![]() |
|
இந்து மதமும் ஆண் பெண் உறவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: இந்து மதமும் ஆண் பெண் உறவும் (/showthread.php?tid=4141) |
- adithadi - 06-10-2005 நிலவன்: தமிழர்களின் மதம் சைவ சமயம்மே. பார்ப்பணர்களின் தம் சுயநலத்துக்காக இந்து சமயத்தில் பல தில்லுமுல்லுகளை இனைத்து விட்டனர். கிரிபன்ஸ் இவர்களின் தில்லுமுல்லுகளைதான் இங்கு எழுதியிருந்தார். எனக்கு மனிதர்கள் உருவாக்கிய மதத்தின்மேல் நம்பிக்கையில்லை, இருப்பினும் தமிழர்களின் மதம்யாகிய சைவ சமையதின் மேல் மதிப்பும், மரியாதையும் உள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்துவற்காகவே மதங்கள் தோன்றின, ஆனால் இன்று இவ் விஞ்ஞான உலகில் மதங்களின் மேல்லுள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. நாம் அறிந்ததை விஞ்ஞானம் என்கிறோம், அறியாததை கடவுளின் செயல் என்று சொல்கிறோம். - வியாசன் - 06-10-2005 அடிதடி முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். கிருபனுக்கு வக்காலத்து வாங்கிறதை விட்டு விட்டு நியாயத்தை பேசுங்கள். ஒரு தாய் மேல் தவறுகள் இருந்தால் அதை வெளிச்சம் போட்டு காட்டுவீர்களா? தாயின் தவறுகளை சொல்லித்திருத்த வேண்டும். அதை விடுத்து எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படாத வக்கிரமான உறவுகள் தகப்பன் மகள் சகோதரர்கள் என்று கதையளந்திருக்கின்றார். அதற்கு நீங்கள் பிற்பாட்டு பாடுகின்றீர்கள். வாலி எப்படி எப்படி சமைஞ்சது எப்படி என்ற பாட்டு எழுதியபோது யாரோ கேட்டார்கள் வாலி தன்னுடைய மகளை இப்படி கேட்பாரா என்று இந்த கிருபன் தன் தாய் சகோதரர்களுடன் இதை விவாதிப்பாரா? அல்லது நீங்கள் உங்கள் சகோதரியை யாழ் களத்தில் இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற சிறந்த கட்டுரை வருகிறது அதை படி தங்கையே என்று சொல்லமுடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடியுமென்றால் தாராளமாக இந்த கட்டுரை வரவேற்றுக்கொள்ளுங்கள் . :roll: :roll: :roll: - stalin - 06-10-2005 எந்த மதமும் தனது கோட்பாடுகளூடாகவே மக்களை சிந்திக்க வைக்க முயலுகிறது எந்தக்காலமும் மனிதனை சுதந்திர மாக சிந்திக்கவிடுவதில்லை . இந்த மதங்கள் எப்பொழுதும் அதிகாரவர்க்கத்துக்கும் அடக்குமுறைசெய்பவர்க்கும் சாதகமாகவே இருந்திருக்கின்றன இந்த மதங்களின் ஸ்தாபனங்கள் பெரும் நிதி வசதியுடையதாய் இருந்தும் ஏழைகளுக்கு பெரிதாக செய்தது ஓன்றுமில்லை இந்த மதங்கள் புத்தி சொல்லும் போர்வையில் மக்கள் மனதில் பயங்களேயே உருவாக்கி வந்தன . ஆன்மிக தேடலை மதத்தை மீறீ தேடலாம்-------J.கிருஸ்ணமூர்த்தி மதத்தை மீறி பலகருத்துகளை குறியுள்ளார்-----------------ஸ்டாலின் WWW.KFA.ORG - kirubans - 06-11-2005 adithadi Wrote:மூடர்களின் மகுடம்தான் மதம். கிரிபன்ஸ் பார்ப்பணர்களின் வேதத்தை பற்றியே அவரது கருத்து அமைந்திருந்து. அற்புதம்மாகிய எழுதிய கிரிபன்ஸ்க்கு எனது பாரட்டுக்கள். இவ்வளவு பெரிய கட்டுரையை நான் இணைத்தது அறியாதவற்றை மற்றவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான். சரி. புலத்தில் இருக்கும் பலர் எவ்வாறு இந்து சமயத்தையோ, சைவ சமயத்தையோ தமது குழந்தைகளுக்கு விளக்குகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள். மதத்தில் பல நல்லவிடயங்கள் உள்ளன என்று சொல்லினால் மட்டும் போதாது. இருக்கும் கடவுள்களின் வரலாற்றையும் சொல்லி வைக்கவேண்டும். ஏன் கடவுளருக்கு நான்கு கைகள், யானைமுகம் உள்ளது என்று ஒரு குழந்தை கேட்டால் எவ்வாறு பதில் சொல்லுவீர்கள். கடவுள் அப்படித்தான் தோன்றினார் என்று சொல்லி நழுவினால் குழந்தை இந்து மத்தைப் பின்பற்றாது. - kirubans - 06-11-2005 viyasan Wrote:அடிதடி முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். கிருபனுக்கு வக்காலத்து வாங்கிறதை விட்டு விட்டு நியாயத்தை பேசுங்கள். ஒரு தாய் மேல் தவறுகள் இருந்தால் அதை வெளிச்சம் போட்டு காட்டுவீர்களா? தாயின் தவறுகளை சொல்லித்திருத்த வேண்டும். அதை விடுத்து எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படாத வக்கிரமான உறவுகள் தகப்பன் மகள் சகோதரர்கள் என்று கதையளந்திருக்கின்றார். அதற்கு நீங்கள் பிற்பாட்டு பாடுகின்றீர்கள். எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படாத வக்கிரமான விடயங்களைத்தான் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்கள். கதையளந்திருந்தால், இல்லை என்பதற்கு ஆதரங்களை வைக்க வேண்டியதுதானே. அழுகல்களை அமுக்கி வெளித்தோற்றத்தில் நல்லவர் போன்று காட்சிதரவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயமல்ல. இது நாங்களே எங்களை ஏமாற்றுவத்ற்குச் சமன். - வியாசன் - 06-11-2005 அப்பு நீர் சமஸ்கிருதமும் கற்றுத்தான் மதத்தை விற்கிறீரா அப்ப விற்கலாம் - வியாசன் - 06-11-2005 கற்றுக்கட்டி கிருபன் இந்தமதத்தில் எங்காவது நீர் எழுதியதுபோல சிவன செய்தார் விஸ்ணு செய்தார் என்று இருக்கின்றது என்று இருந்தால் நீர் காட்டும் நீர் கருத்தை வைத்தவர் நீர்தான் நிரூபிக்கவேண்டும். <b>*******</b> [b]****** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - kirubans - 06-11-2005 viyasan Wrote:கற்றுக்கட்டி கிருபன் இந்தமதத்தில் எங்காவது நீர் எழுதியதுபோல சிவன செய்தார் விஸ்ணு செய்தார் என்று இருக்கின்றது என்று இருந்தால் நீர் காட்டும் நீர் கருத்தை வைத்தவர் நீர்தான் நிரூபிக்கவேண்டும். சரியான ஆண்மகனாக இருந்தால் நிரூபிக்கவேண்டும். நான் கற்றுக்குட்டியாக இருப்பதை ஒத்துக்கொள்ளுகின்றேன், அதற்காக நீங்கள் அறிவாளி என்று அர்த்தமல்ல. கருத்துக்களை முழுமையாக வாசித்து அவை என்ன சொல்ல வருகின்றது என்ற பக்குவம் இல்லை, கோபம்தான் உங்களிடம் இருக்கின்றது. வீணாக உங்கள் இரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தவேண்டாம். இன்னமும் நீங்கள் எழுதியவற்றை வாசிக்கவில்லைப் போலுள்ளது, சமஸ்கிருத சுலோகங்கள் உள்ளது பார்க்கவில்லையா? <b>*******</b> [b]******* தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வியாசன் - 06-11-2005 Quote:பலகாலமாக கருத்து எதுவும் எழுதவில்லை. ஆரோக்கியமற்ற விவாதங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவதானாலும், அரட்டைக் களமாகப் போவதனாலும் சலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியானால் கிருபன் இந்தமதமும் ஆண்பெண் உறவும் என்றதில் எழுதப்பட்ட கருத்துக்கள் உங்கள் சொந்தக்கருத்து என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? - kirubans - 06-11-2005 kirubans Wrote:இணையத்தில் படித்த நீண்ட கட்டுரை ஒன்றைப் பகுதி பகுதியாக கிழே தருகின்றேன். இந்து மதத்தில் உள்ள வக்கரித்த உறவுகளைப் பற்றி அறிய இது உதவும். kirubans Wrote:இது இணையத்தில் காணப்படும் ஒரு கட்டுரையின் பகுதிகளே. தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ள உதவியது. இதில் வரும் கருத்துக்கள் ஆபாசம் என்று மட்டுறத்தினர்கள் கருதினால் தயவு செய்து தெரிவியுங்கள். பக்கம் ஒன்றில் போய்ப் பாருங்கள். இடையில் எங்கோ அரைகுறையாகப் படித்துவிட்டு எனக்கு வசை பாடவேண்டாம். வசைபாடுவதற்கு யாழ் களத்தில் அனுமதி இல்லாததால் நான் திருப்பிப் பாட விரும்பவில்லை. 8) - Mathan - 06-11-2005 <span style='font-size:20pt;line-height:100%'>இந்த தலைப்பு தொடர்ந்து கள உறுப்பினர்களுக்கிடையேயான தனிப்பட்ட மோதலாக தொடர்வது வருத்தமளிக்கின்றது. அதனை நிறுத்தி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட வேறு விடயங்கள் குறித்து பேசலாமே :!: </span>
- kurukaalapoovan - 06-11-2005 கிருபன் நன்றி உங்கள் முயற்சிக்கு இன்றுதான் வாசித்து முடித்தோன். எமது சமூகம் பல மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். மதங்கள் எல்லாமே நீதி நிர்வாகம் காவல்துறை மனிதஉரிமை போன்ற கட்டமைப்புகள் இல்லாத காலத்தில் ஒரு ஒழுங்கைபேணுவதற்கு உதவியது. மதங்கள் எல்லாமே ஒரு நீதியான நியாயமான வாழ்கை முறையை போதிப்பதைத்தான் கருவாக கொண்டிருக்கிறது என நினைப்பவன் நான். இன்று நல்லநோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நீதி நிர்வாக கட்டமைப்புகள் எவ்வாறு ஆளும்வர்கத்தினால் சொந்த நலன்களிற்கு பாவிக்கப்படுகிறதே அதே கதி தான் அன்றும் இருந்திருக்கும். ஜநா மனித உரிமைக்குளுக்கள் வேள் ரிறேட் ஒர்கனைசேசன்; எவ்வாறு வல்லரசுகளின் அரசியல் சதுரங்கங்களில் சிக்கித்தவிக்கின்றன என்பதை சமகாலத்தில் காண்டுகொள்ளலாம். சுனாமி அனர்த்த நிவாரணம் உதவி என்று எத்தனை போர்கப்பல்களும் விமானங்களும் ஒவ்வெரு அரசுகளின் கொளவர பறைசாற்றலாக வந்தன. இந்த சூத்திரங்கள் நாடகங்களை 21ஆம் நுற்றாண்டில் பகுப்பாய்வு செய்து தரப்படுத்தி சமுதாயத்திற்கு விழங்கவை ப்பதோ அல்லது எதிர்கால சமுதாயத்திற்காக ஆவணப்படுத்துவதோ இலகுவானதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்நிலமையை யோசித்துப்பாருங்கள். இன்று இந்து மதம் என்று எமது சமுதாயத்தினுள் ஆளவேருன்றியுள்ளது மேலாண்மைவாதிகளால் அடக்கியாள தந்திரமாக திருபுபடுத்தப்பட்ட ஒருவடிவம். அன்று அடக்கப்பட்ட எமது இனம் ஏற்றுகொண்டுவிட்டது (எதிர்ப்புகள் இருந்திருக்கும் முறையடிக்கப்பட்டிருப்பார்கள் சதிகளால்) அவை சந்ததி சந்ததியாக பின்பற்றப்பட்டு எம்முள் வேருண்றியதால் இன்று அவை எமது கலாச்சாரமாக மாறிவிட்டது. அந்தவொரு காரணத்திற்காக எமது கலாச்சாரத்தின் சில நடமுறை பழக்கவளக்கங்கள் இன்றய அல்லது இனிவரும் தலைமுறையின் விமர்சனத்திற்கோ அல்லது பகுப்பாய்விற்கோ அப்பாற்பட்டது அவ்வாறு செய்யின் அதை கலாச்சார சீரழிவு என கூறமுனைவது கவலைக்குரியதொன்று. - poonai_kuddy - 06-12-2005 வியாசனண்ணா எனக்கொரு சந்தேகம் :roll: உங்களுக்கு இந்து மதத்தபற்றி நிறை தெரியும் போல இருக்கு அதான் கேக்குறன். எங்கட இந்து மதத்தில நிறையகடவுள்மார் இருக்கினமெல்லோ அதேனெண்டு சொல்லுங்கோவன். மற்ற கிறிஸ்து மதத்தில ஒண்டு இஸ்லாம் மதத்திலயும் ஒண்டுதானே ஏன் எங்கடேல மட்டும் கனபேர். ஏன் பிள்ளையாருக்கு தும்பிக்கை இருக்கெண்டுறத நானும் சின்னனில அம்மாட்ட கேட்டன் அவா சொல்லேல. உங்களுக்கு அதப்பத்தி கொஞ்சம் தெரிஞஇசா சொல்லுங்கவன். இன்னொண்டும் விளங்கேல கடவுளெல்லாரும் ரண்டு மனுசி வச்சிருக்கினமெல்லோ அதேன் ஆண் பெண் உறவெண்டேக்க கடவுளும் மனுசன் மாதிரி பிழை செய்யிறாரோ? எனக்கிதுக்கு கொஞ்சம் விளக்கபஇபடுத்தி விடுங்கோவன் என்ர இஞ்சத்த பிரண்ட்ஸ் சிவனெண்டால் ஏன் அவரிப்பிடி பிள்ளையாருக்கு ஏன் தும்பிக்கை இருக்கு அப்பிடி இப்பிடி நிறைய கேள்வி கேட்டவை. அவைக்கு விளக்கிறதுக்கு எனக்கு எப்பிடியெண்ட தெரியேல நீங்க சொல்லித்தந்தா பிரியோசனமா இருக்குமண்ணா - வியாசன் - 06-12-2005 மியாவ் சீ பூனைக்குட்டியாரே நீங்கள் என்னை தப்பாக நினைக்கின்றீர்கள். நான் ஒரு மதவெறியனல்ல. ஆனால் அதை முழுதாக நம்புகிறவனுமல்ல. ஆனால் நீங்கள் கேட்ட சிலவற்றுக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. மதத்தை நம்புகின்றவர்களை நான் நோகடிக்கவும் விரும்புவதில்லை. முதலாவதாக நீங்கள் கேட்ட கேள்வி நிறைய கடவுள்கள் ஏன்? அதுக்கு நீங்கள் கொஞ்சம் பதிலும் சொல்லியிருக்கின்றீர்கள் கிறிஸ்துவ மதம் ;யேசுவிலிருந்து உருவானது. ஆனால் நீங்கள் தேவாலயம் சென்றிருந்தால் பார்த்திருப்பீர்கள் அங்கேயும் கன்னிமரியாள் யேசுவினது இன்னும் பல சிலைகள் இருக்கும். மற்றது யேசுவினால் உருவான மதத்திலேயே எத்தனை பிரிவுகள் இருக்கின்றது? அதன் காரணம் என்னவாக இருக்கலாம் பூனைக்குட்டியாரோ? மனிதன் என்றும் ஒன்றில் திருப்தி அடைபவன் அல்ல. புதுப்புது ஆசைகள் அவனுக்கு உருவாகின்றது. அவர்களையும் திருப்தி அடைய வைக்கவேண்டி இருக்கின்றது. பூனையாரே உங்களுக்கு பசி எப்போதும் ஒரேமாதிரித்தானே இருக்கின்றது. அளவில் வித்தியாசப்படலாம் மற்றும்படி பசி ஒரே மாதிரித்தான். ஆனால் நீங்கள்(நாங்கள்)ஏன் விதவிதமாக சமைத்து சாப்பிடுகின்றீர்கள்? பசி எப்போதும் ஒரோமாதிரி இருக்கின்றது சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கலாம்தானே வீணாக ஏன் சிரமப்பட்டு வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க வேணும். அலுப்பு தட்டிவிடும் என்றுதானே? ஒரே கடவுளாக இருந்தால் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் வித்தியாசம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தால் ஏதோ ஒன்று ஒருவருக்கு பிடிக்கும் அதற்காகத்தான் என்று நினைக்கின்றேன். கடவுளையும் எங்களைப்போல உருவாக்கியிருந்தால் அதைப்பார்த்து ஒருவரும் பயப்பட மாட்டார்கள். அதனால்தான் மனிதர்கள் கடவுள்களை வித்தியாசமாக உருவாக்கியிருக்ககூடும். மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர மதம் உதவியிருக்கின்றது. சாமி தண்டனை தரும் என்ற பயம் மக்களை குற்றம் செய்யவிடாமல் வைத்திருக்கின்றது? மனிதன் தன்னிலிருந்து கடவுளை வேறுபடுத்த கடவுளுக்கு தும்பிக்கை அப்பிடி இப்பிடி பல உருங்களை உருவாக்கியிருக்கின்றான் என்பது எனது கருத்து நீங்கள் கடவுளை முழுமையாக நம்புகின்றவர்களை கேட்டால் அவர்கள் வேறு காரணம் சொல்வார்கள். ஒன்று மட்டும் தெரிகிறது மியாவ் அடுத்து இன்னொரு பெயரில் வந்து கடித்து குதற காத்திருக்கின்றீர்கள் . இதற்கு அஞ்சினால் நான் களத்துக்கு வந்திருக்கமாட்டன். உங்கள் கேள்வியை பார்த்தால் தெரியாமல் கேட்கின்ற மாதிரி இல்லை வில்லங்கமாக கேட்கின்றது தெரிகிறது. என்னைப் பொறுத்த வரையில் மதம் மக்களை நல்ல வழியில் கொண்டு செல்தற்காக உருவாக்கப்பட்டது. அதில் எந்த மதத்தில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றது என்பதைத்தான் கொண்டு எந்த மதம் சிறந்தது என்று பார்க்கமுடியும். மதம் ஒன்று உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். பெரும்பாலானோர் மறுபிறவியில் தண்டனை கிடைக்குமென்ற பயத்தில்தான் அநியாயங்களை செய்ய பயந்தனர் - kuruvikal - 06-12-2005 அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! இந்துமதம் வெறும் மனிசரைக் கும்பிடல்ல..இயற்கையை வணக்கத்தின் மூலம் பாதுகாக்க பரிகரிக்க வகை சொல்லுது...! யானைகள் இப்ப அழிஞ்சு வருகுது...அப்பவே இந்து மதம் கடவுளாக கடவுளின் வாகனக்களாக யானைகளை வனவிலங்குகளைபக் காட்டிப் பாதுகாக்க வகை சொல்லி இருக்குது....அதுபோல வீட்டில வளர்க்கிறதுகள பலியிடுவினம்...அதுவும் சூழல் சமனிலைக்கு முக்கியம்...வீட்டில வளர்க்கிறதுகள்...பராமரிப்பின் மூலம் எண்ணிக்கையில அதிகமாக சூழலில உயிரினச் சமனிலை குழம்பும்...அதைத் தடுக்க பலியிடல் அறிமுகமாக இருக்கும்.... பூனைக்குட்டி...உங்க நாட்டு பிரண்டட்டக் கேளுங்க.. அது ஏன் பெண்களை மட்டும் விளம்பரத்தில அதிகம் பயன்படுத்துறாங்க... விதம் விதமா.....காட்டுறாங்க...அரையும் குறையுமா...நிறையுமா,..என்று....அதுபோலத்தான் இந்துக்களும் கடவுளை விதம் விதமாக் காட்டி ஒரு விளம்பரத்தை அறிவூட்டலைச் செய்தாங்க...பாரம மக்களுக்கும் விளங்கத்தக்க வகையில...! மனிசர் ஆரம்பத்தில... விலங்காட்டம் வாழ்ந்தவை..(இப்பவும் மேற்கில வாழுதுகள் அதுபோல...) பிறகு பகுத்தறிவும் நாகரிகமும் வளர ஒரு சமூக ஒழுக்கத்தை உருவாக்கி கட்டுப்பாட்டோட பாதுகாப்பா வெற்றிகரமாக வாழப்பழகிச்சினம்...இருந்தாலும்... விலங்குகள் போல...வாழுற சனம் போல சிலதுகள் எப்பவும் பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காம வக்கிரத்துக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருந்திச்சுதுகளா...அதுகளுக்கு இதுதான் வக்கிரம்...இதைச் செய்தா இன்ன இன்ன தீமைகள் வரும் எண்டு சொல்லிச்சு இந்து மதம்...அதுகள் மதம் சொன்ன நல்லதை எடுக்காம..பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கப் பஞ்சியில பகுத்தறிவு எண்டு வக்கிரத்துக்கு வேலை கொடுக்குதுகள்...! அது இப்ப யாழ் களத்துக்கும் வந்திட்டு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 06-12-2005 viyasan Wrote:மியாவ் சீ பூனைக்குட்டியாரே நீங்கள் என்னை தப்பாக நினைக்கின்றீர்கள். நான் ஒரு மதவெறியனல்ல. ஆனால் அதை முழுதாக நம்புகிறவனுமல்ல. ஆனால் நீங்கள் கேட்ட சிலவற்றுக்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. மதத்தை நம்புகின்றவர்களை நான் நோகடிக்கவும் விரும்புவதில்லை. நன்றியண்ணா. கடவுள மனுசனே உருவாக்கினது. நீங்களேன் அப்பிடி சொல்றீங்கள்? மனுசன் பயப்பிடுறதுக்குத்தான் மனுசனே கடவள உருவாக்கினதெண்டு மனுசனுக்கு தெரியேக்க பிறகெதுக்கு அந்த கடவுள கும்பிடுகினமண்ணா? இப்ப நீங்கள் சொல்றீங்கள் தானே மனுசர் குற்றம் செய்யாமல் வச்சிருக்க கடவுள வித்தியாசமா பயங்கரமா செய்து வச்சிருக்கினம் மனுசரெண்டு அப்ப உங்களுக்கு இது தெரிஞஇச படியால் நீங்கள் தப்பு செய்யலாந்தானே? ஏன் அப்ப நீங்கள் செய்யலண்ணா? கடவுள் பயத்தால செய்யலயா அல்லாட்டி எதால நீங்கள் செய்யலண்ணா? எல்லா மதமும் மனுசருக்கு நல்ல கருத்த சொல்றதுக்கு தானெண்டால் பிறகெதுக்கு அந்த மதம் நல்ல மதம் இந்த மதத்தில கூடாது நிறைய இரக்கெண்ட சொல்லுறது? கிறிஸ்தவ மதத்திலயும் நிறைய கடவுள் இருக்கே அப்ப இஸ்லாத்திலயும் இருக்காண்ணா? - poonai_kuddy - 06-12-2005 kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! மிருகங்களுக்கு தீம செய்யாமல் அதுகள பாதுகாக்குறதுக்கு அப்ப மனுசன் கடவுளின்ர வாகனமா குடுத்து விளம்பரம் செஞ்செண்டு எழுதியிருக்கிறீங்கண்ணா. அப்ப கடவுள் மயிலுக்கு மேல ஏறி இருக்கிறதும், நாய்க்கு மேல ஏறி இருக்கிறதும் எலிக்கு மேல ஏறி இருக்கிறதும் மிருகத்த கொடுமை செய்யிறதுதானே அப்ப அதப் பார்த்து மனுசனும் செய்யலாந்தானே? கடவுள் மட்டுமேனண்ணா இன்னும் வளர்ச்சியடையேல அவற்ற கையில பழய மனுசன்ர அம்பும் வேலும் அதுகளுந்தானே இருக்கு இண்டைக்கு இருக்குற ஆயுதங்கள குடுத்து கடவுள இன்னுமு் பயங்கரமா மாத்தி மக்கள பயங்காட்டி விளம்பரப்படுத்தலாந்தானேயண்ணா - matharasi - 06-12-2005 poonai_kuddy Wrote:வியாசனண்ணா எனக்கொரு சந்தேகம் :roll: உங்களுக்கு இந்து மதத்தபற்றி நிறை தெரியும் போல இருக்கு அதான் கேக்குறன். எங்கட இந்து மதத்தில நிறையகடவுள்மார் இருக்கினமெல்லோ அதேனெண்டு சொல்லுங்கோவன். மற்ற கிறிஸ்து மதத்தில ஒண்டு இஸ்லாம் மதத்திலயும் ஒண்டுதானே ஏன் எங்கடேல மட்டும் கனபேர். ஏன் பிள்ளையாருக்கு தும்பிக்கை இருக்கெண்டுறத நானும் சின்னனில அம்மாட்ட கேட்டன் அவா சொல்லேல. உங்களுக்கு அதப்பத்தி கொஞ்சம் தெரிஞஇசா சொல்லுங்கவன். இன்னொண்டும் விளங்கேல கடவுளெல்லாரும் ரண்டு மனுசி வச்சிருக்கினமெல்லோ அதேன் ஆண் பெண் உறவெண்டேக்க கடவுளும் மனுசன் மாதிரி பிழை செய்யிறாரோ? எனக்கிதுக்கு கொஞ்சம் விளக்கபஇபடுத்தி விடுங்கோவன் என்ர இஞ்சத்த பிரண்ட்ஸ் சிவனெண்டால் ஏன் அவரிப்பிடி பிள்ளையாருக்கு ஏன் தும்பிக்கை இருக்கு அப்பிடி இப்பிடி நிறைய கேள்வி கேட்டவை. அவைக்கு விளக்கிறதுக்கு எனக்கு எப்பிடியெண்ட தெரியேல நீங்க சொல்லித்தந்தா பிரியோசனமா இருக்குமண்ணாபூனைக்குட்டி ...இங்கானை பைஸா இருந்துச்சுண்ணுதுன்னால் ஆளுங்க சந்தணமும் சவ்வாதுமாய் இருந்துக்கொண்டு ஒண்ணுக்கு இரண்டு வைச்சுக்கிறான்........சாமி எப்பேர் பட்ட ஆளு.. சாமி வைச்சுக்க கூடாதா.... சாமியை குறைச்க்காதையுங்க ....தெய்வ குத்தமாயிடும்...என்ன நான் சொல்லிறது....கரெக்ட்டுஙகளா... - Nitharsan - 06-12-2005 [quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>இந்த தலைப்பு தொடர்ந்து கள உறுப்பினர்களுக்கிடையேயான தனிப்பட்ட மோதலாக தொடர்வது வருத்தமளிக்கின்றது. அதனை நிறுத்தி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட வேறு விடயங்கள் குறித்து பேசலாமே :!: </span>அதை விட தனிப்பட்ட மதத்திற்கெதிரான ஒரு தலைபாக இருப்பதும் வருத்தமளிக்கிறது. இவர்கள் சொன்னவை சில வேளை உண்டமையாக இருக்குமா என்று சில இடங்களில் இந்து மத நூல்களை தேடிப்பபரர்த்தேன் இப்படியான வக்கிர சிந்தனையோடு எங்கும் இந்து சமயம் சார்ந்த புத்தகங்களே! இல்லை நண்பர் கிருபன் அல்லது அக்கட்டுரையை எழுதியவர் என்று கூறப்படுபவர் அப்படியான புத்தககங்கள் விபரங்களை தரமுடியுமா? குறிப்பு: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள் மட்டும் - kuruvikal - 06-12-2005 poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! மனிதன் சூழலில இருந்து தன்னைப் பாதுக்காக்க எப்பவோ ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிட்டான்...அதில பலவகை அடங்கும்...அதை அறிமுகம் செய்தாங்க மதத்தினூடாக எல்லா மக்களுக்கும்...! கடவுளை வாகனமாக்கினது ஏறிக் குந்த இல்ல...அந்தளவுக்கு அவை தோழமை மிக்கவையாகப் பார்க்கப்பட வேணும் எண்டதுக்காக...அதுமட்டுமல்லாமல்...கடவுள் சும்மா குந்தி இருக்கார்...வாகனங்கள் மேல...அதில ஒரு கடின தோலாலான போர்வை போர்த்தி பிரயோக்கும் விசையை பிரிச்சு...இருப்பதாகக் காட்டுவது...பெளதீகத்தைக் கூட இந்து மதம் அப்பவே சொல்லிட்டுது என்பதற்கு அர்த்தம்...! P/A F - விசை P - அமுக்கம் A - பரப்பு :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ![]() (தட்டச்சுத் தவறுகாரணமான தவறு திருத்தப்பட்டுள்து.. தவறை உடனடியான இனங்கண்டு திருத்தமுடியாத வகையில் வெளி அலுவல்கள் தடுத்துவிட்டன) |