Yarl Forum
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத (/showthread.php?tid=1446)



மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத - Vaanampaadi - 01-12-2006

வியாழன் 12-01-2006 22:53 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்]

மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு.
மட்டக்களப்பு நகரும் மற்றும் புறநகர் பகுதிகளும் இன்று மாலை சிறிலங்கா படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்பட்டதுடன். கடுமையான சோதணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வியாழன் அன்று மாலை வவுனியாவில் சிறிலங்கா கடற்படையினர் மீது இனம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் மலை 4.30 மணியலவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இராணு;ம் பொலிஸ் கூட்டாக சேர்ந்து சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என வேன் மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டி மற்றும் வீதியால் சென்றவர்கள் என பலரும் கடுமையான உடல் சோதணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆண்களின் மழைக்கவசம் கழற்றி சோதணையிட்டனர்.

இதனால் காரியலயத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த அனைத்து அரச ஊழியர்களும் பொதுமக்களும் பெரும் அசௌகரியத்தினை எதிர் நோக்கியுள்ளார்கள்.

இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு இராணுவ தலைமையகத்துடன் தொடர்வு கொண்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தினை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்;டக்களப்பில் அண்மைக்காலமாக நகர்புறங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்ளிலும் தொடர்ச்சியாக இனம் தெரியாத ஆயுதபாணிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையடுத்து மாவட்டத்தின் பாதுகாப்பினை அதிகரிக்கும் முகமாக இராணுவம் பொலிசார் குவிக்கபபட்டுள்ளார்கள்.

எனினும் நகர் பகுதியில் ஆங்காங்கே கைகுண்டு வீச்சும் துப்பாக்கி சுட்டு சம்பவங்களும் இடம் பெற்றதாகவே உள்ளது. இராணுவம் பொலிசாரினால் சம்பந்தப்பட்ட ஆயுதபாணிகளை கைது செய்யாது அப்பாவி பொதுமக்களை சந்தேகத்தின் பெயரி;;ல் தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்கள்.

தற்போது பண்டிகைக்காலம் என்பதால் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பெருமளவான பொதுமக்கள் சந்தைக்கு பொருள் கொள்வனவுக்காக வரும் வேளையில் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் வரும் இளைஞர் யுவதிகள் கடும் சோதணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் சுற்றுப்புறங்களின் வீதியால் சென்றவர்கள் அணைவரும் கடும் சோதணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். வீதியின் இருமருங்கிலும் தேடுதல்.

இன்று மாலை 4.00 மணியலவி;ல் மட்டக்களப்பின் தாண்டவன்வெளி சந்தி புதுபாலத்தின் சந்தி அரசயடி சந்தி மத்திய வீதி சந்தி ஆகிய இடங்களில் இராணுவம் பொலிசார் கூட்டாக சேர்ந்து வீதியால் சென்ற அரச அதிகாரிகள் பாதசாரிகள் என ஆண் பெண் என கடும் சோதணை நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் தொடர் படுகொலைகள் ஆயுத குழுக்களாலும் இனம் தெரியாத ஆயுதபாணிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இராணுவக்கட்டுபாட்டு பகுதிக்கு வருகின்ற அப்பாவி பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் என சோதணைக்குட்படுத்துவதும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்கள்.

தற்போது பண்டிகைக்காலம் என்பதால் நகர்பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான் சோதணைகள் மற்றும் இராணுவ கெடுபிடிகளினால் பொதுமக்கள் மத்தில் பெரும் அச்சத்தினை எதிர் நோக்கியுள்ளார்கள்.

Pathivu