![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- தூயவன் - 12-30-2005 வணக்கம் குறுக்ஸ் அச்சடிக்கும் இயந்திரமானால் என்ன?, தொலைக்காட்சியானால் என்ன காட்டிய ஆபாசங்கள் எதுவும் தீமைகள் தானே. அத் சீராழிவுக்கு உந்து சத்திக்கு கணினியும் சேர்ந்திருக்கின்றது. எனவே புகைப்பட உலகானலும், தொலைக்காட்சியானலும் எதுவும் நல்லது என்று யாரும் கூறவில்லை. அவையும் சீரழிவைத் தான் தந்தன. புகையிலை, சாராயத்துடன், போதைவஸ்து சேர்ந்தது போல. மேலும் நீர் கேட்ட எல்லாவற்றுக்கும் விவாதத்தில் பதில் தருவேன் - kurukaalapoovan - 12-30-2005 தூயவன் Wrote:வணக்கம் குறுக்ஸ் உதைத் தான் அப்பு நானும் சொல்லுறன். எப்படியான கண்டுபிடிப்புக்கள் முன்னேற்றங்கள் வந்தாலும் அதன் பயன்பாடு சார்ந்த நன்மை தீமை முற்று முழுதாக நுகர்வேரில் தான் தங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இணைய ஊடகம் ஒரு விதிவிலக்கல்ல பட்டிமன்றம் வைத்து விவாதிக்க. மனிதவரலாற்றில் இணையத்துக்கு முதல் வந்த பல் வேறு பட்ட ஊடக மற்றும் ஏனைய தொடர்பாடல்கள் வழிமுறைகள் எவ்வாறு நல்ல வழிகளிலும் தீயவழிகளிலும் பயன் பட்டதோ அதே போல்தான் இணைய ஊடகத்தின் பயன்பாட்டுச் சிறப்புக்களும் சீரழிவுகளும். றுவண்டாவில் வானொலி என்ற ஊடகத்தை கூற்று இனவாதிகள் ரூர்சு இன மக்கள் மீது காடைத்தனத்தை கட்டவிள்த்து விடப்பயன்படுத்தினார்கள். சர்வாதிகாரர்களின் நாடுகளில் வானொலி மாத்திரமல் பத்திரிகை, தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் மக்களை அடக்கி ஆளுவதற்கு ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த ஊடகங்கள் சீரழிவத்தான் தருகின்றது என்று அந்த நாட்டு மக்கள் பட்டி மன்றம் நடத்துறார்களா? திரைப்படத்தில் பைத்தியமாக இருப்பவர்கள் தொலைக்காட்சியிலும் அதைதான் பார்த்து ரசிக்கிறார்கள், வானொலியிலும் அதைத்தான் கேட்டு லயிக்கிறார்கள், பத்திரைகயிலும் சஞ்சிகைகளிலும் அதற்குரிய பகுதிகளில் தான் கவனம். இணையம் என்று இன்னொரு ஊடகத் தொடர்பாடல் வழி கிடைக்கும் போது இயற்கையாகவே தாம் பைத்தியமாக பலவீனமாக இருக்கும் விடையங்களிற்கு தான் பயன் படுத்துகிறார்கள். இந்த பலவீனம் பைத்தியத்தனம் என்பது புலத்திலுள்ள இளையவர்களுக்கு மாத்திரம் இல்லை. தொலைக்காட்சியில் பயனுள்ள விடையங்களை பார்த்து பயனடையும்; மனப்பக்குவம் கொண்டவர்கள் அதைத்தான் பத்திரிகை சஞ்சிகைகளிலும் வாசிக்கிறார்கள், வானொலியில் கேக்கிறார்கள், இணையம் என்று புதிய ஊடகத்திலும் தேடுகிறார்கள், விவாதிக்கிறார்கள் பரிமாறிக் கொள்கிறார்கள் தம்மை வளப்படுத்திக் கொள்கிறார்கள். -1- இங்கே இணை ஊடகம் என்ற இன்னொரு ஊடகம் என்ன வகையில் விதிவிலக்காக இருக்கிறது? -2- சமூதாய சமூக வர்க்கங்களில் ஏன் புலம் வாழ் தமிழ் இளைஞரும் யுவதிகளும் விசேடமாக விவாதிக்கப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்? என்பவற்றை விளக்கினால் நானும் பட்டிமன்றத்தில் இணைந்து கொள்கிறேன். :? - இளைஞன் - 12-30-2005 வணக்கம் குறுக்காலபோவான்... இது தான் பட்டிமன்றம். உங்கள் வாதங்கள் எல்லாம் நன்மையடைகிறார்கள் என்கிற அணிசார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே நன்மையடைகிறார்கள் என்கிற அணியில் சேர்ந்து உங்கள் கருத்தாடலைத் தொடரலாமே. மற்றது இரசிகைக்கு... நாம் சிறு பிழை ஒன்று விட்டுள்ளோம் எனன்று நினைக்கிறேன். புலம் என்பது தாயகத்தையே குறிக்கும். புலம்வாழ் இளைஞர்கள் என்பது எம்மைக் குறிக்காது. ஈழத்தில் வாழ்பவர்களையே குறிக்கும். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் என்பது தான் எம்மைக் குறிக்கும். முடிந்தால் தலைப்பில் இதை மாற்றவும். அதேபோல் புலம்வாழ், அல்லது புலத்து இளைஞர்கள் என்று தமது கருத்தாடலில் எழுதியவர்கள் அவற்றையும் திருத்த முயலுங்கள். இனி வருபவவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் அல்லது புகலிடத்தில் வாழ் இளைஞர்கள் என்றே எழுதுங்கள். நன்றி - kurukaalapoovan - 12-30-2005 சரியுங்கே உதுக்கு பெயர்தான் அது எண்டா நானும் வாறான். ஆனால் நன்மை அடைகிறார்கள் பக்கம் ஆக்கள் கூடிவிட்டுது. அங்காலையும் யாரும் பேனால் நல்லாய் இருக்கும். :roll: - kuruvikal - 12-30-2005 இளைஞன் Wrote:வணக்கம் குறுக்காலபோவான்... இதிலும் ஒரு தவறு இருக்கிறது ரசிகை. புலம்பெயர்ந்து வாழ் இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் இணையம் பாவிக்கினம். எனவே புலம் பெயர்ந்து வாழும் இளையோர் என்பதே சாலப் பொருத்தமாக இருக்கும். புலம் - இடம்/ தேசம் புலம் - மண்டலம் (காந்தப் புலம் - magnatic field) இதைவிட புலத்துக்கு வேறு பொருள் இருந்தாலும் அறியத்தாருங்கள். சில ஊடகங்களிலும் புலத்தமிழர்கள் என்று புலம்பெயர் தமிழர்களை குறிப்பிடினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 12-30-2005 இளைஞன் Wrote:மற்றது இரசிகைக்கு... இளைஞன் சொன்னதுபோல் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். கருத்து வைப்பவர்கள் கவனத்தில் கொள்ளவும். - Rasikai - 12-30-2005 kuruvikal Wrote:இதிலும் ஒரு தவறு இருக்கிறது ரசிகை. புலம்பெயர்ந்து வாழ் இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் இணையம் பாவிக்கினம். எனவே புலம் பெயர்ந்து வாழும் இளையோர் என்பதே சாலப் பொருத்தமாக இருக்கும். குருவிகள் இளைஞர்கள் என்று சொல்லும் போது ஆண்களும் பெண்களும் அடக்கம்தானே. இருந்தாலும் நாம் போட்ட தலைப்பு இதுதானே புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? - Rasikai - 12-30-2005 <b>ஆஹா அனித்தாவா என்னால் நம்ப முடியவில்லை மிக அழகாக தனது வாதத்தை வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!. நடுவர் தமிழினிக்கும் எனது பாராட்டுக்கள்</b> - இளைஞன் - 12-30-2005 புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது. இளைஞன் : ஆண்பால் இளைஞி: பெண்பால் இளைஞர் இளைஞர்கள்: பலர்பால் இளையோன் - தம்பி இளையாள் - தங்கை இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே? தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள். - Eelathirumagan - 12-30-2005 குருவிகளே. புலம் என்பதற்கு வயல் என்ற பதமும் இருப்பதாக ஞாபகம். மேலும் உயர் கணிதம் மற்றும் பொறியியலில் (vector and tensor fields, Einstein's gravitional field, etc) இவை வௌ;வேறு வியாக்கியானங்களை பெறுகின்றன. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 12-30-2005 kurukaalapoovan Wrote:சரியுங்கே உதுக்கு பெயர்தான் அது எண்டா நானும் வாறான். உங்களை நன்மை அணியில் இணைத்துள்ளேன் அத்துடன் சிறுமாற்றம் ரமாவை சீரழிகிறார்கள் என்ற அணிக்கு மாற்றியுள்ளேன். - AJeevan - 12-30-2005 ஆகா நம்ம அணித் தலைவர் இளைஞன் நறுக்கு தெறித்தது போல் அடுக்கிக் கொண்டு போகும் போதே மகிழ்வாக இருந்தது. அனித்தாவை நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை. போட்ட போடுல எதிரணித் தலைவர் சோழியன் காதை சொறியிறதை பார்த்து என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை. சும்மா சும்மா தரவுகளை எடுத்துக் கொடுத்து சுண்டல் பண்ண வச்சிட்டீங்க. மன்னிக்கவும் அடுத்து நம்ம பாட்டி வந்தா நீங்க <b>சுண்டல்</b>தான்? - kuruvikal - 12-31-2005 இளைஞன் Wrote:புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது. நன்றி இளைஞன்..! இளைஞி (என்பது தமிழ் இலக்கண மரபுக்குள் இல்லை) இளைஞன் - ஆண்பால் ( ஒருமை) யுவதி - பெண்பால் (ஒருமை) (இளம் பெண்களைக் குறிக்க வேறும் பதங்கள் இருக்கு) இளைஞர்கள் - ஆண்பால் (பன்மை) யுவதிகள் - (பெண்பால் பன்மை) இளையோர்- சிறுவர்கள் அடங்களாக இளையவர்களைக் குறிக்கும் வகையிலேயே பாவிககப்பட்டு வருகிறது. http://sooriyan.com/index.php?option=conte...d=1792&Itemid=1 மேலும் யாராவது.. இது குறித்து தெளிவுற அறிந்தவர்கள்.. தெளிவுபடுத்தினால் நல்லம். தவறான அர்த்தத்துடன் சொற்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க உதவியாக இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-31-2005 Eelathirumagan Wrote:குருவிகளே. நன்றி இளதிருமகன்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 12-31-2005 kurukaalapoovan Wrote:உதைத் தான் அப்பு நானும் சொல்லுறன். எப்படியான கண்டுபிடிப்புக்கள் முன்னேற்றங்கள் வந்தாலும் அதன் பயன்பாடு சார்ந்த நன்மை தீமை முற்று முழுதாக நுகர்வேரில் தான் தங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இணைய ஊடகம் ஒரு விதிவிலக்கல்ல பட்டிமன்றம் வைத்து விவாதிக்க. மனிதவரலாற்றில் இணையத்துக்கு முதல் வந்த பல் வேறு பட்ட ஊடக மற்றும் ஏனைய தொடர்பாடல்கள் வழிமுறைகள் எவ்வாறு நல்ல வழிகளிலும் தீயவழிகளிலும் பயன் பட்டதோ அதே போல்தான் இணைய ஊடகத்தின் பயன்பாட்டுச் சிறப்புக்களும் சீரழிவுகளும். :? உந்தக்கதை எல்லாம் வேண்டாம் உந்த தலைப்புக்குள்ளதானே உங்களுக்கு ஆப்பு இருக்கு... :wink: தலைப்புக்குள்ள இப்பவாவது கதையுங்கோவன்... இது பட்டி(:wink மண்றம் எல்லே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வர்ணன் - 12-31-2005 செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll: - Thala - 12-31-2005 varnan Wrote:செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll: இல்லை வர்ணன் பட்டிமற்றம் நடக்கட்டும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதத்தில் தானே இப்போ பட்டிமண்ற விவாதம் நடக்கிறது... அவர் வரும் போதுவாசித்து தீர்ப்பை அளிக்க வசதியாய் வேறு இருக்கும்.. அது வரை தமிழினி அக்கா தலைமை தாங்குவா தானே..??? :roll: :roll: :roll: - வர்ணன் - 12-31-2005 Thala Wrote:varnan Wrote:செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll: சரி தல அவர்களே 8) :roll: - kuruvikal - 12-31-2005 Thala Wrote:varnan Wrote:செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll: தல உங்கள் நிலைப்பாடுதான் குருவிகளினதும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 12-31-2005 kuruvikal Wrote:Thala Wrote:varnan Wrote:செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll: ஆமாம் வருணன் தல சொன்னமாதிரியே இருக்கட்டும். |