Yarl Forum
மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது (/showthread.php?tid=114)

Pages: 1 2


மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது - aathipan - 04-22-2006

மலேசியாவில்
100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது
பக்தர்கள் கதறல்


கோலாலம்பூர், ஏப்.22-

மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர்.

சாமி கும்பிட்ட போது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

இடித்துத் தள்ளினர்

போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை இடித்துத் தள்ளினர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராக்கப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்ட போது, அதை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து விட்டனர். இதனால் நாங்கள் பிரார்த்தனையை பாதியிலேயே கைவிட வேண்டியதாகி விட்டது. அதிகாரிகள் கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.

இவ்வாறு அந்தப் புகாரில் சுப்பிரமணியன் ராக்கப்பன் கூறி இருந்தார்.

வணிக வளாகம்

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசாங்க நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. இங்கு பக்தர்கள் 100 ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்தக் கோவிலை இடித்து விட்டு இதில் மிகப் பெரிய வணிக வளாக கட்டிடத்தை கட்டுவதற்கு நகரசபை அலுவலகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கோவிலை இடிக்கப் போவதாக நகரசபை கவுன்சிலருக்கு நகரசபை கடிதம் எழுதியது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாமல் கோவில் இடிக்கப்பட்டது.

ஏற்கனவே 2 முÛ
2001-ம் ஆண்டும் 2004-ம் ஆண்டும் கோவிலை இடிக்க நகரசபை முயற்சி செய்தது. அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் தடுத்தனர். இப்போது இடித்துத் தள்ளி விட்டனர்.

இவ்வாறு ராக்கப்பன் கூறினார்.

நன்றி

தினத்தந்தி


- putthan - 04-22-2006

அங்கும் இந்துக்களை உசுப்பேற்றுகிறார்கள்.எங்கு போய் முடியுமோ??

இப்படியான சிறுபிரச்சினைகள் தான் பிற்காலத்தில் பூதகரமாக வெடிக்கிறது.


- karu - 04-22-2006

அன்னசத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணிம் கோடி
அதையெல்லாம் இடிச்சுப்போட்டு
ஆங்காங்கே வணிக வளாகங்களக் கட்டி
ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்புக் கொடுத்தல்


- Netfriend - 04-22-2006

புத்தர்... கிறிஸ்தவ...அல்லாகோயிலையும் தானே ஆங்காங்கே இடிக்கிறாக்கள்...
அய்யா.... மனிதர் நாம்... வாழவழிதேடி தடுமாறுகிறோம்... கோயில்களை இடித்தால்..... நமக்கென்ன..... அதுஎந்தகோயில் என்றால் என்ன...... அது எங்கென்றாலும் எமக்கென்ன...
:oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Idea


- Subiththiran - 04-22-2006

karu Wrote:அன்னசத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணிம் கோடி
அதையெல்லாம் இடிச்சுப்போட்டு
ஆங்காங்கே வணிக வளாகங்களக் கட்டி
ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்புக் கொடுத்தல்

கோயிலால் சோம்பேறிகள் அதிகமாகின்றனர். இடித்து வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் நல்லவிடயமே.


- Magaathma - 04-23-2006

Quote:ஆங்காங்கே வணிக வளாகங்களக் கட்டி

«íÌõ þ¾ÂÁ¢øÄ¡ þÂó¾¢Ãí¸ÙìÌò¾¡ý Ӿ̼õ.


- mathuka - 04-23-2006

Subiththiran Wrote:கோயிலால் சோம்பேறிகள் அதிகமாகின்றனர். இடித்து வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் நல்லவிடயமே.

அது உண்மை சுபித்திரன் இலங்கையில் மட்டும் இப்படி நடந்தால் நாடு எங்கோ போயிருக்கும்.<i>வேலை வினை கெட்டவளுக்கு பிள்ளை பராக்காட்டு என்பர்</i>.


- karu - 04-23-2006

லண்டனிலயும் கோயில் காறர் படும் பாடு பெரும்பாடு பாருங்கோ. சொந்த மச்சான் மாருக்குள்ளேயே குத்து வெட்டு இழுபறி. சும்மா தேள்வையில்லாம இதுகளுக்குள்ள இதுகளுக்குள்ள இன்வோல்வ்மெண்டாகி எங்கட தமிழ்த் தேசியத்துக்கும் அதிர புனிதத்தன்மைக்கும் மாசுண்டாகிற நிலைமையளும் வந்திருக்குது. ஆனபடியா இந்தக் கோயில் விவகாரங்கள அததுக்குரிய ஆக்களிட்ட விட்டு நீங்க எக்கேடு கெட்டுப் போனாலும் பறவாயில்ல ஆளவிட்டாக் காணும் எண்டு இருக்கவேணும். இல்லாட்டி இதவச்சுக் கொண்டு ஏதோ சமூகத்திர முக்கிய பிரதிநிதியள் தாங்கதான் எண்டு வெளிக்கிட்டுவிடுவினம். தெருத் தேங்காய வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறதில கூட ஆளாளுக்குப் போட்டி பாருங்கோ. நல்லது செய்யிறவங்கள விடாமக் குறுக்காலபோவார் தடுத்துக்கொண்டு நிக்கிறதால நம்மட ஊரில உள்ள அனாதையளெல்லோ பாதிக்கபபடுதுகள்.


- Subiththiran - 04-23-2006

நான் கடவுளை இல்லை என கூறவில்லை. நானும் பிறப்பால் இந்து மதத்தவன். இன்று புலத்துக்கு வந்து மதம்மாறியவனும் இல்லை. ஆனால் எமது மதத்தின் சில வழக்கங்களை தான் விமர்சிக்கின்றேன். கோயில் கட்டுவார்கள் அன்னதானம் அது இது என்று சோம்பேறிகளைவளர்த்து விடுகிறார்கள்(நிர்வாகம் என்று 10பேர் வேலை வெட்டி இல்லாமல் ). <b>தமிழ் நாட்டில் உந்த அன்னதானம் வளர்ந்து இன்று இலவசஅரிசி அரசியலில் வந்து நிற்கிறது. </b>எமது மக்கள் புலத்துக்கு வந்தும் உந்த நம்பிக்கைகளை கைவிடேல்ல.


- putthan - 04-23-2006

[quote="Subiththiran"]. ஆனால் எமது மதத்தின் சில வழக்கங்களை தான் விமர்சிக்கின்றேன். கோயில் கட்டுவார்கள் அன்னதானம் அது இது என்று சோம்பேறிகளைவளர்த்து விடுகிறார்கள்(நிர்வாகம் என்று 10பேர் வேலை வெட்டி இல்லாமல் ). <b>தமிழ் நாட்டில் உந்த அன்னதானம் வளர்ந்து இன்று இலவசஅரிசி அரசியலில் வந்து நிற்கிறது. </b>எமது மக்கள் புலத்துக்கு வந்தும் உந்த நம்பிக்கைகளை கைவிடேல்ல.[/quote


தமிழ் நாட்டில் கஷ்டபட்ட மக்கள் இதனால் நன்மை அடைகிறார்கள்.ஆனால் சில புலம் பெயர்நாடுகளிள் தமிழன் அன்னதானம் கொடுக்கிறான் அது ஏன் என்று புரியவில்லை.அன்னதானம் என்றால் அதன் அர்த்தம் புலம் பெயர் தமிழனுக்கு விளங்கவில்லையா?????


- Subiththiran - 04-23-2006

putthan Wrote:தமிழ் நாட்டில் கஷ்டபட்ட மக்கள் இதனால் நன்மை அடைகிறார்கள்.

கஷ்டப்பட்ட மக்களுக்கு நன்மைதான். ஆனால் அவர்களை முன்னேற்றுறதை விட்டுட்டு எப்பவும் கையேந்துபவர்களாக வைத்திருக்கத்தான் உது உதவும்.


- putthan - 04-23-2006

அது சரிதான் ,அவர்கள் கையேந்தாமல் இருக்க ஒரு புரட்சி வெடிக்க வேண்டும் அல்லது நல்ல தலைவர் வரவேண்டும்.


- Magaathma - 04-23-2006

Quote:ஆனால் சில புலம் பெயர்நாடுகளிள் தமிழன் அன்னதானம் கொடுக்கிறான் அது ஏன் என்று புரியவில்லை.அன்னதானம் என்றால் அதன் அர்த்தம் புலம் பெயர் தமிழனுக்கு விளங்கவில்லையா?????

Àº¢ ±ýÀÐ «¸¢Äò¾¢ø «¨ÉòТâÉÓõ À¡Ì À¡ÎþýÈ¢ À£Êì¸ô ÀðÊÕìÌõ ¦ÀÕõ À¢½¢Â¡Ìõ. ±øÄ¡§Á ´Õ º¡ñ Å¢üÚ측ò¾¡ý. ÁÉ¢¾ý. þ¨¾ «Êì¸Ê ÁÈóРŢθ¢È¡ý. ¸¼×û ÁÈôÀò¾¢ø¨Ä. «Å÷ [§¸¡]þøÄõ ¿¡Ê ÅÕÀÅ÷
±ÅáɡÖõ, ±í¸¡É¡Öõ ±ø§Ä¡¨ÃÔõ «È¢Â¡¨Á ±ýÛõ «¸ôÀ¢½¢¨ÂÔõ, Àº¢ ±ýÛõ ÒÈôÀ¢½¢¨ÂÔõ ¿£ì¸¢ ¿¢¨È× ¦ºöÅ¡÷. «íÌ ÒÄõ¦ÀÂ÷ó¾Å÷, ÒÄõ¦ÀÂá¾Å÷, À½ì¸¡Ãý, ²¨Æ, º¡¾¢, ºÁÂõ ±ýÚ §ÅÚ À¡¦¼øÄ¡õ À¡÷ôÀ¾ø¨Ä. ±õÁ¢Éò¾Å÷ ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¿¡Î¸Ç¢ø
Å£ðÎìÌ ÅÕõ ¯ÈÅ¢É÷¸¨Ç «ýÒ¼ý
¯ÀºÃ¢ôÀÐ ±øÄ¡õ ̨ÈóÐ ÅÕ¸¢ÈÐ.
Á¢¸×õ ¸Å¨ÄìÌâ ŢºÂõ.


- putthan - 04-23-2006

கடவுள் மறப்பதில்லை

மகாத்மா எழுதியது

புலம் பெயர் நாட்டில் உள்ளவன் வசதி படைத்தவன் பென்ஸ் கார்களில் கடவுளை தரிசிக்க வருபவர்கள் அவர்களுக்கு பசி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது அவர்கள் வீடு சென்று குளிர்சாதன பெட்டியை திறந்தால் கடவுள் கொடுத்த உணவு எல்லாம் அங்கு இருக்கும்,ஆனால் தாயகத்தில் இருக்கும் எவ்வளவோ மக்களுக்கு அடுத்த வேளை உணவே கேள்விக்குறியான விடயம்.


- Magaathma - 04-23-2006

Quote:பென்ஸ் கார்களில் கடவுளை தரிசிக்க வருபவர்கள் அவர்களுக்கு பசி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது

«Å÷¸Ùõ ¸¡¨Ã ¦ÅÇ¢§Â Å¢ðΠŢðÎ ¸¡Ä¡ø
¾¡§É ¯û§Ç §À¡¸¢È¡÷¸û. ⨺, ¾¢ÕŢơ
±øÄ¡õ ÓÊÔõ Ũà ÀÄ Á½¢§¿Ãõ ¿¢ýÚ ÌõÀ¢Î¸¢È¡÷¸û. Àº¢, ¾¡¸õ ±ýÀÐ
±ø§Ä¡ÕìÌõ ´§Ã Á¡¾¢Ã¢ ¾¡¨É¡.
«òмý «ýɾ¡É ¯½¨Å ¦¾ÂÅ£¸ ôú¡¾Á¡¸ò¾¡ý ±ø§Ä¡Õõ Á¾¢ì¸¢È¡÷¸û.


- mathuka - 04-23-2006

putthan Wrote:புலம் பெயர் நாட்டில் உள்ளவன் வசதி படைத்தவன் பென்ஸ் கார்களில் கடவுளை தரிசிக்க வருபவர்கள் அவர்களுக்கு பசி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது அவர்கள் வீடு சென்று குளிர்சாதன பெட்டியை திறந்தால் கடவுள் கொடுத்த உணவு எல்லாம் அங்கு இருக்கும்,ஆனால் தாயகத்தில் இருக்கும் எவ்வளவோ மக்களுக்கு அடுத்த வேளை உணவே கேள்விக்குறியான விடயம்.

அது தானே :oops: :oops: :oops:


- தூயவன் - 04-24-2006

இது என்ன சும்மா விதண்டாவாதம். அப்படிப் பார்த்தால் நீங்கள் உந்தக் கணனி இணைப்பை தூக்கி எறிஞ்சு போட்டு அதுக்கு செலவழிக்கின்ற பணத்தை கஸ்டப்படும் சனத்துக்கு கொடுக்கலாமே!! அல்லது அவுஸ்ரேலியாவில் உழைக்கின்ற பணத்தை அப்படியே சனத்துக்கு அனுப்பி வையுங்களேன்.


சும்மா இதுக்கெல்லாம் பிரச்சனை கிளப்பாதீர்கள். பக்தி என்பது வேறு. அங்கே அநீதி ஏதும் நடந்தால் சொல்லுங்கோ. அதை விட்டிட்டு நடக்கின்ற அநீதிக்கு வாழ்த்துப் பாடாதையுங்கோ!!


- mathuka - 04-24-2006

அது தானே தூயவன்(பக்கவாத்தியம்)


- karu - 04-24-2006

அரோகரா! அரோகரா!


- தூயவன் - 04-24-2006

நீங்கள் என்ன வாத்தியமோ அடியுங்கோ எமக்குப் பிரச்சனை இல்லை. :wink:

கள உறவு ஒன்று எனக்குச் சொன்ன விடயம் ஒன்று ஞாபகம் வருகின்றது. நான் அவரிடம் கேட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள யாழ்கள உறுப்பினர்கள் சந்தித்துக் கொள்ளலாமே என்று. அதற்கு அவர் சொன்னார். "நாங்கள் அதற்கு ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபண்ணி ஒரு ஹொட்டலில் நடத்தினால் உடனே எங்கள் ஆள் ஒருத்தர் பிரச்சனையைக் கிளப்புவார். இங்கே செலவழிக்கப்பட்ட பணத்தை போராட்ட நிதிக்காக கொடுத்திருக்கலாம் என்று விதண்டா வாதம் கதைக்க வெளிக்கிடுவார்.

ஆனால் அவர் தினமும் பகல் உணவையோ, அல்லது இரவு உணவையோ அப்படியான ஹொட்டலில் தான் செலவழிப்பார்.

இது தான் பிரச்சனை. ஒரு காளி கோவில் இடிக்கப்பட்டது எவ்வளவு பெரிய குற்றம். அது எவ்வழிபாட்டுத் தளமாக இருப்பினும். அதில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்காமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை விவாதிக்கினமாம். பெரியார் கொள்கை எடுபடாமல் போனதும் இப்படித் தான். மற்றவ்ரகளை கேலி பண்ணுவது. குத்திப் பேசுவது. என்று இருந்ததே தவிர மக்களுக்கு உறுப்படியான வழி காட்டியாக இருக்கவில்லை.

இதால தான் இன்னும் ஜாதி அடங்கவில்லை.