Yarl Forum
யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் (/showthread.php?tid=1785)



யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் - வினித் - 12-25-2005

<span style='font-size:25pt;line-height:100%'>யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் </span>
[ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2005, 22:23 ஈழம்] [ம.சேரமான்]
<b>யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதலை நடத்திய 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் உடலை யாழ். மருத்துவமனையில் சேர்ப்பித்திருப்பதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.</b>

4 பேர் உயிரிழந்துள்ளது உறுதியானதாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் தாக்குதலை நடத்தியவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிரிழந்த 4 பேரில் இருவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லுரியின் வாட்சேமன் கிருஸ்ணர் விமலேஸ்வரன் (வயது 31), யாழ். கொட்டடியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் வைத்திருந்த பாலசிங்கம் சந்திரகாந்தன்(வயது 24) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

<b>இந்த சம்பவத்தில் உயிரிழந்த கிருஸ்ணர் விமலேஸ்வரனின் உடல் கல்லுரிக்குள் கிடந்ததகாவும் அதை இராணுவத்தினரே வெளியில் எடுத்து வந்து தாக்குதல் நடந்த இடத்தில் கிடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கிருஸ்ணர் விமலேசுவரன் தனது கடமையைச் செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகாமையில் கல்லுரிக்கு உள்பகுதியில் பெருமளவிலான இரத்தம் சிதறிக் கிடப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்</b>.

ஊர்க்காவற்றுறை வேலனையிலிருந்து இடம்பெயர்ந்து மணிப்பாயில் வசித்து வந்தவர் பாலசிங்கம் சந்திரகாந்தன்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மல்லாகம் பதில் நீதிபதி சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் சந்திரகாந்தனின் உடலை அடையாளம் காட்டினர்.
<b>துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களுடன் உள்ள ஒரு பெண்ணின் உடலும் இந்த தாக்குதலில் பலியானோர் அல்லது தாக்குதலை நடத்தியவர் என்ற கணக்கில் இராணுவத்தினர் வைத்துள்ளனர்.</b>
ஆனால் அந்த பெண்ணின் உடலில் வழமையான அவரது உடையுடன் அவரை விடுதலைப் புலி போராளி என்று காட்டுவதற்கான உடை ஒன்றையும் இராணுவத்தினர் இணைத்துள்ளனர்.
<b>மேலும் இருதரப்புத் துப்பாக்கிச் சண்டை முடிந்த பின்னர் 20 அல்லது 30 நிமிடத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</b>
சந்தேகத்தின் பேரில் இதர பகுதிகளில் கைது செய்யப்பட்டோரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து இராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
<span style='font-size:30pt;line-height:100%'>யாழ். தாக்குதலை நடத்திய பொங்கியெழும் மக்கள் படையும் தாக்குதலை நடத்திய இருவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</span>
¿ýÈ¢: Ò¾¢Éõ.¦¸¡õ


- ப்ரியசகி - 12-25-2005

:twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :twisted: :twisted: Cry Cry Cry