Yarl Forum
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- மின்னல் - 01-26-2006

நல்லவன் உங்களின் விடைகள் அனைத்தும் சரியாவையே, பாராட்டுக்கள்


- மேகநாதன் - 01-27-2006

[size=18]பதில் வராத 21வது கேள்வியும் சரியான பதிலும்

[b]21)"தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்" அக்டோபர் 10 இல் ( முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் நினைவு நாள்) எந்த ஆண்டு முதன் முதலாக எழுச்சி கண்டது?

1995 இல்


- மேகநாதன் - 01-27-2006

[size=18]முழுமையான சரியான பதில் கிடைக்கப்பெறாத 31வது கேள்வியும் சரியான பதிலும் வருமாறு...

<b>31) தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் முதன் முதலாக நேர்காணல் வழங்கியது எப்போது?அவ் வார இதழின் பெயர் என்ன? </b>
(உதவிக் குறிப்பு- 1985 இல் வழங்கப்பட்ட இது தமிழக வார இதழ் ஆகும்)
[b]1985 அக்டோபர் 16 ஆந் திகதி வெளியாகிய "தேவி" என்ற தமிழக வார இதழ்


- மேகநாதன் - 01-27-2006

பின்வரும் கேள்விக்கு குறித்த திட்டத்தின்
ஆங்கில எழுத்து இதுவரை தரப்படவில்லை...
ஆனால் அது முக்கியம்.
ஏனெனில்,இத் திட்டத்தின் கீழ்
(பல்வேறு பிரிவுகள்..ஆங்கில எழ்த்துக்கள்)
பல்வேறு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன....

<b>19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது?
( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்)

மகாவலி "L" வலயத் திட்டம்</b>


- Thala - 01-27-2006

<b>36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?</b>

1996 ம் வருடம் கடைசிப்பகுதியில். (முல்லைத்தீவுத் தாக்குதலுக்கு முன்னர்.) திருமலைக்கடலில் மட்டு அம்பாறைத் தளபதியைப் பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பிற்காகச் செண்ற கப்ரன் நகுலன், கப்ரன் கண்ணாளனோடு டோறாரகப் படகைத்தகர்த்து வீரச்சாவடைந்தார்.


- nallavan - 01-27-2006

தலா,
உங்கள் விடை சரியன்று. இன்னும் முன்னதாகவே நடந்தது.


- அருவி - 01-27-2006

<b>36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?</b>
1995 மார்ச் 9 இல் திருகோணமலை புல்மோட்டைக்கடலில் வைத்து டோராப் படகினைத்தாக்கி வீரச்சாவடைந்தார்.
<img src='http://img101.imageshack.us/img101/2624/photo474hx.jpg' border='0' alt='user posted image'>


- மேகநாதன் - 01-31-2006

[size=18]<b>35) 01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின்போது கிளிநொச்சிப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தவென வாகனத்திற் கரும்புலிகளாகச் சென்று வீரச்சாவடைந்த மாவீரர்கள் யார்?

37)தமிழகத்து முதுபெரும் பாடகர் டி.எம். செளந்தர ராஜன் அவர்கள் பாடிய தாயகப் பாடல் எது?</b>

ஆகிய <b>நல்லவனின் இரு கேள்விகளுக்கான பதில்கள் </b>இன்னும் வராது இருக்கின்றன..
இவை வந்தால்
அல்லது நல்லவன் சரியான பதில்களைச் சரிவர அறியத்தந்தால்
புதுக் கேள்விகளுக்குப் பயணிக்கலாம்..


- மின்னல் - 01-31-2006

35 கேள்விக்குரிய விடை

<b>கரும்புலி கப்டன் நெடியோன்</b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>குலேந்திரம் ஞானசேகர்</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>தெல்லிப்பளை - யாழ்ப்பாணம்</span>

<b>கரும்புலி கப்டன் அருண்</b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>அம்பிகாவதி அருட்சோதி</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>நாரந்தனை - யாழ்ப்பாணம்</span>


- மேகநாதன் - 01-31-2006

நல்லவன் பதில்களை உறுதிப்படுத்துங்கோவன்.நன்றி


- மேகநாதன் - 02-07-2006

நல்லவன் சரியான பதில்களை உறுதிப்படுத்துவது
மாதிரித் தெரியவில்லை...
அவரது 37வது கேள்விக்கான பதில் எஞ்சி நிற்கிறது..

<span style='color:green'>சரி மேலும் சில கேள்விகளுக்குப் போவோம்....

[b]38)"மொறவேவ" எனப் பெயர் மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட திருமலையின் பாரம்பரியத் தமிழ் பிரதேசம் எது

[b]39) சீமெந்து உற்பத்திக்குப் (5%) பயன்படுத்தக்கூடியதான களிமண் தமிழீழப் பிரதேசத்தில் எங்கு
(இது வட தமிழீழப் பிரதேசம்)

[b]40)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது
(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)</span>


- sri - 02-07-2006

(38 ) மணலாறு

(39) முருங்கன்

(40) 13.02.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் மாவீரர் ஆனார்கள். "விடிவிற்கு முந்திய மரணங்கள்" என்னும் நூலில் இத்தாக்குதல் சம்பவத்தை விபரித்து பங்குபற்றியவர் எழுதியுள்ளார். (எழுதியவர் பாரீசில் தற்போது வசிக்கின்றார்)


- மேகநாதன் - 02-07-2006

[size=18]வாழ்த்துக்கள் சிறி.
39 & 40 வது கேள்விகளுக்கான பதில்கள் சரி....

38வதுக்கான சரியான பதில் அதுவல்ல...
என்றாலும் கிட்டிய முயற்சி


- sri - 02-07-2006

(38 ) முதலிக்குளம்
முதலிக்குளம் - மொறவேவா ஆனதுபோல்
பட்டிப்பளை - கல்லோயா
மகாவிளாங்குளம் - மகாதிவுல்வேவா
குமரன்கடவை - கோமரங்கடவ
புடவைக்கட்டு - சாகரபுர என பல தமிழ் பெயர்கள் சிங்களப்பெயர்களாக மாற்றப்பட்டன.


- மேகநாதன் - 02-08-2006

சரியான பதில்...
வாழ்த்துக்கள் சிறி...

மேலதிகத் தகவல்களுக்கும் நன்றிகள்...


- மேகநாதன் - 02-08-2006

சிறி,
ஏனையோரும் முயற்சிக்க
சிறிதேனும் விடுங்கோ.....
2,3 நாளாகியும் சரியான பதில் வராவிட்டால்
நீங்கள் முயற்சியுங்கோவன்...
நன்றி....


- மேகநாதன் - 02-08-2006

[size=18]மேலும் சில கேள்விகள்......

[b]41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது?

42) திருமலையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கோட்டையின் பெயர் என்ன?

43) தென் தமிழீழத்தின் முதலாவது தரைக் கரும்புலித் தாக்குதல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது.தற்கொடையாற்றிய கரும்புலி யார்


- மேகநாதன் - 02-09-2006

உதவிக்குறிப்புகள்...

41) இணையத்திலேயே பதில் இருக்குமே...
(திகதி,மாதம் உடன் பதில் தருக)

42) ஒரு ஆங்கிலேய ஆட்சியாளரின் பெயர்...
மிக சிறியது..பதில் இலகுவானதே...

43) இம் முகாம் மட்டு-கல்முனை சாலையில் ஆரையம்பதிப் பிரதேசத்தை அண்டி இருந்தது..
தாக்குதல் நடந்த -காலம் மிக முக்கியமானது...
தமிழர் தேசத்தின் இன்னொரு பிரதேசத்தில்
சிங்கள ஆக்கிரமிப்பு "ஊன்றிய" காலம்...


- sri - 02-09-2006

மேகநாதன் Wrote:சிறி,
ஏனையோரும் முயற்சிக்க
சிறிதேனும் விடுங்கோ.....
2,3 நாளாகியும் சரியான பதில் வராவிட்டால்
நீங்கள் முயற்சியுங்கோவன்...
நன்றி....

நன்றி, அப்படியே செய்கிறேன்.


- Thala - 02-09-2006

[b]41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது?

1 திகதி பங்குனி மாதம் 1984 ஆண்டு 8) 8) 8)
http://www.viduthalaipulikal.com/index.html?kural=1