![]() |
|
கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. (/showthread.php?tid=1772) |
கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. - Vaanampaadi - 12-26-2005 திங்கள் 26-12-2005 13:57 மணி தமிழீழம் [யாழ் நிருபர்] கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. திருவுருவப்படங்கள் தீக்கிரை. நல்லூர் முத்திரைச் சந்தையில் உள்ள கிட்டுபூங்கா இராணுவத்தினரால் நள்ளிரவு நேரம் அடித்துடைக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு இந்தப் ப+ங்காவில் வைக்கப்பட்டு இருந்த கேணல் கிட்டுவின் திருவுருவப் படம் உட்பட ஏனைய மாவீரர்களினதும் திருவுருவப் படங்களும் முத்திரைச் சந்தையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் அடித்துடைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் வங்கக் கடலில் காவியமாண கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்துப் பேரினதும் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. திட்டமிட்ட முறையில் இதனை அடித்துடைத்த இராணுவத்தினர் படங்களை எடுத்துச் சென்று வேறு இடத்தில் வைத்து தீயிட்டுச் சென்றுள்ளார்கள். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள முகாமில் தங்கியுள்ள இராணுவத்தினர் கிட்டு பூங்காப் பகுதிக்குச் சென்ற பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளார்கள். கிட்டுவின் படங்கள் அடித்துடைக்கப்பட்டு இருப்பதை படம் எடுக்க விடாது அப் பகுதியில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். இவ் சிறுவர் பூங்கா யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். Pathivu - ஊமை - 12-26-2005 சிங்கத்துக்கு பிறந்தவன் தான் சிங்களவன் என்று மகாவம்சம் கூறுகிறது. அது அப்படியாயின் மிருகம் எதைச் செய்யுமோ அதையே சிங்களவனும் செய்வான். ஆனால் புலியும் மிருகம் தான் பொறுத்திருந்து தான் பாருங்கள் - kurukaalapoovan - 12-26-2005 புலிகள் தான் தமிழர் தமிழர் தான் புலிகள் எண்ணிறம். அப்ப தமிழரும் மிருகத்தனமாக நடக்கப்போயினம் என்று அன்புடன் கூறுகிறீர்களா ஊமை அண்ணா? :roll: - வர்ணன் - 12-27-2005 ஊமை அவர்கள் ஏதோ செய்கிறார்கள். செஞ்சேனையும் அதை தானே செய்தது கிழக்கு ஜேர்மனிக்குள் நுளையும் போது. எதிரி படைகள் எப்போதும் அப்படிதான் நடந்து கொள்ளும் :roll: - ஆறுமுகம் - 12-27-2005 varnan Wrote:ஊமை நீ வேற அப்பு அதுக்கு முன்னமே குண்டு போட்டு அளிச்சுப்போட்டாங்கள். சிங்களவன் செய்யிறது மக்கள் படையை விட்டுட்டு புலிகளை வம்பிளுக்கிறாங்கள். அப்ப தானே புலிகள் அமைதியக் குலைச்சு சண்டைக்கு போவினம். அதான் அவங்கள் அப்பிடிச் செய்யிறாங்கள். - Thala - 12-27-2005 ஆறுமுகம் Wrote:நீ வேற அப்பு அதுக்கு முன்னமே குண்டு போட்டு அளிச்சுப்போட்டாங்கள். என்னத்தைக் குண்டு போட்டு அளிச்சவன்..?? பூங்காவையா இல்லை ஜேர்மனியையா சொல்லுறத விளக்கமா சொல்லுங்கோ ஐயா....! |