Yarl Forum
7 புலிகள் சிறைபிடிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 7 புலிகள் சிறைபிடிப்பு (/showthread.php?tid=1876)



7 புலிகள் சிறைபிடிப்பு - Luckylook - 12-22-2005

விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படை பயங்கர சண்டை: 3 வீரர்கள் பலி 7 புலிகள் சிறைபிடிப்பு
டிசம்பர் 22, 2005

கொழும்பு:

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று திடீரென மீண்டும் போர் வெடித்தது.



தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு கடற் பகுதிக்குள் வந்த இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகுகளை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதையடுத்து நடந்த மோதலில் 3 இலங்கை கடற்படையினர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

கடற்படையின் பதில் தாக்குதல் நடத்தி 7 விடுதலைப் புலிகளை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

மன்னார் அருகே தங்களது இரு படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தா பெரைரா கூறினார்.

இதையடுத்து கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், 3 கடற்படையினரை புலிகள் கடத்திச் சென்றதாகவும் கூறிய அவர், அந்த மூவரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது என்றார்.

அதே நேரத்தில் 7 விடுதலைப் புலிகள் தங்களிடம் பிடிபட்டதாகவும் பெரைரா கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், புலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசின் செய்தித் தொடர்பாளரும் நலத்துறை அமைச்சருமான நிமல் சிரிபாலா கூறியுள்ளார்.

நார்வே மத்தியஸ்தத்தில் கடந்த 2002ம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இதன் மூலம் புலிகள் மீறிவிட்டதாகவும் நிமல் சிரிபாலா குற்றம் சாட்டியுள்ளார்.

இத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

நார்வேயில் பேச்சு: ராஜபக்ஷே மறுப்பு

முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடத்தலாம் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இலங்கை அதிபர் மகந்தா ராஜபக்ஷே நிராகரித்திருந்தார்.

பேச்சுவார்த்தைகளை ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தலாம் என ராஜபக்ஷே கூறி வருகிறார். ஆனால், ஆசியாவில் நடத்தலாம் என்ற அதிபரின் கருத்தில் உள் நோக்கமும் சதியும் இருப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் புலிகளின் கோரிக்கையை நிராகரித்து ராஜபக்ஷே நிருபர்களிடம் கூறுகையில்,

ஓஸ்லோவுக்குச் செல்லலாம் என்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் எங்களது நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம். தனது நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளுமாறு ஜப்பான் கூறியுள்ளது. அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், சிலருக்கு இன்னும் மேற்கத்திய மோகம் பிடித்து ஆட்டுகிறது. இதனால் தான் ஓஸ்லோ செல்வோம் என்கிறார்கள். இதை புலிகளும் ஒப்புக் கொள்வார்கள் என்று கருதுகிறேன். இதனால் ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம் என்றார் ராஜபக்ஷே.

இதற்கிடையே அமைதி முயற்சிகளில் நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலையிடுவதை ராஜபக்ஷே விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதை அவர் ராஜபக்ஷே மறுத்துள்ளார். தனிப்பட்ட நபர்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

( நன்றி : தட்ஸ் தமிழ்)


- kuruvikal - 12-22-2005

அவர்கள் புலிகள் அல்ல அப்பாவி மீனவர்கள் என்றுதான் தகவல்கள் சொல்கின்றன...! பல பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர் சிறீலங்கா கடற்படையால்..! :wink: Idea


- Thala - 12-22-2005

செய்தி கொண்டு வந்த இடம் எங்கே லக்கிலுக்...???


- Luckylook - 12-22-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-22-2005

<b>வட இலங்கையில் தொடரும் வன்முறைகள்</b>

இலங்கையின் வடக்கே அரச படைகள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.

மன்னார், யாழ்ப்பாணம், ஆகிய நகரப்பகுதிகளில் பதட்டம் நிலவுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பொலிசார் காயமடைந்தனர். யாழ் மாவட்டத்தில் படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் வடக்கே மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இன்று காலை 7.30 மணியளவில் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ரோந்நு படகுகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 3 கடற்படையினரைக் கடத்திச் சென்றிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையை முடித்துக் கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு படகுகளில், ஒரு படகில் இருந்த மூவரே கடத்திச் செல்லப்பட்டதாகவும், மற்ற படகில் இருந்த மூவரும் கடலில் பாய்ந்து தப்பியபோது கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் குழுவினரே இதனைச் செய்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய மன்னார் பள்ளிக்குடா கடற்பகுதியில் கடற்புலிகளின் படகொன்றை இன்று காலை இலங்கைக் கடற்படையினர் தாக்க முற்பட்டபோது, தற்காப்புக்காகப் புலிகள் திருப்பித் தாக்கியதில் தமது தரப்பில் ஒருவர் காயமடைந்ததாகவும், இந்த மோதலின்போது காயமடைந்த கடற்படைச்சிப்பாய் ஒருவர் தங்களிடம் பிடிபட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

பள்ளிமுனை கடலோரத்தில் கடற்படை முகாமருகில் நடைபெற்ற இந்தச்சம்பவத்தில் கடற்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

<b>இதன்போது ருக்மன் பிகராடோ என்ற மீனவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நடைபெற்ற தேடுதலின்போது, சந்தேகத்தின் பேரில் 9 பேரைக் கடற்படையினர் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</b>

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மன்னார் நகரப்பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடத்திய எச்சரிக்கை வேட்டுக்களையடுத்து, பதட்டம் ஏற்பட்டது.

நகரில் திறந்திருந்த கடைகள் அலுவலகங்கள் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடின.

<b>இதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் நேரடியாக மன்னார் கடைவீதி மற்றும் பள்ளிமுனை பகுதிகளுக்குச் சென்று படை அதிகாரிகள் மற்றும் போர்நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, பொதுமக்களுக்குப் பாதிப்பு எற்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார். </b>

இதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பொலிசார் காயமடைந்ததாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

கந்தர்மடம் அரசடிச் சந்தியில் இன்று நண்பகலளவில் நடைபெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ற் ஒருவர் காயமடைந்ததையடுத்து, படையினர் திருப்பித் தாக்கியதில் சிவிலியன்களான இரண்டு பெண்கள் காயமடைந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் ஐந்து சந்தி பகுதியில் இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது படையினரும் திருப்பிச் சுட்டுள்னனர்.

சில நிமிடங்களுக்குத் தொடர்ந்த இந்தச் சம்பவத்தையடுத்து கனரக வாகனங்களில்; வேகமாக அப்பிரதேசத்திற்கு விரைந்த மேலதிக இராணுவத்தினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்து, சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது வீதியில் சென்ற பலரும் தாக்கப்பட்டதாகவும், முச்சக்கர வண்டியொன்று சேதமடைந்ததாகவும், இதனால் யாழ் நகரக்கடைகள் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ் நகரில் உள்ள தினசரி அலுவலகம் ஒன்றிற்குச் செய்தித்தாள் பெற்றுக் செல்வதற்காகச் சென்ற கே.நவரட்ணம் என்ற பகுதிநேர பத்திரிகை விற்பனையாளர் அடையாளம் தெரியாத ஆயதபாணிகளினால் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் தமிழ் தேசிய எழுச்சிக்குழுவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ்

[size=16]<b>சிங்கள அரசுடன் இணைந்து இந்திய ஊடகங்கள் செய்தித் திரிபு..! அம்பலமாகும் உண்மைகள்..!

சிறைபிடிக்கப்பட்டது புலிகள் அல்ல.. பள்ளிமுனை வாழ் அப்பாவி மக்கள்..! அவர்களை விடுவிக்க மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது..!</b>


- தூயவன் - 12-23-2005

பேய் அடித்தவர்களுக்கு புலியும் பொதுமக்களும் ஒன்றாகத் தானே தெரியும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nitharsan - 12-23-2005

அதென்றும் இல்லை து}யவன் இப்ப தான் சிங்களப்படைகள் மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்ற கருத்தை ஏற்றிருக்கினம் போல...


- ஈழமகன் - 12-23-2005

<b>மக்கள் தான் புலிகள்</b> என்பதை உணர்ந்துள்ளார்கள்............