Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)



- tamilini - 09-20-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/5/44805_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
அழகான மலரே கோவிக்காதே
அன்பான என் காதலியை மலர் என்று
அடிக்கடி நான் பொய் சொல்கிறேன்...
அது ஓவர் என்று எனக்கு தெரியும்...
அன்பான அவளுக்காக
அடிக்கடி பொய் சொல்வேன் கண்டுக்காதே மலரே..
அவள் இன்றி யார் உண்டு எனக்கு....


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/38/41238_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

என் காதலனாய் ஆகிவிட்டாய்.. உன்னை
என் மனச்சிறையில் வைத்து
பு}ட்ட மாட்டேன்.. காரணம்
நாலு மனம் புகுந்து
நல் மனம் என்று மீண்டும்
என் மனம் வந்து நீ சேர வேண்டும்...
அந்த மனம் தான் எனக்கு வேண்டும்......!

இதயச் சிறையில் இட்டு
பெருங் கதவுகள் மூடி விட்டு
சின்னச் சாளரம் திறந்து வைத்து
சுதந்திரம் செப்பும் சுந்தரியே
உன் சிறை இருப்பே
எனக்கு சுதந்திரம்
அதுதான் கடக்கவில்லை
நீ திறந்த சாளரம்...!


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/5/44805_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
அழகான மலரே கோவிக்காதே
அன்பான என் காதலியை மலர் என்று
அடிக்கடி நான் பொய் சொல்கிறேன்...
அது ஓவர் என்று எனக்கு தெரியும்...
அன்பான அவளுக்காக
அடிக்கடி பொய் சொல்வேன் கண்டுக்காதே மலரே..
அவள் இன்றி யார் உண்டு எனக்கு....

என் பெயரால்
ஒன்றென்ன பல பொய் சொல்லு
அவள் மகிழ்வாள் என்றால்..!
என்றும் மெய்யாய் இரு
அவள் உன்னவளாகிவிட்டால்
இப்படிக்கு மலர்...!


- tamilini - 09-20-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/21/45221_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

மலரே உனக்கொரு செய்தி...
மங்கையவளை கண்டபின்பே
மலர் உன் அழகு எனக்கு தெரிந்தது..
என்னவளின் மென்மை உணர்ந்த பின்பே
எனக்கு தெரிந்தது உன் மெல்லிய இதழின்
இதமான மென்மை எப்படி என்று...
உனக்கும் அவளுக்கும்
வித்தியாசம் ஒன்று கண்டேன்..
அவள் நடமாடி பேசும் மலர்
நீ மௌனமாய் வாழும் அவளின் தோழி ..........!


- tamilini - 09-20-2004

Quote:இதயச் சிறையில் இட்டு
பெருங் கதவுகள் மூடி விட்டு
சின்னச் சாளரம் திறந்து வைத்து
சுதந்திரம் செப்பும் சுந்தரியே
உன் சிறை இருப்பே
எனக்கு சுதந்திரம்
அதுதான் கடக்கவில்லை
நீ திறந்த சாளரம்...!
நாம் சாளரம் என்டாலும் திறந்து விடுறம்... உங்க ஆக்கல் அதுவும் விடினமோ.......?????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 09-20-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/57/45757_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என்னவனுக்கும் கள்வனுக்கும்.
என்ன வித்தியாசம்...
கள்வன் இரவனில் பதுங்கி வருவான்...
என்னவன் இரவினில் கனவினில் வருவான்...!


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:
Quote:இதயச் சிறையில் இட்டு
பெருங் கதவுகள் மூடி விட்டு
சின்னச் சாளரம் திறந்து வைத்து
சுதந்திரம் செப்பும் சுந்தரியே
உன் சிறை இருப்பே
எனக்கு சுதந்திரம்
அதுதான் கடக்கவில்லை
நீ திறந்த சாளரம்...!
நாம் சாளரம் என்டாலும் திறந்து விடுறம்... உங்க ஆக்கல் அதுவும் விடினமோ.......?????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஐஸ்...
குளிரே தாங்க முடியல்ல
அதுக்க சாளரமும் திறப்பதா...??!
அதுதான் திறக்கவில்லைப் போலும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-20-2004

ம் அப்படியா.. நாங்க எங்க திரும்பி வரமாட்டிங்க என்டு திறக்கலையோ என்டு தப்பாக நினைச்சிட்டம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/21/45221_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

மலரே உனக்கொரு செய்தி...
மங்கையவளை கண்டபின்பே
மலர் உன் அழகு எனக்கு தெரிந்தது..
என்னவளின் மென்மை உணர்ந்த பின்பே
எனக்கு தெரிந்தது உன் மெல்லிய இதழின்
இதமான மென்மை எப்படி என்று...
உனக்கும் அவளுக்கும்
வித்தியாசம் ஒன்று கண்டேன்..
அவள் நடமாடி பேசும் மலர்
நீ மௌனமாய் வாழும் அவளின் தோழி ..........!

என்னைக் கிள்ளி
கூந்தலில் சிக்க வைத்து
தன் குறை மறைத்து
பெருமை சேர்க்கும் மங்கையவள்
என் தோழியல்ல...!
பாவம் ஆடவன்...
அவன் தன்னாற்றல் கொண்டு
மலரின் மென்மை கூட
உணர்வான்
ஆனால்....
மலரையே கிள்ளும் இவளிடம்
மயங்குகிறானே பேதை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-20-2004

என்னவளில் எந்தக்குறையும் இல்லை....
உன்னை கிள்ளி வைத்து அழகு பெறும்
நிலையில் அவளும் இல்லை...
அவள் உன்னை சு}டுவதால்...
உனக்கு வேணும் என்றால் அழகு கு}டலாம்....
ஆனால் அவள் உன்னை
நண்பியாய் நினைப்பதால்
அதனை தவிர்க்கிறாள்....
எப்படி இருந்தாலும் அவளில் இருந்து
நீ கொஞ்சம் குறைவு எனக்கு...!


- tamilini - 09-20-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/3/43203_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
அன்பே நீ வாழ
அரண்மனை அமைத்து..
அங்கே நான் உனக்கு காவலனாய்..
சொன்னதை செய்திட ஒரு
சேவகனாய்...
நாளை நான் உனக்கு
கணவனாய் வருவேன்
என்ற நம்பிக்கையில்
இப்போ பு}வே நீ புன்முறுவல்
செய்தால் போதுமடி...
என் ஜீவன் வாழுமடி....!


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:என்னவளில் எந்தக்குறையும் இல்லை....
உன்னை கிள்ளி வைத்து அழகு பெறும்
நிலையில் அவளும் இல்லை...
அவள் உன்னை சு}டுவதால்...
உனக்கு வேணும் என்றால் அழகு கு}டலாம்....
ஆனால் அவள் உன்னை
நண்பியாய் நினைப்பதால்
அதனை தவிர்க்கிறாள்....
எப்படி இருந்தாலும் அவளில் இருந்து
நீ கொஞ்சம் குறைவு எனக்கு...!

கண்ணா மீண்டும் நீயே
உன்னவளுக்காய் உருகி வழிகிறாய்
அவள் பற்றி நானறிவேன்
கள்ளி...
தான் மறைந்திருந்து கொண்டு
மாயமானுக்கு உன்னை வலைவீச வைத்து
மாட்டிவிடும் கூட்டம் அவள்...!
கற்றுத் தேறு
கன்னி அவள் உண்மை உணர்வாய்
மலரிலும் மேல் அவள் எனும்
வார்த்தை வாபஸ் வாங்குவாய்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 09-20-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/3/43203_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
அன்பே நீ வாழ
அரண்மனை அமைத்து..
அங்கே நான் உனக்கு காவலனாய்..
சொன்னதை செய்திட ஒரு
சேவகனாய்...
நாளை நான் உனக்கு
கணவனாய் வருவேன்
என்ற நம்பிக்கையில்
இப்போ பு}வே நீ புன்முறுவல்
செய்தால் போதுமடி...
என் ஜீவன் வாழுமடி....!

காதலா நீ எனக்கு
கோட்டையும் வைக்க வேண்டாம்
காவலும் இருக்க வேண்டாம்
சேவகமும் செய்ய வேண்டாம்
தாலி தரும் கணவன் எனும்
போலி ஆசையும் வைக்க வேண்டாம்
நான் நானாயும் நீ நீயாயும்
நாமே நமக்காக
வேசமின்றி பொய்களின்றி
காலமெல்லாம் அளவில்லா அன்பு
கணமும் பகிர்ந்து
வாழும் வாழ்வே வேண்டும்...!
அதற்காய் கேள் பரிசு
என் உயிரென்றாலும் தருகிறேன்..!


- வெண்ணிலா - 09-20-2004

அக்காவும் அண்ணாவும் ஏட்டிக்குப் போட்டி போல நன்றாக துளிகள் எழுதுறீங்களே. தொடருங்கள். வாழ்த்துக்கள் அண்ணாவுக்கும் அக்காவுக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 09-20-2004

நன்றாய் சொன்னாய் நாயகி..
என் மனம் என்னும் கோட்டையில்...
மங்கை நீ மகாராணியல்லாவா...??
பிறகேன் உனக்கு கோட்டை...

பெண்ணே நீ ஒன்றை புரிந்து கொள்..
தாலி என்பது இந்த சமுகத்திற்காக
நான் போட வேண்டிய வேலியம்மா....??
அன்பாலே என்னையாழும் நீ
நாளை பிறரின் இழி சொல்லுக்கு ஆழானால்..
அதை தாங்கும் சக்தி என்கு இல்லை கண்மணியே...!

சுற்றத்துடன் கு}டியது தானே எம் வாழ்க்கை..
நம் சம்பிரதாயங்களை மதிக்க
வேண்டியது நம் கடமை மங்கையே..
மற்றப்படி பரிசாக உன் உயிரையும்
தர தயங்காய் என்பதை
நான் அறியேனா என்ன...???


- tamilini - 09-20-2004

என்னவள் பற்றி உமக்கென்ன தெரியும்...
ஒன்றல்ல இரண்டல்ல ஏழு
ஜென்மப்பந்தம் நமக்குள்..
என்னவளின் கால் துசி கு}ட
வராதைய்யா உமது மலர்..
மாய மhனைக்கேட்டாலும்
மாய மானாய் நின்றாலும்..
எனக்காக வாழ்பவள் அவள் காணும்..

வார்த்தையால் ஜாலமிடுவீர்..
காதல் பற்றி ஏதும் அறிய மாட்டீர்...
உணர்வுகளில் கலந்திட்ட உறவுக்காய்..
உருகுவதும் ஓர் சுகமே...!
அனுபவியாதார் அறியார்
அந்த அற்புத ரகசியத்தை...
பேச்சுக்களால் மட்டும்
வாழ்க்கை நடாத்தும்..
பேதையருடன் நமக்கென்ன பேச்சு..
என்றும் என்னவள்
எனக்கு இனியவள் தான்..
இதில் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை...
முடிவில் முடிவான முடிவிது காணும்...!


- kuruvikal - 09-20-2004

சமுதாய வேலியாய்
முள் வரினும்
உன் அன்புப் பரிசானால்
ஏற்பேன் - ஆனால்
சமுதாயத்தின் பெயர் கொண்டு
வேலி போட்டு
என் சுதந்திரம் பறிக்க எண்ணின்
உண்மையில் உன் இதயத்தில்
காதல் இல்லை என்றாகும்
அதுவே என்னை
பத்திரகாளியும் ஆக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 09-20-2004

காதலா
மங்கையுடன் நீ
காதலெனும் மது அருந்தி
மயங்கிக் கிடக்கிறாய்...!
நான் மலர்
மங்கைக்கோ மதுவுக்கோ
மயங்கும் அர்ப்பம் அல்ல
மயக்கம் தெளிய
நீயே உணர்வாய்
அமுதென்றாலும் அளவோடு தான்
அது காதல் என்றாலும் ஆகும் என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-20-2004

கண்ணாய் உன்னை என்னுறேன்..
என் கண்மணியே...
வேலி போடடு அடைத்து வைக்க
நீ ஒன்றும் மாடில்லையடி
என் மனசை ஆளுகின்ற மகாராணி
நீ அல்லவா...??
சுதந்திரமாய் நீ எங்கும்.
சுற்றி வர காவலனாய் நான்...
என்றும் உன்னுடன்...
காவல் கு}ட உன்னை சிறைப்படுத்தவல்ல...
உன் நிழலாக நான் இருக்க வேண்டும்
என்பதானால் தான்...
உன் அனுமதியோடு...


- tamilini - 09-20-2004

மங்கையுடன் காதல் கொண்டால்
மயக்கமென்று கு}றுகிறாயே...
மலரே.. மலர்கள் உணர்ந்து கொள்ள
இது மலரின்; காதல் அல்ல...
காதலை மதுவாயும்..
மங்கையை மயக்கமாவும்..
உணர்ந்து கொண்ட மலரே ஒன்று கேள்..
மங்கை இன்றி இந்த மண்ணில்
எதுவும் இல்லை...
என்னை பெற்ற தாய் முதல்..
உன்னை தாங்கும் நிலம் வரை
யாவும் மங்கை தான்.....

காதல் என்பது...
அன்பை வளர்க்கவும்..
உறவை உரைக்கவும்
வந்த உன்னத உணர்வு...
காதலின்றி மனிதனில்லை..
அகிலம் அசைவது
அன்பு என்ற ஒன்றின் ஈர்ப்பினாலே
அந்த அன்பு தான் காதல்...
கற்றுக்கொள் மலரே
அதனை கற்றுக்கொள்....
வார்த்தையால் வர்ணிக்க முடியாது..
உணர்வால் மட்டும் புரியக்கு}டிய
உண்மையான அன்பு காதல் என்றும் வாழும்..
அங்கே மயக்கமும் இல்லை
தெளிவும் இல்லை புரிந்து கொள்....!