![]() |
|
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி (/showthread.php?tid=1673) |
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி - Vaanampaadi - 01-01-2006 மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ! ஏனெனில் இவர்களெல்லாம் ராமாயாணத்தையும் படித்துவிட்டு கோயிலையும் இடிக்கிறார்கள்! குரானையும் படித்துவிட்டு குண்டும் வைக்கிறார்கள்! மீண்டும் வா! இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்! அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்! பயப்படாமல் வா! உனது தோளுக்கு காவலாகவும் கொள்கைக்கு கோட்டையாகவும் இன்று நானும் இருக்கிறேன். எம்.கே. |