்துச் சொன்னார்கள். கொஞ்சம் தயக்கத்திற்குப்பின் திரு. தேவன் நாயர் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதற்கடுத்த நாள், தேவன் நாயர், திரு. லீக்கு எழுதிய கடிதத்தில், "ஒரு வருடத்திற்கு முன், மதுவுக்கு நான் அடிமையாகிவிட்டதை உணர்ந்துகொண்டேன், ஆனால் அதைச் சரிசெய்வதற்குப்பதிலாக மிகவும் கேவலமான முறையில் மீண்டும் மீண்டும் அதற்குள் நானே முழுகிவிட்டேன். தங்களைச் சந்தித்து இதனைத் தெரியப்படுத்தி விடலாம் என இருமுறை முயன்றேன். ஆனால் அதற்கான தைரியம் என்னிடமில்லை. நான் திருந்துவதற்கு எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இதனால் நழுவவிட்டு விட்டேன்" இவ்வாறு அதில் சொல்லப்பட்டிருந்தது. தனது வாழ்நாளில் தான் செய்த இரு தேர்வுகள், எப்படி தவறுதலாக அமைந்து, தன்னைத் தவிக்க வைத்தன என்பதை திரு. லீ குவான் யூ மிகவும் வருத்தத்தோடு சொல்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் மற்றும் தேவன் நாயர் விஷயம் ஆகியனவற்றில் சரியான நபரை தவறான பதவியில் வைத்ததும், சரியான நபர் எதிர்பாராவிதமாக தவறான பாதையில் நடந்ததும் என தான் எடுத்த எத்தனையோ முடிவுகளில் இந்த இரண்டு மட்டும் சற்றுப் பிசகிவிட்டதாகவே அவர் உணர்கிறார்; வருந்துகிறார். 'அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசாங்க உதவித்தொகை எதுவும் கொடுக்கும் வழக்கம் நடைமுறையிலும் இல்லை, சட்டத்திலும் இல்லை. ஆனால் தேவன் நாயர் அவர்களுக்கு, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் அதுவும் மருத்துவக்குழு ஒன்று தொடர்ந்து அவரைப் பரிசோதித்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் ஒப்புக்கொண்ட அவர் பிறகு மறுத்துவிட்டதாகவும்' திரு. லீ சொல்கிறார். சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து, 'FEER' (Far Eastern Economic Review) இதழில் எழுதிய ஒரு கடிதத்தில், திரு. தேவன் நாயர், 'தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததே இல்லை' என்று கூற, ஏழு டாக்டர்களின் மருத்துவ அறிக்கையையும், 'மதுவுக்கு அவர் அடிமையானவர்தான்' என்ற உறுதிமொழியையும் சிங்கப்பூர் அரசு, FEERக்கும் திரு. நாயருக்கும் அனுப்பி வைத்தது. பிறகு ஒரு வழக்கில் அவர், திரு. லீயைச் சாட, அவர் இவரின் மேல் வழக்குத்தொடுத்து எல்லாத் தகவலறிக்கைகளையும் முன்வைக்க, தேவன் நாயரும் அவரது குடும்பமும் மலேசியாவிற்கும் அங்கிருந்து பிறகு கனடாவுக்கும் இடம்பெயர்ந்தது. பதினோரு வருடங்கள் கழித்து, கனடாவில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், 'தனது உடல்நிலை தவறாக கணிக்கப்பட்டதாகவும் தன்னை குடிகாரனாய், மதுவுக்கு அடிமையானவனாய் மக்களுக்குக் காண்பிப்பதற்காக, மருத்துவர்களோ அல்லது வேறு யாரோ வேண்டுமென்றே அதற்கான மாத்திரைகளைப் போட்டு அப்படி நிரூபித்ததாகவும் சொன்னார். நல்ல நண்பர்களாய், நெருங்கிய சினேகிதம் உடையவர்களாய், ஒரே தூணாக நின்று சிங்கப்பூரை வளர்த்தவர்களாய், ஒரே வருடத்தில் பிறந்தவர்களுமாயிருந்த திரு. லீக்கும் திரு. தேவன் நாயருக்கும் இருந்த உறவு அத்துடன் முடிவடைந்தது. தேவன் நாயர் அவர்கள் மலேசிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டபின், அவரது தொகுதியில் அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்ட அவரது மனைவி 'திருமதி. தனலெட்சுமி தேவன் நாயர்' தான் சிங்கப்பூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான இந்திய பெண்ணாவார். கடந்த ஏப்ரல் 18 அன்று கனடாவின் 'ஒண்டாரியோ' நகரில் இறந்துபோனார் அந்த அம்மையார்! அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்திருந்தார் திரு.லீ குவான் யூ. அவசரமாய் ஒரு அதிபரை பதவியிலிருந்து இறக்கியது சரி. அடுத்ததாய் பதவியில் அமர்த்தப்போவது யாரை? அத்தகைய சிறந்தவர்களை அரசு, வலை வீசித் தேடியபோது, திரு. லீ குவான் யூ அவர்களின் ஆரம்பம் முதல் இன்று வரை நெருங்கிய தோழராய் இருக்கும் மக்கள் செயல்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான 'எஸ்.ராஜா' எனப்படும் முன்னாள் அமைச்சர் ராஜரத்தினம் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்தான் 1985 முதல் 1993 வரை இருமுறை தொடர்ந்து சிங்கப்பூரின் அதிபராய் இருந்த திரு. வீம் கீ வீ! தனது '89 ஆம் வயதில்' கடந்த மே 2 அன்று இறந்துபோனவர்; மக்களின் மனதில் என்றும் வாழ்பவர் அவர்! http://yemkaykumar.blogspot.com/2005/12/blog-post.html <img src='http://www.channelnewsasia.com/imagegallery/store/php2OFhOh.jpg' border='0' alt='user posted image'> <b>Former Singapore President Devan Nair dies at age 82</b> SINGAPORE : Former Singapore President CV Devan Nair has died in Canada. He was 82. He was the reluctant Singapore President who resigned and then chose to live out his remaining years abroad. But more than this, Mr Devan Nair was a teacher, a communist, unionist and ruling party stalwart -- all in a lifetime that was staunchly dedicated to nation-building in Singapore's early history. The third President of Singapore, Mr Nair was in office from 1981 to 1985. Born in August 1923, Mr Devan Nair, the son of a rubber plantation clerk in Malaysia, identified with the working class early on in life. His first political conviction was Communism, one that was sealed when the trainee teacher met PV Sharma, an influential figure in the teachers' union. Under Mr Sharma's influence, Mr Devan Nair joined the Anti-British League, a cover for the Malayan Communist Party, and in 1951 was detained on St John's Island. Said Patrick Jaswan, Mr Devan Nair's friend, "His university is actually the prison. There was not a single book left that he didn't browse through." Out of prison, he continued with left-wing union activism. He was an effective mobiliser and, with Chinese-educated activists like the late Lim Chin Siong, had a considerable following. In 1954, Lee Kuan Yew asked Mr Devan Nair to join him so the unions could provide the mass base for a new party. It was a marriage of convenience, but an uneasy one for Mr Devan Nair. Referring to those days, he said, "There was a great turmoil going on inside me because I was caught in an emotional fix. On the one hand, my head was increasingly with Lee Kuan Yew and company. But on the other hand, my heart emotionally, I was tied up with these people. And it became an intolerable contradiction." When the Hock Lee bus riots took place, the British government cracked down on the unions and Mr Devan Nair and his comrades, were arrested. Mr Lee persuaded Mr Devan Nair to get all the detainees to commit to a non-communist Malaya, before securing their release. Although he was closer to the People's Action Party after it came into power in 1959, this did not mean Mr Devan Nair was willing to fight his communist friends. So, he went back to teaching, but was soon drawn back out into the political fray by Mr Lee. Said Janadas Devan, Mr Devan Nair's son, "He would say to my father, 'Here we are Rajaratnam and I, Toh Chin Chye, fighting with our backs to the wall and there you are marking exercise books.'" Mr Devan Nair's work with the PAP included a stint as the only elected PAP MP in Malaysia after the merger. Loyal to those who voted for him, Mr Devan Nair stayed put after the Separation, and formed the Democratic Action Party. But he soon found his position untenable. Mr Lee, Singapore's Prime Minister from 1959 to 1990, said on 23 October 1981, "It was not a lack of courage that made him leave Kuala Lumpur. The Cabinet decided that Singapore-Malaysia relations would always be bedevilled if Devan Nair remained as a DAP leader. I persuaded him to come back. I told him that the trade union movement in Singapore had to be rebuilt on different assumptions and different attitudes." And that was Mr Devan Nair's most significant work -- forming the National Trades Union Congress. But instead of calling for strikes, he focused on "delivering the goods"; his fighting ring was not the streets, but the Industrial Arbitration Court. To win over the workers used to confrontation, the teacher in him, came to the fore. Mr Devan Nair, in a 1981 Teachers' Day Reception speech at the Istana, said, "We were all engaged in a vast educational effort but we did not teach in classrooms. I myself had to conceive of the whole labour movement as a gigantic educational workshop." In 1969, the NTUC held a major "modernisation" seminar which Mr Devan Nair saw as a "do or die" attempt to revitalise the labour movement. At its centerpiece, was the setting up of workers' cooperatives, like INCOME, WELCOME and COMFORT. Mr Devan Nair did not make his debut in the Singapore Parliament till 1979, when he won the Anson seat left vacant after veteran unionist P Govindasamy died. But his biggest personal decision came when he was asked to take up Singapore's highest public office, a position he was to later say was in contradiction to his temperament. Said Mr Janadas Devan, "He didn't want to be president. He was persuaded but to the very last moment, he tried to get out of it." He added, "He, I supposed, tried to change the nature of the office to fit his personality but there are limits beyond which that cannot be done. So in retrospect it was quite clear that it was the wrong job for the wrong person." The late author and journalist, Dennis Bloodworth, summed up Mr Devan Nair's experience as President: "As President with largely constitutional functions, he was to put it frankly, bored. He didn't like the job, he was not really cut out to meet the presidents, kings, queens and others from these countries that visited Singapore. That was not the Nair thing at all." Mr Bloodworth added, "He started off life as a dogmatic, argumentative sort of chap, 'pugnacious' when Lee Kuan Yew first saw him; and he was hardly suited for what rather was in those days, the milk and water role of being president." In March 1985, a drinking problem led to Mr Devan Nair's resignation. Then-Prime Minister Lee said on 28 March 1985, "Mr Speaker, honourable members will want to join me in wishing him fortitude in his task of rehabilitation. With the help of his wife and family, he must find the strength and stamina to break his dependency." A few years later, Mr Devan Nair was to dispute the diagnosis of alcoholism and a public exchange of letters ensued. Mr Devan Nair, who migrated to Canada with his wife, was philosophical about his place in Singapore's history. He once said his only regret in life was to allow himself to be persuaded to occupy a highly ceremonial office so contradicted by his temperament. But he blamed no one. And after he had said his piece for what it was worth, Mr Devan Nair added that he expected "to fade away, like all old warriors, into the past." Some verdicts, he said, "are best left to history." - CNA /ct/de http://www.channelnewsasia.com/stories/sin.../182396/1/.html - AJeevan - 12-22-2005 <b>ஜனவரி 7 தேவன் நாயருக்கு நினைவஞ்சலி</b> தேசிய தொழிற்சங்கக் காங் கிரஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி தேவன் நாயருக்கு நினைவஞ்சலி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. என்டியுசியின் தலைமைச் செயலாளரான லிம் பூன் ஹெங், இன்றைய நம்முடைய வெற்றிக்குத் தேவன் நாயரும் அப்போது பணி ஆற்றியவர் களும் காரணம் என்றார். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் தேவன் நாயருக்கு நடத்தப்படும் நினைவு அஞ்சலி பற்றி குறிப்பிட்ட திரு லிம், அதனை ஜனவரி ஏழாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது பற்றி அவரது குடும் பத்தினரிடம் கலந்து ஆலோசிக் கப்படும் என்று சொன்னார். என்டியுசி நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அங்குதான் திரு நாயர், தொழிற்சங்க ஊழியர்களுக்காக பல முறை உரை நிகழ்த்தியிருக் கிறார். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முன் னோடித் தலைவரான திரு தேவன் நாயர் இம்மாதம் 7ம் தேதி கனடாவில் காலமானார். திரு தேவன் நாயர் 1981ம் ஆண்டு முதல் 1985 வரை அதிபராக இருந்தவர். 1961ம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைமைச் செய லாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரு தேவன் நாயர். <span style='color:brown'><b>அமரர் தேவன் நாயருக்கு இரங்கல்</b> சிங்கப்பூர் உருவாக்கத்தில் பங்காற்றிய முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் தேவன் நாயரின் மறைவு குறித்து அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் உருவாக்கத்தில் குறிப்பாக, தொழிற்சங்க அமைப்பின் உருவாக்கத்தில் அவரது முக்கிய பங்களிப்பை தலைவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். அதிபர் எஸ்.ஆர். நாதன், தேவன் நாயரின் மகன் ஜனதாஸ் தேவனுக்கு எழுதிய கடிதத்தில் பல காரணங்களுக்காக சிங்கப்பூர் மக்கள் மறைந்த அமரர் தேவன் நாயரை நினைவில் வைத்திருப்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு கல்விக் கழகம். அவர் உருவாக்கிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மூலம் தம்முடைய அடையாளத்தைச் சிங்கப்பூர் சமூகத்தில் அவர் ஆழப் பதித்துள்ளார். அவர் தம் வாழ்வில் பட்டங்கள் பெறவில்லை என்றாலும் வாழ்நாள் முழுதும் அறிவைப் பெற்றுத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் பணம் சேர்ப்பதில் நாட்டம் கொள்ளவில்லை. தேசிய தொழிற்சங்க காங்கிரசை உருவாக்கிய காலகட்டத்தில் அவருடன் பணியாற்றிய போது அவருடைய கடின உழைப்பை நான் அறிந்தேன். சுதந்திர சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கச் சின்னமாக அமரர் தேவன் நாயர் தேசிய தொழிற்சங்க காங்கிரசை உருவாக்கினார் என்று அதிபர் எஸ்.ஆர் நாதன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் லீ சியென் லுìங் தேவன் நாயரின் மகனுக்கு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். திரு நாயர் நவீன சிங்கப்பூரை உருவாக்கு வதில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றி உள்ளார். நாட்டின் உருவாக்கக் காலங்களில் கடப்பாட்டுடனும் தீரத்துடனும் அவர் பணி யாற்றி உள்ளார். அறுபதுகளின் சிரமமான கம்யூனிச காலகட்டத்தில் திரு நாயர் உறுதியுடன் செயல்பட்டார். கம்யூனிச ஆதரவு உடைந்தபோது, அவர் மக்கள் செயல் கட்சியுடன் தொடர்ந்து இருந்தார். வாழ்க்கையின் அடிப்படை பொருளாதார உண்மைகளை அவர் தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். தேசிய சம்பள மன்றத்தின் வெற்றிக்கு உதவினார். நாட்டு வளர்ச்சிக்கு தேவன் நாயர் செய்த சேவைகளைச் சிங்கப்பூர் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் லீ அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தேவன் நாயரின் மகன் ஜனதாஸ் தேவனுக்கு எழுதிய கடிதத்தில், தேவன் நாயர் ஓர் அரசியல் போராளி, அறிவாற்றல் மிக்க தலைவர் என்று மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர சிங்கப்பூருக்கு அடித்தளம் அமைத்ததில் அவர் ஆற்றிய பங்கையும் தொழிலாளர் இயக்கத்தில் அவரது பங்களிப்பையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று திரு கோ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரப்பர் தோட்ட கணக்காளரின் மகன் என்ற தனது வேரை அவர் எப்போதும் மறந்தது இல்லை. கீழ்த்தட்டு மக்களுடன் அவர் தம்மை ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டார். தொழிலாளர்களின் நலவாழ்வு அவருக்கு எப்போதும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுடைய முன்னேற்றத்துக்காக அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார் என்று தேவன் நாயரைப் பற்றி திரு கோ குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் இயக் கத்தில் ஈடுபட்டபோது தான் தேவன் நாயரை முதன் முதலில் நான் சந்தித்தேன். 1977ல் சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனத்தின் இயக்குநராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது தேவன் நாயர் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைப் பொதுச் செயலாளர். அவருடைய பின்னணியைப் பற்றி அறிந்திருந்ததால் அவரிடம் எனக்கு மதிப்புகலந்த அச்சம் இருந்தது. ஆனால் தனது தன்மையான பண்பினால் அவர் என்னுடைய அச்சத்தைப் போக்கினார். ஓராண்டு கழித்து அவர் சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனத்தின் தலைவரானார். நாங்கள் இருவரும் இணைந்து, என்டியுசி பேர்பிரைஸ் உருவாக்கம் போன்ற பல முக்கிய முயற்சிகளில் பணியாற்றியுள்ளோம் என்று திரு கோ நினைவுகூர்ந்தார். தேவன் நாயர் 1979ல் ஆன்சன் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, பிரச்சாரத்தில் நான் உதவினேன் என்று குறிப்பிட்ட மூத்த அமைச்சர், அந்த மூத்த அரசியல்வாதியிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன் என்றார் திரு கோ. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமரர் தேவன் நாயருக்குத் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ளது. அவர் ஓர் அணுக்கமான தோழர் - நண்பர் - அதிபர் - தொழிற்சங்கவாதிகளின் முன்னோடி. சிங்கப்பூரில் நவீன தொழிற்சங்க கொள்கைகளை உருவாக்குவதில் தேவன் நாயர் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளார் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூறியுள்ளது. நன்றி: தமிழ் முரசு</span> - Mathan - 12-24-2005 பல அறியாத தகவல்களை தந்திருக்கின்றீர்கள் தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா. |