![]() |
|
மன்னாரில் படையினர் கிளைமோர் தாக்குதல் - இரு அப்பாவி இளைஞர்கள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மன்னாரில் படையினர் கிளைமோர் தாக்குதல் - இரு அப்பாவி இளைஞர்கள (/showthread.php?tid=112) |
மன்னாரில் படையினர் கிளைமோர் தாக்குதல் - இரு அப்பாவி இளைஞர்கள - Naasamaruppan - 04-22-2006 மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதிக்குள் ஊடுருவிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் இரு அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து மடு நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த உந்துருளியில் சென்ற இரு இளைஞர்களும் உயிரிழந்தனர். பெரியபண்டி விரிச்சான்ää மடுää மன்னாரைச் சேர்ந்த 25 அகவையுடைய யோகநாதன் சர்வேந்திரன்ää 20 அகவையுடைய தம்பையா யேசுராஜா (கறா) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கதி |