Yarl Forum
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - RaMa - 12-19-2005

கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல.

எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள்.

பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி


- Snegethy - 12-19-2005

உதவி வேணும் றமா எந்த இசைத்தட்டு என்று சொல்லுங்கோ அல்லது இன்னும் வரி சேருங்கோ.


- RaMa - 12-19-2005

இசைத்தட்டு தெரியாது ஸ்நேகிதி.. ஆனால் இது ஆரம்ப கால பாடல் ...

பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார்
எங்கள் அண்ணன் வந்து உங்களுக்கு மாலை சூடுவார்
மாலை சூடுவார்


- Snegethy - 12-19-2005

றமா எனக்குத் தெரியாது போல இருக்கு.ஆரம்ப காலப் பாடல் என்றாக் கொஞ்சம் கஸ்டம் தான் :-)


- RaMa - 12-19-2005

ஒக்கேய் ஸ்நேகிதி நான் ஏதும் மாறி எழுதியிருக்கிறனோ தெரியாது.. ஆகவே பல்லவியையும் சொல்கின்றேன்
அந்த பாடல்
நடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாராடா
நீ நாச வேலை செய்த பின் வருந்துவாயாடா
அடர்ந்த காட்டில் ஏரியும் தியாகம் நெருப்பு தானாட


- Snegethy - 12-19-2005

றமா உந்தப் பாட்டு முந்திக் கேட்டிருக்கிறன் ஆனா தாயகப் பாடல் என்று தெரியாது.

இந்த முறை மாவீரர் நாளில ஒரு பாட்டுக் கேட்டன்
"முட்டி முட்டிப் பால் குடிக்குத் கன்னுக்குட்டி போல"
எந்த இசைத்தட்டு என்று யாருக்குத் தெரியுமா?


- அருவி - 12-19-2005

Snegethy Wrote:றமா உந்தப் பாட்டு முந்திக் கேட்டிருக்கிறன் ஆனா தாயகப் பாடல் என்று தெரியாது.

இந்த முறை மாவீரர் நாளில ஒரு பாட்டுக் கேட்டன்
"முட்டி முட்டிப் பால் குடிக்குத் கன்னுக்குட்டி போல"
எந்த இசைத்தட்டு என்று யாருக்குத் தெரியுமா?

<b>அண்ணைத்தமிழ்</b>


- nallavan - 12-19-2005

ராமா அல்லது ரமா,
இப்பாடல் டி.எம்.சௌந்தர ராஜனால் பாடப்பட்டது.
ஆனால் நீங்கள் தந்த சரணத்தில் சில தவறுகள் உள்ளது.

பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் "<b>பாதை</b>" எந்த நாளும் இல்லை நேர்வழி
அற்புதங்கள் நாளை தமிழ் ஈழம் காணுவார் -
"<b>எம்</b>"
அண்ணன் வந்து உங்களுக்கு "<b>தீர்ப்புக் கூறுவார்</b>"


- Snegethy - 12-19-2005

அருவி நன்றி.நீங்கள் ஒரு பாட்டும் போட்டியில போடவில்லையா?


- RaMa - 12-19-2005

நிலவு வந்து பொழியும் நேரம் நீ
வரவில்லை நான் நீண்ட நேரம் பார்த்திருந்தேன் பதில் வரவில்லை
ஊர் முழுதும் ஒலம் நீர் உறங்கியது காணும்
உறங்கியது காணும் நீர் ஒடி வந்தால் போதும்.


- Snegethy - 12-19-2005

வானுயர்ந்த காட்டிடையே??? அந்தப் பாட்டா ? அல்லது தென்னங்கீற்றுத் தென்றல் வந்து மோதும்???


- RaMa - 12-19-2005

ஸ்நேகிதி.
அது தென்னங்கீற்று தென்றல் வந்து வீசும் என்றா பாடல் தான்...
மற்ற பல்லவியை நீங்களே போடுங்கள்


- அருவி - 12-19-2005

Arrow அடுத்த பாடல்
தாயகத்தில் அமையின்றி தாய்மனது தவிக்கையிலே
பூமியிலே நீபிறந்தாய் பொன்மகனே கண்மணியே
நீதியென்ற பாதையிலே வீறுநடைபோட்டிடடா
நீபிறந்த நாட்டினது வேதனையை நீக்கிடடா..


- Snegethy - 12-19-2005

அருவி க்ளூ குடுங்கோ தெரியாத பாட்டுப் போல இருக்கு


- அருவி - 12-19-2005

பாடல் இசைத்தட்டு யாக ராகங்கள்..


- Snegethy - 12-19-2005

அப்பிடியொரு இசைத்தட்டே எனக்குத் தெரியாது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எக்ஸாம் முடிச்ச ஆக்கள் எல்லாரும் எங்க போயிட்டினம்??வந்து என்ன பாட்டெண்டு சொல்லுங்கோ பார்ப்பம் ஊர் சுத்தினது காணும.


- அருவி - 12-19-2005

Quote:அருவி க்ளூ குடுங்கோ தெரியாத பாட்டுப் போல இருக்கு


நெஞ்சம் என்னும் கோவிலிலே நஞ்சை வைத்து வாழுகின்றேன்
நீசர்களின் மாயையிலே நீ மயங்கிப்போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா


- தூயவன் - 12-19-2005

சுகமான பாடல் இது. சொல்லுங்கோ பார்ப்பம்.

"பள்ளியறைகளில் புள்ளிமயில் என துள்ளிக்குதித்தது போதும்
நீ அள்ளிச் சொருகிய மெல்ல நடந்திடும் கொள்ளை அழகுகள் போதும்....................."


- Snegethy - 12-19-2005

றமாக்கா சொல்றா "பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளி கொள்ள வந்தவனே"


- RaMa - 12-19-2005

அருவி Wrote:
Quote:அருவி க்ளூ குடுங்கோ தெரியாத பாட்டுப் போல இருக்கு




நெஞ்சம் என்னும் கோவிலிலே நஞ்சை வைத்து வாழுகின்றேன்
நீசர்களின் மாயையிலே நீ மயங்கிப்போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா


பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளி கொள்ள வந்தவனே
வஞ்சமற்ற உன்மனதில் வாழ்வதுதான் தெய்வமடா

சரியா அருவி?