Yarl Forum
நித்தியா கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- lollu Thamilichee - 10-16-2005

இளைஞன் Wrote:பிரிவிற்கு தூது தேவையோ தேவையில்லையோ என்பது இரண்டாவது விடயம் - நித்தியா தன் கவிதையில் அந்திவானத்தை தூது அனுப்புகிறார் தானே - பிறகென்ன? நானாக விளக்கம் எதுவும் தேடவில்லையே!

துாது விடுறா உண்மை
பிரிவுக்கு துாது விடுறாவா??

உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்க முடியும் என்பது உண்மைதானே? தத்துவம் என்பதும் அதைத்தானே? - உங்கள் பார்வையில் தத்துவம் இல்லாமல் கூட இருக்கட்டும் - நித்தியாவும் தான் சொன்னது தத்துவம் என்று சொல்லவில்லைத்தானே.

இது தத்துவமாயே
இருக்கட்டும்
உங்கள் பார்வைக்கு..
அது உங்கள் பார்வை

இதை நான்
குமுறலாத்தான்
நான் நினைக்கிறேன்

மன்னிக்கவும்


நித்தியா கவிதைகள் - இளைஞன் - 10-16-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>காதல்...</span>

<img src='http://www.yarl.com/forum/files/kavithai1_355.jpg' border='0' alt='user posted image'>

தோற்றுப் போவேன்
என்பதால் 'தோழா' என்றேன்
எதிர்காலத்தை நாங்கள்
உருவாக்குவோம்..
நிகழ்காலத்தை நேசி 'காதலி'
என்றான்..
காதல் கொண்டேன்
காலம் கடந்தது..

அவசரமாய் ஆதிக்கமாய்
விசாரிக்கிறான்
'வருத்தம் எப்படி இருக்கு'
அன்பாய்
'நீ எப்படி இருக்கிறாய்'
என விசாரிக்காமல்..

ம்ம்
என்னை விடவும்
என் பிரிவைத்தானே
பிரியப்படுகிறான்
வஞ்சகன்

அன்றும்
காதலன் இருந்தான்
காதல் தோற்றது
இன்றும்
காதலன் இருந்தான்
காதல் தோற்கடிக்கப்பட்டது

[b]காதலுடன் நித்தியா</b>


- kuruvikal - 10-16-2005

பாவம் இந்த நித்தியா பேசுது...பறையது...ஆனா மறைஞ்சிருக்கு..ஏனாம்...ஒரு வேளை... கண்ணைக்கட்டி காட்டில விட புதுமை படைக்குதோ..இல்ல கை விலங்கிட்டிருக்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 10-16-2005

தூது , பிரியம், போல் காதல்......ஐயும் ஒலி பதிவா இணைச்சிருக்கலாமே இளைஞன். நன்றாக இருந்திருக்கும்.


- வெண்ணிலா - 10-17-2005

நித்தியாவின் அழகிய கவிதைகளை அடுக்கடுக்காக தரும் இளைஞனுக்கு நன்றிங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-17-2005

நல்ல கவிதை நன்றி இளைஞன்அண்ணா


Re: நித்தியா கவிதைகள் - இளைஞன் - 10-26-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>கற்பனை</span>

<img src='http://www.yarl.com/forum/files/karpanai_nithi_141.jpg' border='0' alt='user posted image'>

இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..

உயிரைப் பிழியும் உன் பார்வை
தேடல் கொண்டதில்
21 ஆண்டுகள் கன்னக்குழியில்
தொலைந்து போனது..

கிளிப்பேச்சு கேட்கும் காலையில்
அவன் விழிப்பேச்சு கண்டு
மூச்சுமுட்ட கட்டியணைத்து
இறந்தபோன உடலுக்கு அவன்
உதடுகளால் உயிர் தந்த போது..

தொலைந்து போகும் என் காதலை
எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..
"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்
மின்னலின் தலைக்கனம்
மெத்தைமேல் இளகிப்போனது..
கண்ணின் மணி 72கிலோ'வை
எடை போட்டபோது
மெல்லிடை நூலாகிப்போனது..

வஞ்சகன்...
சென்மம் முழுதும்
தொலைந்து போகிறவளுக்கு
இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்
திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்
தேய்ந்து போனதடா
அந்த 43 மணித்தியாலங்கள்..

தூக்கி எடைபார்த்த போது
கண்ணடித்த கறுப்புமுகம்
இன்னும் பாதத்தை
கோலம் போட வைக்குதடா..

விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்
தந்து விடை பெற்ற போது - காதல்
நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?
என்று ஏக்கத்தில் கை நடுங்க
நடை தானாகத் தளர்ந்தது..

கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்
என்று ஊர் தூற்றுகையில்
இதயம் வெடித்து சிதறியது
காதலுக்காய் மரணிக்க
மாற்றுயிர் இல்லையே என்று..

[b]எழுதியவர்: நித்தியா</b>

பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.


- கீதா - 10-26-2005

நித்தியாவின் கவிதை சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 10-26-2005

நித்தியாவின் வலைப்பதிவு:

http://suduvanam.blogspot.com


- narathar - 10-26-2005

இழஞ்ஞன் ஏன் நித்தியாவின் எல்லாக் கவிதைகளிலும் ஒரு ஏக்கம் கலந்த சோகம் இழையோடுகிறது.வாசகன் என்ற ரீதியில் இது அலுப்புத் தட்டுகிறது.ஏன் அவர் வேறு உணர்வுகளையும் விடயங்களையும் கவியாக்கலாமே.தனது கவி புனையும் ஆழுமயை வளர்ப்பதற்கு.ஏக்கம்,தவிப்பு,காதலன் இவற்றிற்கு அப்பாலும் பல உணர்வுகளும்,கருப் பொருட்களும் உண்டல்லவா.ஏன் படைப்பின் எல்லைகளைக் குறுக்குவான். நான் அவரின் எல்லாக் கவிதைகளையும் படிக்கவில்லை.வேறு விடயங்களும் எழுதி இருந்தால் போடுங்கள்.


- இளைஞன் - 10-26-2005

உண்மைதான் நாரதர். நானும் இதுபற்றி அவரிடம் தெரிவித்துள்ளேன். அவரைப் பொறுத்தவரை காதல் தந்த அனுபவங்களை கவிதைமூலம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறார் - கவிதையை தனக்கு ஆறுதலான மொழியாகக் கொள்கிறார். படைப்பின் எல்லையை விரிவாக்குமாறு அவரிடம் குறிப்பிட்டுள்ளேன் - காதலைத் தாண்டி மனித வாழ்வு பரந்தது - அதன் இரசனை உலகும், தேடல்களும் விரிந்தது என்று விளக்கியுள்ளேன். நிச்சயமாக வேறு கருப்பொட்களையும் கவிதையின் தளமாகக் கொள்வார் எதிர்காலத்தில் என நம்புகிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 10-26-2005

நித்தியா என்று தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்டபோது கேக்க நினைத்தேன். இந்த நித்தியாவா என்டு. நீங்களா சொல்லீட்டீங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சோகமான கவிதைகள் எழுதுவதில் ஒரு சுகம் உண்டாம். (எழுதிறவை சொன்னாங்க நமக்கு தெரியாது) :wink:


- kavithan - 10-27-2005

நித்தியாவின் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. ஒலிப்பதிவுகளும் மிக மிக நன்றாக இருக்கின்றன. கவிதைகளை எங்களுக்காக வழங்குகின்ற இளைஞனுக்கும் , கவிகளை எழுதி ஒலிவடிவில் வழங்கும் நித்தியாவுக்கும் வாழ்த்துக்கள் .மேலும் கவிதைகளை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன். நன்றி


- அனிதா - 10-27-2005

Quote:வஞ்சகன்...
சென்மம் முழுதும்
தொலைந்து போகிறவளுக்கு
இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்
திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்
தேய்ந்து போனதடா
அந்த 43 மணித்தியாலங்கள்..

நல்ல வரிகள்.. நல்லா எழுதுறீங்க நித்தி வாழ்த்துக்கள்.அப்படீயே ஒரு சந்தோசமான காதல் கவிதையையும் எழுதுங்க ..எதிர்பாக்கிறேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 10-27-2005

நித்தியாவின் கவிதைகள் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்...


- inthirajith - 10-28-2005

பிரிவின் வலி அனுபவித்து எழுதிய கவிதை நன்று


- அருவி - 11-02-2005

நித்தியாக்கா இது என்னவென்று அறியலாமா? :wink: Idea
<img src='http://photos1.blogger.com/blogger/4236/1731/1600/arimugapaduthu2.JPG' border='0' alt='user posted image'>


- poonai_kuddy - 11-02-2005

அருவியண்ணா என்ன சின்னப்பிள்ள மாதிரி கேள்வி கேக்குறீங்கள்...... இது ஒரு கவிதையாக்கும்.....இது கூடத் தொயாதா????????


Re: நித்தியா கவிதைகள் - Mathan - 11-02-2005

இளைஞன் Wrote:இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..

பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.

இது வைரமுத்துவின் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே கவிதையின் பாதிப்பா?

அவருடைய அந்த கவிதையின் ஒரு பகுதி இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது தானே?


- Nithya - 11-03-2005

<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->நித்தியாக்கா இது என்னவென்று அறியலாமா? :wink:  Idea <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அறியலாமே..
இது ஒரு கவிதை..
ம்மம்
அறிமுகம்ப் படுத்தப்பட
வேண்டி இருந்தது..

காதலனின் காதலி
அல்லவா?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :? :wink:

அறிமுகப்படுத்தினேன்

*தீர்த்தாள்
*உயிர்த்தாள்
* மானிடம் பல கர்ச்சித்த போதும்

என சின்ன சின்னதா பிழைகள் உண்டு..!!

கவிதையை இங்கு இணைத்தமைக்கு
நன்றி அருவி..!!