![]() |
|
மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் (/showthread.php?tid=1351) Pages:
1
2
|
மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - மேகநாதன் - 01-16-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - தாயும், இரு மகள்களும் பலி, தந்தையும், மகனும் படுகாயம் </b> யாழ். மானிப்பாய்ப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த காடையர்களும், மாவீரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தில், தாயும் இரு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதுடன், தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாய் இந்துக் கல்லூக்கு அண்மையில் உள்ள முதலியார் கனகசபை வீதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்தவேளை அதிகாலை 12.15 மணியளவில் வீட்டினுள் புகுந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் தாயார் போஜன் ஆர்த்தநாகேஸ்வரி(51), மகள்களான போஜன் ரேணுகா(30), போஜன் சானுகா(23) ஆகியோர் கொல்லப்பட்டதுடன், தந்தையார் நாகேந்திரன் போஜன்(55) மற்றும் அவரது மகன் போஜன் உலாசன்(26) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உயிராபத்தான நிலையில் யாழ். அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். கொல்லன்கலட்டிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்கள் இடம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். கொல்லப்பட்ட ரேணுகா, விடுதலைப் புலிகளின் நிதர்சன நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 'அம்மா\" என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</span> <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - வர்ணன் - 01-16-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கவலையான செய்திகளே இப்போ எல்லாம் வந்து கொண்டு இருக்கு சரி அடிச்சவர்கள் எல்லாம் எங்கயும் ஓடிபோகல்ல ஊருக்குள்ளதான் இருக்காங்க சோ - அவர்களுக்கு எதிராய் நடக்க போகும் "நல்ல சேதிக்காய் காத்து இருக்கிறோம்" மாவீரர் குடும்ப உறவுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் துயர தகவல் தந்த உங்களோடு சேர்ந்து நாங்களூம் கோவம் - சோகம் அடைகிறோம் மேகநாதன் - kurukaalapoovan - 01-16-2006 மக்கள் படை தனது பதில் தாக்குதல்களை விரிவாக்கப் போவதை இந்த ஆக்கிரமிப்பு படைகளினதும் அவர்களது கைக்கூலிகளதும் கேழைத்தனமான வெறியாட்டம் உறுதி செய்கிறது. தலைக்குமேல் வெள்ளம் வந்த பின் மக்கின்னஸ் வந்தென்ன செல்கைம் வந்தென்ன - RaMa - 01-16-2006 . வெகுவிரைவில் பதில் தாக்குதல் செய்தியை கேட்க ஆவலாய் இருக்கின்றோம். அந்த கோழைகள் மண்ணுக்குள் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.. மாவீராரின் அன்னைக்கும் சகோதரிகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். அத்துடன் தந்தையாரும் சகோதரரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றோம். - பிறேம் - 01-16-2006 தம் அழிவிற்கு தாமே குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட மாவீரரின் அன்னைக்கும் ககோதரிகளிற்கும் கண்ணீர் வணக்கங்கள். - sinnappu - 01-16-2006 <b>மாவீரரின் அன்னைக்கும் சகோதரிகளிற்கும் கண்ணீர் வணக்கங்கள்.</b>
- ஊமை - 01-16-2006 போஜன் அண்ணா குடும்பத்தினர்க்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். இவர்கள் என்னோடு நன்கு பழகிய ஒரு குடும்பம். இவர்களின் மூத்த மகன் பெயர் உபாசனன்(உபா) இவர் ஒரு மாவீரர் ஆவார். தம்பி பெயர் உல்லாசன் (பொபி) சகோதரிகள் ரேணுகா, சானுகா, தாயார் அர்த்தநாகேஸ்வரி போஜன் அண்ணா முன்னர் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்தார். மனைவியாரும் அதே சங்கத்தில் தான் வேலைசெய்தார். அத்தோடு சாரணர் / பரி.யோவான் முதலுதவி படை என்பவற்றின் காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் சொந்தவீடு வீடு கொல்லன்கலட்டி( காங்கேசந்துறை அருகில்) ஆர்.டீ.எஸ் கட்டடத்துக்கு அருகில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இவர்கள் மானிப்பாயில் கனகசபை வீதியில் தங்கி இருந்தனர். வீரமறவனின் வீட்டினில் குள்ளநரிகளின் கைவரிசை <img src='http://img297.imageshack.us/img297/8315/manipai16010617vz.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img297.imageshack.us/img297/5229/manipai16010652ec.jpg' border='0' alt='user posted image'> - Vasampu - 01-16-2006 <b>உயிரிழந்த போஜன் அண்ணாவின் மனைவி மகள்களுக்கும் எனது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலி. போஜன் அண்ணாவும் அவரது மகனும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்</b> - sri - 01-16-2006 உயிரிழந்த மாவீரரின் அன்னைக்கும் சகோதரிகளிற்கும் கண்ணீர் வணக்கங்கள். தந்தையும் மகனும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் - MUGATHTHAR - 01-16-2006 போற போக்கைப் பாத்தா இந்தியன் ஆமி காலத்திலை நடந்த மாதிரிக் கிடக்கு...........இறந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .......... - நர்மதா - 01-16-2006 தேசியத்தலைவர் கூறியது போல பலவீனமான மக்களை கண்டால் எதிரி பாய்ந்து பாய்ந்து தாக்குவான் என்ற ரீதியில் இன்று அப்பாவி பொது மக்களை தாக்குகின்றனர் இதற்கான பதில்கள் வெகு தூரத்தில் இல்லை இதற்கான பதில்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் கொடுப்பதற்கு கொடுப்பதற்கான தருனம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எதிரியானவன் தாய் மண்ணை வீட்டு ஓடும் நாள் வெகு துாரத்தில் இல்லை தேசியத்துக்காக தன்னுயிதை ஈர்ந்த குடும்பத்தின் சேகத்தில் நாமும் பங்கெடுப்போம் தந்தையும் மகனும் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் - Danklas - 01-16-2006 போஜனின் குடும்பத்துக்கு எனது கண்ணீர் அஞ்சலி... இந்த கோழைத்தனமான கொடுரச்செயலை செய்த வின்னர்களின் உடல்கள் சிதறவைக்கப்படவேண்டும், தன்னுடய இனம் வாழவேண்டும், சகோதரர்கள், பெற்றோர்கள் நன்றாக வாழவேண்டுமென நினைத்து எந்தவித புகழ், சன்மானத்தையும் எதிர்பார்க்காது களம் புகுந்த ஒரு மாவீரனின் குடும்பத்தை அதிகாலை வேளையில் தங்களின் காட்டுமிராண்டி வீரத்தனத்தை காட்டி இருக்கிறார்கள் காட்டுமிராண்டிகள், 40,000 பிணங்களை கொழும்புக்கு ஏற்றுமதி செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை,,, :evil: :evil: :evil: தமிழ் நெட், ஐபிசி, இந்தச்செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
- வினித் - 01-16-2006 [b]<span style='font-size:25pt;line-height:100%'>உறவுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் </span> - kurukaalapoovan - 01-16-2006 படங்களுடன் இது பற்றிய செய்தி பதிவில் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& - தூயவன் - 01-16-2006 ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!! - kuruvikal - 01-16-2006 எவ்வளவுதான் போர் உக்கிரமைடந்தாலும் அப்பாவி மக்கள் மீது இராணுவ வன்முறைகளைப் பிரயோகிக்க முடியாது என்பது ஐநா மனித உரிமைகள் சாசனத்தில் உள்ள ஒன்று. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை இன்னும் அமுலில் உள்ள சிறீலங்காவில் அதில் கைச்சாத்திட்டுள்ள சிறீலங்கா அரசும் அதன் படைகளும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை அமெரிக்க உட்பட மேற்குல அவுஸ்திரேலிய மனித உரிமைக்காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்னவோ..??! ஐநா சாசனத்தில் எதிரிப்படைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க சிறீலங்கா கடற்படை மீதான தாக்குதலை விழுந்து விழுந்து கண்டித்தவர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் அப்பாவிப் தமிழ் பொதுமக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதல்களை (திருகோணமலை மாணவர் படுகொலை உள்ளடங்க) கண்டிக்காது இருப்பது ஏன்..! ஏன் இவர்களுக்கு இந்த இட்டை வேடம்..! உயிர் நீத்த எம்முறவுகளுக்கு கண்ணீரஞ்சலிகள்..!
- iruvizhi - 01-16-2006 <b>மாவீரனின் குடும்பத்தாரின் இறப்பால், சோகத்தால் மூழ்கியது ஈழமெனும் நாடு. மறத்தாய் பெற்றெடுத்த மாவீரா! உன் இளப்பால் ஈழம் துடிக்கையிலே மனப்பால் குடிக்கும் கூட்டம் மதரை குறிவைத்து வெறியாட்டம் போடுதிங்கே. மானம் கெட்டவர்க்கு பாடை கட்டுவோம். மகிந்தருக்கு பாடம் புகட்டுவோம். நடுநிசியில் பேய்களைப்போல் பெருமைக்குரிய உயிர்கள் பலவை பேடிகள் எடுத்துவிட்டார். பொங்கல் முடிந்தபின்பும் தமிழர் மனங்களை பொங்கிஎழ வைத்து விட்டு போனவர்க்கு விரைவில் பொங்குவோம் என உறுதி கொண்டு. விழிகளை நெருப்பாக்கி விரைகின்றோம்.</b> - கீதா - 01-16-2006 [size=24]மாவீரரின் அன்னைக்கும் சகோதரிகளிற்கும் கண்ணீர் வணக்கங்கள்
- மேகநாதன் - 01-16-2006 மானிப்பாயில் நடந்த நடுநிசிப்படுகொலை!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி! மானிப்பாயில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியினரும் இணைந்து மேற்கொண்டதாக் கூறப்படும் நடுநிசிப் படுகொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகள்மாரும் உயிரிழந்துள்ளனர். தகப்பனும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கனகசபை வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த இவர்களின் வீட்டிற்குள் சம்பவம் நடந்த அன்று இரவு 11.45 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள் இவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சத்தத்தை கேட்டு வீட்டின் மேல்மாடியிலிருந்து இறங்கி வந்தவர்கள் மீதும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன்போது போஜன் அர்த்தநாகேஸ்வரி (வயது 51), மகள்களான போஜன் ரேணுகா (வயது 30), போஜன் சானுகா(வயது 23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகேந்திரன் போஜன்(வயது 55) மற்றும் அவரது மகனான போஜன் உல்லாசன் வயது 26) ஆகியோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த தந்தையும் மகனும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போஜன், சென். ஜோன்ஸ் அம்புலனஸ் படைப்பிரிவின் யாழ். மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் ஆவர். கொல்லங்கலட்டியை சொந்த இடமாக கொண்ட இவர்கள் அங்கியிருந்து இடம்பெயர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மானிப்பாயில் வசித்து வந்தனர். படுகொலை செய்யப்பட்ட ரேணுகா விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. [color=brown]<i><b>கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஈ.பி.டி.பியினருக்கு மானிப்பாய் தொகுதியிலிருந்தே அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றன</b></i> <i><b>தகவல் மூலம் - புதினம்</b></i> - cannon - 01-16-2006 Quote:ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர். [size=18]<b>இன்னும் எத்தனை நாட்களுக்கு உந்தக் கூலிகளின் வெறியாட்டங்கள்???? நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது!! கூலிகளே! தப்பக்கூட இடமில்லாது ஆகாயம்/தரை/கடல் எம்வசமாகப் போகிறது!! மிக விரைவில் வரப்போகும் அந்நாளுக்காக இன்றே தோண்டத்தொடங்கி விட்டீர்கள்.... உங்களுக்கான புதைகுளிகளை!!!!</b> |