![]() |
|
சுதந்திரமாம் சுதந்திரம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுதந்திரமாம் சுதந்திரம்! (/showthread.php?tid=1041) |
சுதந்திரமாம் சுதந்திரம்! - வர்ணன் - 02-04-2006 <b>எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும் ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி- ஏன் ஒரு கவலை-உனக்கு? புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா! உன் கண்களில் ஊசி தைத்துபோனதை கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா? என்ன நீ? சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்- ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து- கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே - அது பொய்யா-? சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்- இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா! சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய் பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே- ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் கூடுகட்டி இருக்ககூடும்! பாம்பின் பட நிழலில் பகுத்தறிவுள்ளவன் தூங்கமாட்டான்! 58 என்ன- 580 ஆண்டுகள் ஆனாலும் என்ன- சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க- கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்- காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!</b> - Rasikai - 02-04-2006 உங்கள் கவி நன்றாக உள்ளது வர்ணன். மேலும் தொடர்க - RaMa - 02-05-2006 சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க- கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்- காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா! ************************************** கவி மிகவும் உணர்ச்சிபுர்வமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள். |