![]() |
|
இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை (/showthread.php?tid=1462) |
இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை - Vaanampaadi - 01-12-2006 <b>தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை</b> ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களை சோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர். அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களை கற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். Thatstamil - Vaanampaadi - 01-13-2006 <b>மேலும் 9 இலங்கை அகதிகள் ராமேஸ்வரம் வருகை</b> ஜனவரி 13, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் போர் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் 9 அகதிகள் இன்று ராமேஸ்வரம் வந்தனர். ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று மன்னார் பகுதியைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை விசாரித்த போலீஸார் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்று 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று வந்தவர்களில் நிறை மாத கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். இலங்கையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தமிழர்களின் வீடுகளை தீவைத்து எரிப்பதாகவும், தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அகதிகள் குமுறலுடன் தெரிவித்தனர். ஒவ்வொரு படகுக்கும் தலா 2,000 கொடுத்து அகதிகள் தமிழகம் வந்து கொண்டிருப்பதாகவும், மேலும் பலர் தமிழகம் வர காத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று தமிழகம் வந்த அகதிகள் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். Thatstamil |