Yarl Forum
யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; (/showthread.php?tid=1641)



யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; - நர்மதா - 01-03-2006

யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!!
ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ
யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.

படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற ஒரு சில நிமிடங்களில் பலாலியிலிருந்து வந்த உலங்குவானூர்தி மூலம் படுகாயமடைந்த இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்ட இராணுவ சிப்பாய்களின் உடல்களும் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

யாழ். நகரப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்ததுடன்இ யாழ். மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகளையும் நோயாளிகளை பார்வையிடச் சென்றவர்களையும் அவர்களுக்கு உணவு எடுத்துச் சென்றவர்களையும் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவங்களினால் யாழில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டடு யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.


புதினம்